02-23-2006, 07:45 PM
நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இந்த நான்கு ஆண்டுகளில் சிவாவின் தாய் தந்தையரும் பிரான்சிற்கு வந்து சிவாவிற்கும் திருமணமாகி விட்டது. சிவாவும் முன்பு சிறியுடன் இருந்த வீட்டிற்கு அருகிலேயோ ஒரு வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தான். இந்த நான்கு ஆண்டில் இரண்டு மூன்று வாழ்த்து மட்டைகள் மட்டும் தனது முகவரியில்லாது சாந்தி சிவாவிற்கு அனுப்பியிருந்தாள். அதுவும் இப்போ கிட்டத்தட்ட ஒரு பத்து மாதங்களிற்கு மேலாக சிவாவிற்கு அவளது தொடர்புகள் ஏதுமற்றுபோய் விட்ட நிலையில் சிறி ஒருநாள் சிவாவிற்கு தொலை பேசியில் அழைத்தான்.
கலோ சிவா உனக்கொரு கடிதம் ஊரிலையிருந்து வந்திருக்கு கொண்டு வாறன் என்று சொல்லவும் சிவாவிற்கு மனதில் ஒரு மகிழ்ச்சி துள்ளல் எனக்கு ஊரிலையிருந்தெண்டால் சாந்தியாத்தான் இருக்கும். என்றுநினைத்தவாறு ஓம் கெதியா கொண்டுவா சாந்தியின்ரை கடிதமாதான் இருக்கும் என்று கூறவும் மறு முனையில் சிறி. இல்லையடா இது விலாசம் எழுதியிருக்கிறதை பாத்தால் சாந்தியின்ரை கையெளுத்து மாதிரி தெரியேல்லை எதுக்கும் கொண்டு வாறன் பார் என்றபடி தொலை பேசி இணைப்பை துண்டித்தான்.
சிவாவிற்கு ஒன்றுமே புரியவில்லை சாந்தியை தவிர எனக்கு வேறுயாரும் ஊரிலிருந்து கடிதம் போடுற அளவுக்கு வேண்டியவர்கள் இல்லையே எண்று யோசித்து கொண்டிருக்கும் போதே சிறி அங்கு வந்துவிட்டான். சிவா அவசரமாக அவனது கையிலிருந்த கடிதத்தை வாங்கி பிரிக்கவும் அந்த கடிதத்திலிருந்து ஒரு படம் கீழேவிழுந்தது அதை சிவா எடுத்து பார்த்தான். அந்த படத்தில் சாந்தி இராணுவ சீருடையில் ஒரு இயந்திர துப்பாக்கியை தோளில் சுமந்தபடி சிரித்து கொண்டு நின்றாள். படத்தை வைத்து விட்ட கடிதத்தை பக்கத்தில் நின்ற மனைவிக்கும் சிறிக்கும் கேட்கும்படியாய் உரத்து படிக்க தொடங்கினான்.
அன்புடன் தம்பி சிவாவிற்கு
சாந்தியின் தந்தை தம்பையா எழுதிக்கொள்வது தம்பி சாந்தி இங்கு வந்து உங்களைப்பற்றி நிறையவே சொன்னார் ஏதோ ஒரு தேசத்தில் யாரையுமே தெரியாத இடத்தில் நீங்கள் செய்த உதவிகள் கடவுளே நேரே வந்து செய்ததற்கு சமமாகும்.எங்களிற்கும் சாந்திக்கு உங்களைப்போல ஒரு கணவர் கிடைத்திருந்தால் அவளது வாழ்க்கையே வேறு மாதிரி போயிருக்கலாம் . ஆனால் என்ன செய்வது எல்லாம் விதி.
நாங்கள் ஏற்கனவே அவளது வாழ்க்கை முடிவுகளை நாங்களே எடுத்து எல்லாமே தவறாகி போனதால் பின்னர் அவளது முடிவுகளை அவளே எடுக்கட்டும் நாங்கள் எதுவும் சொல்வதில்லையென்கிற முடிவை எடுத்தேன்.அவளும் போராட்டத்தில் தன்னை இணைத்து போராளியாகி போய் விட்டாள். இடையிடையே எப்போதாவது என்னை பார்க்க வருவாள். அப்படித்தான் போனமாதம் என்னிடம் வந்த போது உங்கள் விலாசத்தையும் மற்றும் இதனுடன் இணைத்திருக்கும் தனது படத்தையும் என்னிடம் தந்து தான் சில பணிகளையயேற்று யுத்தகளம் செல்வதாகவும் சிலவேளை தான் உயிருடன் திரும்பி வராது போனால் உங்களிற்கு இந்த படத்தையும் அனுப்பி தனது மரணசெய்தியும் அறிவிக்கசொல்லி சென்றுவிட்டாள்.
அவள் போன சில நாட்களிலேயே ஒயாத அலை இரண்டு சமரில் இறந்து விட்டதாக அவளது மரணசெய்தி எனக்கு வந்தது. எங்களிற்கு இங்கு மரணங்களும் இழப்புக்களும் ஒன்றும் புதிய விடயங்கள் அல்ல ஆனாலும் எனது மகள்தானே அவள் உடலை கூட எனக்கு பார்க்க கிடைக்கவில்லை. நான் இடம் மாறி கொண்டடேயிருந்ததால் அவர்களால் என்னை தேடிப்பிடித்து செய்தி சொல்ல முடியவில்லை இறுதியில் தகவல் கிடைத்ததும் அவளுடல்விதைக்கப்பட்ட முல்லைத்தீவு புது குடியிருப்பு மாவீரர் துயிலுமில்லத்தில் போய் புரண்டு அழுது விட்டு வந்தேன்.
அவள் உங்களிற்கு அனுப்பசொல்லி தந்த அவளது படத்தை உங்களிற்கு அனுப்பியிருக்கிறேன் இப்பே எங்களிடம் மிஞ்சி நிப்பது அவளது ஞாபகங்கள் மட்டும்தான் அவளது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக
இப்படிக்கு தம்பையா
கடிதத்தை படித்து முடித்துவிட்டு சிவா மனைவியையும் சிறியையும் மாறி மாறி பார்த்தான் மூவரிடையேயும் ஒருவிதமொனம். சிறி செருமியவாறு சரியடா போராட்டம் என்டால் இழப்புகள் இருக்கதான் செய்யும் அது எங்களுக்கு அல்லது எங்களுக்கு தெரிஞ்ச ஆக்கள் எண்டு வரேக்கை தான் எங்களுக்கு அந்த பாதிப்பு தெரியிது. சாந்தியை மாதிரி எத்தனையாயிரம்பேர். எண்டைக்காவது இதுக்கு ஒரு முடிவு வரும்தானே அதுவரை ஏதோ எங்களாலை முடிஞ்சதை செய்வம். சரியடா சிவா இந்த படத்திலை எனக்கும் ஒரு கொப்பியொண்ட எடுத்து தா எனக்கு வேலைக்கு நேரமாச்சு போட்டு வாறன் என்று சிறி அங்கிருந்து போய்விட சாந்தியின் படத்தையே உற்று பார்த்தபடி சிவா இருந்தான்.
சாந்தி அவனுக்கு எழுதிய கடிதத்தின் கடைசி வரிகள் அவனிற்கு ஞாபகத்தில்அடுத்தடுத்து வந்து கொண்டேயிருந்தது. உங்கள் வரவை எதிர்பார்த்து உயிருடனோ அல்லது இந்த தேசத்திற்காய் உயிர்விட்ட ஆயிரமாயிரம் மாவீரர்களின் கல்லறைகளினுடே ஒரு கல்லறையாகவோ காத்திருப்பேன்
முடிந்துவிட்டது
மேலதிகமாக சில குறிப்பக்கள் சமாதான காலத்தில் சிவா தனது மனைவி பிள்ளையுடன் முல்லைதீவிலுள்ள மாவீரர் துயிலுமில்லத்திற்கு போய் சாந்தியின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தான்.அவளது முன்னாள் கணவன் ரவி தண்டனை முடிவடைந்து வெளியில்வந்து மீண்டும் போதைக்கு அடிமையாகி பாரீசின் நிலத்தடி ரயில் நிலையங்களில் படுத்துறங்கி வழியால் போவோர் வருவோரிடம் பணம் கேட்டு (பிச்சையெடுத்து) கொண்டு இருந்ததாக அறிந்தேன் அதுவும் இப்போ பலகாலமாக அவனைப்பற்றிய தகவல்களும் இல்லை. இக்கதையில் வருகின்ற சிவாவும் சிறியும் எனது ஊர் நண்பர்கள் அவர்களிடம் போய் வரும்பொழுது சாந்தியை நானும் சில தடைவைகள் சந்தித்து கதைக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது அவருக்கு எனது வீர வணக்கங்கள் தெரிவித்து கொண்டு இக்தையை முடிக்கிறேன் உறவுகளே இனி உங்கள் விமர்சனங்களை வையுங்கள் அடுத்த கதையில் சந்திப்போம்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கலோ சிவா உனக்கொரு கடிதம் ஊரிலையிருந்து வந்திருக்கு கொண்டு வாறன் என்று சொல்லவும் சிவாவிற்கு மனதில் ஒரு மகிழ்ச்சி துள்ளல் எனக்கு ஊரிலையிருந்தெண்டால் சாந்தியாத்தான் இருக்கும். என்றுநினைத்தவாறு ஓம் கெதியா கொண்டுவா சாந்தியின்ரை கடிதமாதான் இருக்கும் என்று கூறவும் மறு முனையில் சிறி. இல்லையடா இது விலாசம் எழுதியிருக்கிறதை பாத்தால் சாந்தியின்ரை கையெளுத்து மாதிரி தெரியேல்லை எதுக்கும் கொண்டு வாறன் பார் என்றபடி தொலை பேசி இணைப்பை துண்டித்தான்.
சிவாவிற்கு ஒன்றுமே புரியவில்லை சாந்தியை தவிர எனக்கு வேறுயாரும் ஊரிலிருந்து கடிதம் போடுற அளவுக்கு வேண்டியவர்கள் இல்லையே எண்று யோசித்து கொண்டிருக்கும் போதே சிறி அங்கு வந்துவிட்டான். சிவா அவசரமாக அவனது கையிலிருந்த கடிதத்தை வாங்கி பிரிக்கவும் அந்த கடிதத்திலிருந்து ஒரு படம் கீழேவிழுந்தது அதை சிவா எடுத்து பார்த்தான். அந்த படத்தில் சாந்தி இராணுவ சீருடையில் ஒரு இயந்திர துப்பாக்கியை தோளில் சுமந்தபடி சிரித்து கொண்டு நின்றாள். படத்தை வைத்து விட்ட கடிதத்தை பக்கத்தில் நின்ற மனைவிக்கும் சிறிக்கும் கேட்கும்படியாய் உரத்து படிக்க தொடங்கினான்.
அன்புடன் தம்பி சிவாவிற்கு
சாந்தியின் தந்தை தம்பையா எழுதிக்கொள்வது தம்பி சாந்தி இங்கு வந்து உங்களைப்பற்றி நிறையவே சொன்னார் ஏதோ ஒரு தேசத்தில் யாரையுமே தெரியாத இடத்தில் நீங்கள் செய்த உதவிகள் கடவுளே நேரே வந்து செய்ததற்கு சமமாகும்.எங்களிற்கும் சாந்திக்கு உங்களைப்போல ஒரு கணவர் கிடைத்திருந்தால் அவளது வாழ்க்கையே வேறு மாதிரி போயிருக்கலாம் . ஆனால் என்ன செய்வது எல்லாம் விதி.
நாங்கள் ஏற்கனவே அவளது வாழ்க்கை முடிவுகளை நாங்களே எடுத்து எல்லாமே தவறாகி போனதால் பின்னர் அவளது முடிவுகளை அவளே எடுக்கட்டும் நாங்கள் எதுவும் சொல்வதில்லையென்கிற முடிவை எடுத்தேன்.அவளும் போராட்டத்தில் தன்னை இணைத்து போராளியாகி போய் விட்டாள். இடையிடையே எப்போதாவது என்னை பார்க்க வருவாள். அப்படித்தான் போனமாதம் என்னிடம் வந்த போது உங்கள் விலாசத்தையும் மற்றும் இதனுடன் இணைத்திருக்கும் தனது படத்தையும் என்னிடம் தந்து தான் சில பணிகளையயேற்று யுத்தகளம் செல்வதாகவும் சிலவேளை தான் உயிருடன் திரும்பி வராது போனால் உங்களிற்கு இந்த படத்தையும் அனுப்பி தனது மரணசெய்தியும் அறிவிக்கசொல்லி சென்றுவிட்டாள்.
அவள் போன சில நாட்களிலேயே ஒயாத அலை இரண்டு சமரில் இறந்து விட்டதாக அவளது மரணசெய்தி எனக்கு வந்தது. எங்களிற்கு இங்கு மரணங்களும் இழப்புக்களும் ஒன்றும் புதிய விடயங்கள் அல்ல ஆனாலும் எனது மகள்தானே அவள் உடலை கூட எனக்கு பார்க்க கிடைக்கவில்லை. நான் இடம் மாறி கொண்டடேயிருந்ததால் அவர்களால் என்னை தேடிப்பிடித்து செய்தி சொல்ல முடியவில்லை இறுதியில் தகவல் கிடைத்ததும் அவளுடல்விதைக்கப்பட்ட முல்லைத்தீவு புது குடியிருப்பு மாவீரர் துயிலுமில்லத்தில் போய் புரண்டு அழுது விட்டு வந்தேன்.
அவள் உங்களிற்கு அனுப்பசொல்லி தந்த அவளது படத்தை உங்களிற்கு அனுப்பியிருக்கிறேன் இப்பே எங்களிடம் மிஞ்சி நிப்பது அவளது ஞாபகங்கள் மட்டும்தான் அவளது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக
இப்படிக்கு தம்பையா
கடிதத்தை படித்து முடித்துவிட்டு சிவா மனைவியையும் சிறியையும் மாறி மாறி பார்த்தான் மூவரிடையேயும் ஒருவிதமொனம். சிறி செருமியவாறு சரியடா போராட்டம் என்டால் இழப்புகள் இருக்கதான் செய்யும் அது எங்களுக்கு அல்லது எங்களுக்கு தெரிஞ்ச ஆக்கள் எண்டு வரேக்கை தான் எங்களுக்கு அந்த பாதிப்பு தெரியிது. சாந்தியை மாதிரி எத்தனையாயிரம்பேர். எண்டைக்காவது இதுக்கு ஒரு முடிவு வரும்தானே அதுவரை ஏதோ எங்களாலை முடிஞ்சதை செய்வம். சரியடா சிவா இந்த படத்திலை எனக்கும் ஒரு கொப்பியொண்ட எடுத்து தா எனக்கு வேலைக்கு நேரமாச்சு போட்டு வாறன் என்று சிறி அங்கிருந்து போய்விட சாந்தியின் படத்தையே உற்று பார்த்தபடி சிவா இருந்தான்.
சாந்தி அவனுக்கு எழுதிய கடிதத்தின் கடைசி வரிகள் அவனிற்கு ஞாபகத்தில்அடுத்தடுத்து வந்து கொண்டேயிருந்தது. உங்கள் வரவை எதிர்பார்த்து உயிருடனோ அல்லது இந்த தேசத்திற்காய் உயிர்விட்ட ஆயிரமாயிரம் மாவீரர்களின் கல்லறைகளினுடே ஒரு கல்லறையாகவோ காத்திருப்பேன்
முடிந்துவிட்டது
மேலதிகமாக சில குறிப்பக்கள் சமாதான காலத்தில் சிவா தனது மனைவி பிள்ளையுடன் முல்லைதீவிலுள்ள மாவீரர் துயிலுமில்லத்திற்கு போய் சாந்தியின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தான்.அவளது முன்னாள் கணவன் ரவி தண்டனை முடிவடைந்து வெளியில்வந்து மீண்டும் போதைக்கு அடிமையாகி பாரீசின் நிலத்தடி ரயில் நிலையங்களில் படுத்துறங்கி வழியால் போவோர் வருவோரிடம் பணம் கேட்டு (பிச்சையெடுத்து) கொண்டு இருந்ததாக அறிந்தேன் அதுவும் இப்போ பலகாலமாக அவனைப்பற்றிய தகவல்களும் இல்லை. இக்கதையில் வருகின்ற சிவாவும் சிறியும் எனது ஊர் நண்பர்கள் அவர்களிடம் போய் வரும்பொழுது சாந்தியை நானும் சில தடைவைகள் சந்தித்து கதைக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது அவருக்கு எனது வீர வணக்கங்கள் தெரிவித்து கொண்டு இக்தையை முடிக்கிறேன் உறவுகளே இனி உங்கள் விமர்சனங்களை வையுங்கள் அடுத்த கதையில் சந்திப்போம்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

