02-23-2006, 06:47 PM
எம்மிடம் தஞ்சம் கோரி வரும் சிறுவர்களுக்கு தஞ்சமும் பாதுகாப்பும் அளிக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு: அரசியல்துறை பொறுப்பாளர் ஜெனீவாவில் உரை
தமிழர் தாயகத்தின் இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் இளம் சிறார்கள் இராணுவ வன்முறைகளுக்கு அஞ்சி அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி எமது அமைப்பிடம் தஞ்சம் கோரி வந்தவண்ணமுள்ளனர். அவர்களுக்கு தஞ்சமும் பாதுகாப்பும் அளிக்க வேண்டிய தேவை ஓர் பொறுப்புள்ள விடுதலை இயக்கம் என்ற வகையில் எமக்கு உண்டு. இவ்வாறு தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வடக்கு கிழக்கில் சிறுவர் நிலைபற்றிப் பேச்சுவார்த்தை மேசையில் ஆற்றிய உரையின் போது தெரிவித்திருக்கின்றார்.
வடக்கு கிழக்கில் சிறுவர் நிலைபற்றிப் பேச்சுவார்த்தை மேசையில் திரு. தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
வயது குறைந்த சிறுவர்களை விடுதலைப்புலிகள் தமது அமைப்பில் சேர்த்துக் கொள்ளல் தொடர்பாக எழும் குற்றச்சாட்டுக்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் நேரடித் தொடர்பற்றவையாயினும் கூட இரண்டு தசாப்த யுத்தத்தினாலும் சிறுவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படும் சூழலினாலும் இந்த விடயம் குறித்து ஒப்பந்த அமுலாக்கல் பற்றிப் பேசும் சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது அவசியமான தேவையாகிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்து 4 வருடங்கள் கடந்த நிலையிலும் 20 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் இயல்பு நிலை தோன்றாத சூழலில் யுத்தத்தால் பெற்றோர் கொல்லப்பட்டு பாடசாலைகளும் வணக்கத் தலங்களும் அரச படைகளின் குண்டு வீச்சுக்கு இலக்காகி ஆயிரக்கணககான பிள்ளைகள் பெற்றோரை இழந்து ஏதிலிகளாக்கப்பட்டனர். இந்த அவலநிலையை குழந்தைகளின் நலன்களில் கரிசனை காட்டும் அரச தூதுக்குழுவினர் அந்தந்த இடங்களை நேரில் சென்று பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.
அண்மையில் திருகோணமலையில் அரச படைகளால் மிகவும் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்கள் பற்றியும் கொடிகாமம் வரணியில் தாய் தந்தையோடு உறங்கிக்கொண்டிருந்த 15 வயதுச் சிறுவன் கதறக் கதற சிறிலங்காப் படைகளால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பேராசிரியர்கள் உபவேந்தர் உட்படப் பலர் மிகமோசமான முறையில் தாக்கப்பட்டமை போன்ற சம்பவங்களும் சுட்டிக் காட்டப்பட்டது.
அத்துடன் உங்களுடைய அரசாங்கத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலைகளாலும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களாலும் குறிப்பாகப் பாடசாலைகள் ஆலயங்கள் குடியிருப்புக்கள் மீதான தாக்குதல்களாலும் எமது பல்லாயிரக் கணக்கான சிறுவர்கள் கொல்லப்பட்டமையையும் பெற்றோர் மற்றும் உறவினரை இழந்த ஆயிரக்கணக்கான சிறுவர்களை எமது அமைப்புப் பொறுப்பேற்றுப் புனர்வாழ்வளித்துப் பராமரித்து வருவதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தமிழர் தாயகத்தின் இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் இளம் சிறார்கள் இராணுவ வன்முறைகளுக்கு அஞ்சி அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி எமது அமைப்பிடம் தஞ்சம் கோரி வந்தவண்ணமுள்ளனர். அவர்களுக்கு தஞ்சமும் பாதுகாப்பும் அளிக்க வேண்டிய தேவை ஓர் பொறுப்புள்ள விடுதலை இயக்கம் என்ற வகையில் எமக்கு உண்டு. இத்தேவையை நிறைவேற்றுவதற்காக ஆயிரக்கணக்கான சிறார்களை அவர்களுக்காக அமைக்கப்பட்ட இல்லங்களில் பாதுகாப்பாகத் தங்க வைத்து கல்வி தேவைப்படும் இடத்தில் தொழில்கல்வி என்பவற்றை எமது அமைப்பு வழங்கிக்கொண்டிருக்கிறது.
இந்த உண்மைகளை நேரில் பார்த்து நிலமைகளை சீர்செய்வதை விடுத்து சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகள் வயது குறைந்தோரைப் படையில் சேர்க்கிறார்கள் என்று தவறான பரப்புரையைச் செய்துவருகிறது. சிறுவர் நலன் தொடர்பாக நாங்கள் ருNஐஊநுகு அமைப்புடன் ஒரு வேலைத்திட்டத்தை ஒழுங்கமைத்து செயற்பட்டு வருகிறோம். இதற்கென சமாதான செயலகத்தின் அனுசரணையுடன் விசேட செயற்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
ருNஐஊநுகு இன் அறிக்கைகளில் எண்ணிக்கை தொடர்பான தவறுகள் இருப்பதை பல தடவைகளில் நாம் சுட்டிக்காட்ட நேர்ந்தது. அத்துடன் வயது குறைந்தோர் என்று இனங்காணப்பட்டவர்கள் காலத்திற்குக் காலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவது இந்த எண்ணிக்கைகளில் பிரதிபலிக்கப்படாமல் இருப்பது குறித்து சுட்டிக்காட்டப்பட்டபொழுது ருNஐஊநுகு அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.
நான்கு வருடங்களாகியும் சமாதானத்தின் பெறுபேறுகள் மக்களைச் சென்றடையாத நிலையில் வறுமை பெற்றோரின்மை வேலை வாய்ப்பின்மை சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாதவை போன்றவை சிறுவர்களைத் தொடர்ந்தும் பாதிக்கும் காரணிகளாகவுள்ளன. இராணுவ ஆக்கிரமிப்பிற்குட்பட்ட பிரதேசங்களில் பாடசாலைச் சிறுவர்கள் இராணுவ சோதனைக் கெடுபிடிகளுக்குட்பட்டே அன்றாடம் பாடசாலை செல்லும்நிலை இருப்பதும் சுற்றிவளைப்புக்களால் ஏற்படும் பீதியும் சிறுவர்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி எமது நிர்வாகப் பிரதேசத்தினுள் வருவதற்கு நிர்ப்பந்திக்கின்றன.
வயது குறைந்தோரை அமைப்பில் சேர்ப்பது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் கிழக்கு மாகாணத்திலேயே பெருமளவில் இருந்தன. தவறான நடவடிக்கைகளுக்காக எமது அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணாவின் காலத்தில் தலைமைப்பீடத்தின் கொள்கைக்கு மாறாக பலவந்தமாகச் சேர்க்கப்பட்ட 2000 இற்கு மேலான வயது குறைந்த சிறார்கள் பெற்றோரிடம் சேர்க்கப்பட்டனர். இது எமது அமைப்பு சிறுவர் ஆட்சேர்ப்புத் தொடர்பாகக் கடைப்பிடிக்கும் சர்வதேசக் கோட்பாட்டு நியமங்களை மதிப்பதென்ற நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் ஓர் அம்சமெனலாம்.
அண்மை நாட்களில் அரச படைகளுடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினர் பலவந்தமாகக் கடத்திச் சென்று ஆயதப் பயிற்சி கொடுத்த 14 15 16 வயதுச் சிறுவர்கள் சிறிலங்கா இராணுவ முகாம்களில் தமக்குப் பயிற்சியளிக்கப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளனர். போரில் சிறுவர்களைப் பயன்படுத்துவது தொடர்பான சர்வதேச நியமங்களை நாம் மதிக்கும் அதேவேளை போரினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்குக் கல்வி பெற்றோரின் வாழ்வுநிலை உயர்வு போசாக்கு சுகாதாரம் போன்றவற்றில் உண்மையான அக்கறையுடன் செயற்படுவது அவசியமேயன்றி சிறுவர் பிரச்சினையை அரசியலாக்கி விவாதம் செய்வது பொருத்தமற்றது.
யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் எந்தவொரு சரத்துமே படைக்கு ஆட்சேர்ப்பதைத் தடைசெய்யாத நிலையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் ஆணை வரையறைக்குள் இந்த விடயம் பிரச்சினைக்குரியதாகாது. மாறாக சிறுவர் தொடர்பான முறைப்பாடு வரும் சந்தர்ப்பங்களில் அதற்கெனப் பணிபுரியும் ருNஐஊநுகு அமைப்பிடமும் எமது அமைப்பிடமும் சமர்ப்பிப்பதே பொருத்தமானதாகும்.
சிறுவர்கள் தொடர்பான கரிசனை உள்ளவர்கள் வடக்குக் கிழக்கையும் விடுதலைப்புலிகள் அமைப்பையும் தெரிவு செய்து விமர்சனத்திற்குள்ளாக்குவதைவிடுத்து தெற்கில் மிகப் பாரிய அளவில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் அடிமை வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுவதையும் கருத்திற்கொண்டு பாரபட்சமற்ற முறையில் விமர்சனம் செய்வதே சிறுவர்களுக்கு ஆற்றும் நற்பணியாகும்.
லங்காசிறி
தமிழர் தாயகத்தின் இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் இளம் சிறார்கள் இராணுவ வன்முறைகளுக்கு அஞ்சி அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி எமது அமைப்பிடம் தஞ்சம் கோரி வந்தவண்ணமுள்ளனர். அவர்களுக்கு தஞ்சமும் பாதுகாப்பும் அளிக்க வேண்டிய தேவை ஓர் பொறுப்புள்ள விடுதலை இயக்கம் என்ற வகையில் எமக்கு உண்டு. இவ்வாறு தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வடக்கு கிழக்கில் சிறுவர் நிலைபற்றிப் பேச்சுவார்த்தை மேசையில் ஆற்றிய உரையின் போது தெரிவித்திருக்கின்றார்.
வடக்கு கிழக்கில் சிறுவர் நிலைபற்றிப் பேச்சுவார்த்தை மேசையில் திரு. தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-
வயது குறைந்த சிறுவர்களை விடுதலைப்புலிகள் தமது அமைப்பில் சேர்த்துக் கொள்ளல் தொடர்பாக எழும் குற்றச்சாட்டுக்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் நேரடித் தொடர்பற்றவையாயினும் கூட இரண்டு தசாப்த யுத்தத்தினாலும் சிறுவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படும் சூழலினாலும் இந்த விடயம் குறித்து ஒப்பந்த அமுலாக்கல் பற்றிப் பேசும் சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது அவசியமான தேவையாகிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்து 4 வருடங்கள் கடந்த நிலையிலும் 20 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் இயல்பு நிலை தோன்றாத சூழலில் யுத்தத்தால் பெற்றோர் கொல்லப்பட்டு பாடசாலைகளும் வணக்கத் தலங்களும் அரச படைகளின் குண்டு வீச்சுக்கு இலக்காகி ஆயிரக்கணககான பிள்ளைகள் பெற்றோரை இழந்து ஏதிலிகளாக்கப்பட்டனர். இந்த அவலநிலையை குழந்தைகளின் நலன்களில் கரிசனை காட்டும் அரச தூதுக்குழுவினர் அந்தந்த இடங்களை நேரில் சென்று பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும்.
அண்மையில் திருகோணமலையில் அரச படைகளால் மிகவும் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்கள் பற்றியும் கொடிகாமம் வரணியில் தாய் தந்தையோடு உறங்கிக்கொண்டிருந்த 15 வயதுச் சிறுவன் கதறக் கதற சிறிலங்காப் படைகளால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பேராசிரியர்கள் உபவேந்தர் உட்படப் பலர் மிகமோசமான முறையில் தாக்கப்பட்டமை போன்ற சம்பவங்களும் சுட்டிக் காட்டப்பட்டது.
அத்துடன் உங்களுடைய அரசாங்கத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனப்படுகொலைகளாலும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களாலும் குறிப்பாகப் பாடசாலைகள் ஆலயங்கள் குடியிருப்புக்கள் மீதான தாக்குதல்களாலும் எமது பல்லாயிரக் கணக்கான சிறுவர்கள் கொல்லப்பட்டமையையும் பெற்றோர் மற்றும் உறவினரை இழந்த ஆயிரக்கணக்கான சிறுவர்களை எமது அமைப்புப் பொறுப்பேற்றுப் புனர்வாழ்வளித்துப் பராமரித்து வருவதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தமிழர் தாயகத்தின் இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் இளம் சிறார்கள் இராணுவ வன்முறைகளுக்கு அஞ்சி அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி எமது அமைப்பிடம் தஞ்சம் கோரி வந்தவண்ணமுள்ளனர். அவர்களுக்கு தஞ்சமும் பாதுகாப்பும் அளிக்க வேண்டிய தேவை ஓர் பொறுப்புள்ள விடுதலை இயக்கம் என்ற வகையில் எமக்கு உண்டு. இத்தேவையை நிறைவேற்றுவதற்காக ஆயிரக்கணக்கான சிறார்களை அவர்களுக்காக அமைக்கப்பட்ட இல்லங்களில் பாதுகாப்பாகத் தங்க வைத்து கல்வி தேவைப்படும் இடத்தில் தொழில்கல்வி என்பவற்றை எமது அமைப்பு வழங்கிக்கொண்டிருக்கிறது.
இந்த உண்மைகளை நேரில் பார்த்து நிலமைகளை சீர்செய்வதை விடுத்து சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகள் வயது குறைந்தோரைப் படையில் சேர்க்கிறார்கள் என்று தவறான பரப்புரையைச் செய்துவருகிறது. சிறுவர் நலன் தொடர்பாக நாங்கள் ருNஐஊநுகு அமைப்புடன் ஒரு வேலைத்திட்டத்தை ஒழுங்கமைத்து செயற்பட்டு வருகிறோம். இதற்கென சமாதான செயலகத்தின் அனுசரணையுடன் விசேட செயற்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
ருNஐஊநுகு இன் அறிக்கைகளில் எண்ணிக்கை தொடர்பான தவறுகள் இருப்பதை பல தடவைகளில் நாம் சுட்டிக்காட்ட நேர்ந்தது. அத்துடன் வயது குறைந்தோர் என்று இனங்காணப்பட்டவர்கள் காலத்திற்குக் காலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவது இந்த எண்ணிக்கைகளில் பிரதிபலிக்கப்படாமல் இருப்பது குறித்து சுட்டிக்காட்டப்பட்டபொழுது ருNஐஊநுகு அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.
நான்கு வருடங்களாகியும் சமாதானத்தின் பெறுபேறுகள் மக்களைச் சென்றடையாத நிலையில் வறுமை பெற்றோரின்மை வேலை வாய்ப்பின்மை சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாதவை போன்றவை சிறுவர்களைத் தொடர்ந்தும் பாதிக்கும் காரணிகளாகவுள்ளன. இராணுவ ஆக்கிரமிப்பிற்குட்பட்ட பிரதேசங்களில் பாடசாலைச் சிறுவர்கள் இராணுவ சோதனைக் கெடுபிடிகளுக்குட்பட்டே அன்றாடம் பாடசாலை செல்லும்நிலை இருப்பதும் சுற்றிவளைப்புக்களால் ஏற்படும் பீதியும் சிறுவர்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறி எமது நிர்வாகப் பிரதேசத்தினுள் வருவதற்கு நிர்ப்பந்திக்கின்றன.
வயது குறைந்தோரை அமைப்பில் சேர்ப்பது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் கிழக்கு மாகாணத்திலேயே பெருமளவில் இருந்தன. தவறான நடவடிக்கைகளுக்காக எமது அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணாவின் காலத்தில் தலைமைப்பீடத்தின் கொள்கைக்கு மாறாக பலவந்தமாகச் சேர்க்கப்பட்ட 2000 இற்கு மேலான வயது குறைந்த சிறார்கள் பெற்றோரிடம் சேர்க்கப்பட்டனர். இது எமது அமைப்பு சிறுவர் ஆட்சேர்ப்புத் தொடர்பாகக் கடைப்பிடிக்கும் சர்வதேசக் கோட்பாட்டு நியமங்களை மதிப்பதென்ற நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் ஓர் அம்சமெனலாம்.
அண்மை நாட்களில் அரச படைகளுடன் சேர்ந்தியங்கும் கருணா குழுவினர் பலவந்தமாகக் கடத்திச் சென்று ஆயதப் பயிற்சி கொடுத்த 14 15 16 வயதுச் சிறுவர்கள் சிறிலங்கா இராணுவ முகாம்களில் தமக்குப் பயிற்சியளிக்கப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளனர். போரில் சிறுவர்களைப் பயன்படுத்துவது தொடர்பான சர்வதேச நியமங்களை நாம் மதிக்கும் அதேவேளை போரினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்குக் கல்வி பெற்றோரின் வாழ்வுநிலை உயர்வு போசாக்கு சுகாதாரம் போன்றவற்றில் உண்மையான அக்கறையுடன் செயற்படுவது அவசியமேயன்றி சிறுவர் பிரச்சினையை அரசியலாக்கி விவாதம் செய்வது பொருத்தமற்றது.
யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் எந்தவொரு சரத்துமே படைக்கு ஆட்சேர்ப்பதைத் தடைசெய்யாத நிலையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் ஆணை வரையறைக்குள் இந்த விடயம் பிரச்சினைக்குரியதாகாது. மாறாக சிறுவர் தொடர்பான முறைப்பாடு வரும் சந்தர்ப்பங்களில் அதற்கெனப் பணிபுரியும் ருNஐஊநுகு அமைப்பிடமும் எமது அமைப்பிடமும் சமர்ப்பிப்பதே பொருத்தமானதாகும்.
சிறுவர்கள் தொடர்பான கரிசனை உள்ளவர்கள் வடக்குக் கிழக்கையும் விடுதலைப்புலிகள் அமைப்பையும் தெரிவு செய்து விமர்சனத்திற்குள்ளாக்குவதைவிடுத்து தெற்கில் மிகப் பாரிய அளவில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் அடிமை வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுவதையும் கருத்திற்கொண்டு பாரபட்சமற்ற முறையில் விமர்சனம் செய்வதே சிறுவர்களுக்கு ஆற்றும் நற்பணியாகும்.
லங்காசிறி

