02-22-2006, 10:44 AM
புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி ஜெனீவாவில் சிங்களவர் குழு பரப்புரை
ஜெனீவாப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் பரப்புரைகளை மேற்கொள்ள சிங்களவர் குழு ஜெனீவாவில் முகாமிட்டுள்ளனர்.
இது தொடர்பிலான சுவரொட்டிகளையும் ஜெனீவாவில் அவர்கள் ஒட்டியுள்ளனர்.
சிறிலங்காவின் அமைதிஇ ஐக்கியம் மற்றும் உரிமைகளுக்கான தேசிய சங்கத்தின் பிரதிநிதிகள் ஜெனீவா சென்றுள்ளனர்.
"யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்த விடுதலைப் புலிகளுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று இந்த அமைப்பின் பேச்சாளர் ஹெச்.எல்.டி. மகிந்தபால தெரிவித்தார்.
"இப்பேச்சுக்களில் தீர்வு ஏதும் காணப்படும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இல்லை"என்றும் அவர் தெரிவித்தார்.
இக்குழுவில் இடம்பெற்றுள்ள சிறிலங்காவின் அமைதிச் செயற்பாட்டாளர் என கூறப்படுகிற ஜெகான் பெரேராவும் ஜெனீவா சென்றுள்ளார்.
அவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்இ "பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படலாம். ஆனால் அது மெதுவாகவே ஏற்படும். கடந்த 3 ஆண்டுகளாக இருதரப்பினரும் சந்திக்காத நிலையில் 2 நாட்கள் சந்திப்பின் மூலம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த காலம் போதுமானது அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜெனீவா ஊடகவியலாளர்களிடம் பேசிய விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்இ யுத்த நிறுத்தம் என்கிற ஒரு செயற்திட்டம்தான் பேசப்படும். ஆனால் அதற்குள் ஓராயிரம் செய்திகள் விவாதிக்கப்பட உள்ளன என்று தெரிவித்தார்.
புதினம்
ஜெனீவாப் பேச்சுக்களில் விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் பரப்புரைகளை மேற்கொள்ள சிங்களவர் குழு ஜெனீவாவில் முகாமிட்டுள்ளனர்.
இது தொடர்பிலான சுவரொட்டிகளையும் ஜெனீவாவில் அவர்கள் ஒட்டியுள்ளனர்.
சிறிலங்காவின் அமைதிஇ ஐக்கியம் மற்றும் உரிமைகளுக்கான தேசிய சங்கத்தின் பிரதிநிதிகள் ஜெனீவா சென்றுள்ளனர்.
"யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்த விடுதலைப் புலிகளுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்று இந்த அமைப்பின் பேச்சாளர் ஹெச்.எல்.டி. மகிந்தபால தெரிவித்தார்.
"இப்பேச்சுக்களில் தீர்வு ஏதும் காணப்படும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இல்லை"என்றும் அவர் தெரிவித்தார்.
இக்குழுவில் இடம்பெற்றுள்ள சிறிலங்காவின் அமைதிச் செயற்பாட்டாளர் என கூறப்படுகிற ஜெகான் பெரேராவும் ஜெனீவா சென்றுள்ளார்.
அவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்இ "பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படலாம். ஆனால் அது மெதுவாகவே ஏற்படும். கடந்த 3 ஆண்டுகளாக இருதரப்பினரும் சந்திக்காத நிலையில் 2 நாட்கள் சந்திப்பின் மூலம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த காலம் போதுமானது அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜெனீவா ஊடகவியலாளர்களிடம் பேசிய விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்இ யுத்த நிறுத்தம் என்கிற ஒரு செயற்திட்டம்தான் பேசப்படும். ஆனால் அதற்குள் ஓராயிரம் செய்திகள் விவாதிக்கப்பட உள்ளன என்று தெரிவித்தார்.
புதினம்

