02-22-2006, 10:42 AM
ஜெனீவாவில் பேச்சுவார்த்தை தொடங்கியது!
ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இன்று புதன்கிழமை சுவிஸ் நாட்டு நேரப்படி காலை 9 மணிக்குப் பின்னர் தொடங்கியது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னர் காலை 9 மணியளவில் ஊடகவியலாளர் மாநாடுஇ பேச்சுக்கள் நடைபெறும் ஜெனீவா கோட்டை வளாகத்தில் நடைபெற்றது.
பேச்சுக்களில் பங்கேற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகள் விவரங்கள் ஊடகவியலாளர்களுக்குக் கையளிக்கப்பட்டன.
தமிழீழ மற்றும் சிறிலங்கா அரசாங்க தரப்பு பிரநிதிகளை நோர்வே சிறப்புத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் ஊடகவியலாளர் மாநாட்டுக்கு அழைத்து வந்தார்.
நோர்வே சிறப்புத் தூதுவரும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி மார்ஸ்வெல் ஆகியோர் ஊடகவியலாளர் மாநாட்டில் சிறப்புரையாற்றினர்.
இருதரப்பினருக்கும் இடையே சிறிய அளவில் நம்பிக்கை தொடங்கி உள்ளது. இந்த நம்பிக்கை அதிகரிக்க வேண்டும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதே இப்பேச்சுக்களின் மிக முக்கிய நிகழ்ச்சி நிரல் என்று எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் மாநாட்டின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுவின் தலைவரான அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும்இ சிறிலங்கா அரசாங்கக் குழுவின் தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இருவரும் கைகொடுத்தனர்.
பின்னர் நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்இ நோர்வே முன்னாள் வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கிசன் ஆகியோருக்கும் இருதரப்புக் குழு தலைவர்களும் கை கொடுத்தனர்.
இதையடுத்து ஊடகவியலாளர்கள் மாநாடு முடிவடைந்தது.
அதன் பின்னர் பேச்சுக்கள் நடைபெறும் நோக்கி தமிழீழம் மற்றும் சிறிலங்கா குழுவினரும் அவர்களுடன் நோர்வேஇ சுவிஸ் குழுவினரும் சென்றனர்.
ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழீழ மற்றும் சிறிலங்கா அரசாங்கக் குழுவின் தலைவர்களான அன்ரன் பாலசிங்கம்இ நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரது உரைகளும் இன்று இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உரைகள் இடம்பெறவில்லை.
இருநாள் பேச்சுக்களின் முடிவில் நாளை வியாழக்கிழமை சுவிஸ் நாட்டு நேரப்படி மாலை 4 மணிக்கு நடைபெறும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் இருவரது உரைகளும் கேள்வி பதில் பகுதிகளும் இடம்பெறக் கூடும் என்று ஜெனீவா செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுக்களின் செய்திகளைச் சேகரிக்க சர்வதேச ஊடகங்கள்இ உள்ளுர் ஊடகங்கள்இ சிறிலங்கா மற்றும் தமிழீழ ஊடகங்களின் பிரதிநிதிகள் பெருமளவில் ஜெனீவாவில் குவிந்துள்ளனர். அனைவரும் பலத்த சோதனைகளுக்கு மத்தியில் உள் அனுமதிக்கப்பட்டனர்.
பேச்சுக்கள் நடைபெறும் ஜெனீவா கோட்டை பிரதேச பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதினம்
ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இன்று புதன்கிழமை சுவிஸ் நாட்டு நேரப்படி காலை 9 மணிக்குப் பின்னர் தொடங்கியது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னர் காலை 9 மணியளவில் ஊடகவியலாளர் மாநாடுஇ பேச்சுக்கள் நடைபெறும் ஜெனீவா கோட்டை வளாகத்தில் நடைபெற்றது.
பேச்சுக்களில் பங்கேற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கப் பிரதிநிதிகள் விவரங்கள் ஊடகவியலாளர்களுக்குக் கையளிக்கப்பட்டன.
தமிழீழ மற்றும் சிறிலங்கா அரசாங்க தரப்பு பிரநிதிகளை நோர்வே சிறப்புத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் ஊடகவியலாளர் மாநாட்டுக்கு அழைத்து வந்தார்.
நோர்வே சிறப்புத் தூதுவரும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி மார்ஸ்வெல் ஆகியோர் ஊடகவியலாளர் மாநாட்டில் சிறப்புரையாற்றினர்.
இருதரப்பினருக்கும் இடையே சிறிய அளவில் நம்பிக்கை தொடங்கி உள்ளது. இந்த நம்பிக்கை அதிகரிக்க வேண்டும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதே இப்பேச்சுக்களின் மிக முக்கிய நிகழ்ச்சி நிரல் என்று எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் மாநாட்டின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுவின் தலைவரான அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும்இ சிறிலங்கா அரசாங்கக் குழுவின் தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இருவரும் கைகொடுத்தனர்.
பின்னர் நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்இ நோர்வே முன்னாள் வெளிவிவகார அமைச்சர் விதார் ஹெல்கிசன் ஆகியோருக்கும் இருதரப்புக் குழு தலைவர்களும் கை கொடுத்தனர்.
இதையடுத்து ஊடகவியலாளர்கள் மாநாடு முடிவடைந்தது.
அதன் பின்னர் பேச்சுக்கள் நடைபெறும் நோக்கி தமிழீழம் மற்றும் சிறிலங்கா குழுவினரும் அவர்களுடன் நோர்வேஇ சுவிஸ் குழுவினரும் சென்றனர்.
ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழீழ மற்றும் சிறிலங்கா அரசாங்கக் குழுவின் தலைவர்களான அன்ரன் பாலசிங்கம்இ நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரது உரைகளும் இன்று இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உரைகள் இடம்பெறவில்லை.
இருநாள் பேச்சுக்களின் முடிவில் நாளை வியாழக்கிழமை சுவிஸ் நாட்டு நேரப்படி மாலை 4 மணிக்கு நடைபெறும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் இருவரது உரைகளும் கேள்வி பதில் பகுதிகளும் இடம்பெறக் கூடும் என்று ஜெனீவா செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுக்களின் செய்திகளைச் சேகரிக்க சர்வதேச ஊடகங்கள்இ உள்ளுர் ஊடகங்கள்இ சிறிலங்கா மற்றும் தமிழீழ ஊடகங்களின் பிரதிநிதிகள் பெருமளவில் ஜெனீவாவில் குவிந்துள்ளனர். அனைவரும் பலத்த சோதனைகளுக்கு மத்தியில் உள் அனுமதிக்கப்பட்டனர்.
பேச்சுக்கள் நடைபெறும் ஜெனீவா கோட்டை பிரதேச பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதினம்

