02-22-2006, 10:41 AM
ஜெனீவாவில் பேச்சுக்கள்- கிழக்கில் தொடரும் தாக்குதல்: ஒரு துணைப்படை வீரர் வீரச்சாவு!
மட்டக்களப்பு கிரானில் சிறிலங்காப் படையினரும் அதனுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுவினரும் இணைந்து நடத்திய பதுங்கித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் துணைப் படைவீரர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.
கிரான் சிறிலங்கா படைமுகாமிலிருந்து வந்த சிலங்கா படையினர் இன்று புதன்கிழமை காலை 10.15 மணியளவில் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு சந்திவெளி திகிலிவெட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய நாராயணபிள்ளை சாந்தகுமார் என்ற துணைப் படைவீரரே வீரச்சாவடைந்தவராவார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் போர் நிறுத்த உடன்பாடு அமுலாக்கம் பற்றிய பேச்சு இன்று ஆரம்பமாவதற்கு 3.30 மணித்தியாலயங்களுக்கு முன்னர் இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Puthinam.com
மட்டக்களப்பு கிரானில் சிறிலங்காப் படையினரும் அதனுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுவினரும் இணைந்து நடத்திய பதுங்கித் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் துணைப் படைவீரர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.
கிரான் சிறிலங்கா படைமுகாமிலிருந்து வந்த சிலங்கா படையினர் இன்று புதன்கிழமை காலை 10.15 மணியளவில் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு சந்திவெளி திகிலிவெட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய நாராயணபிள்ளை சாந்தகுமார் என்ற துணைப் படைவீரரே வீரச்சாவடைந்தவராவார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் போர் நிறுத்த உடன்பாடு அமுலாக்கம் பற்றிய பேச்சு இன்று ஆரம்பமாவதற்கு 3.30 மணித்தியாலயங்களுக்கு முன்னர் இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Puthinam.com

