02-21-2006, 05:16 PM
கருணாநிதி அதிரடி வைத்தியத்தால் சர்ச்சைக்கு முடிவு
சென்னை, பிப்.21: திமுக தலைவர் மு. கருணாநிதியின் அதிரடி பேட்டியால் ம.தி.மு.க. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் பகிர்ந்து கொள்ள விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கை பட்டியல் பிப்.15-க்குள் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டது. சில கட்சிகள் பட்டியல் சமர்ப்பித்தன. சில கட்சிகள் எப்போது பட்டியல் தரப்படும் என தெரிவித்தன.
ம.தி.மு.க. மட்டும் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. அதிமுக அணிக்கு மாறிவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அதன் மூத்த நிர்வாகி பேசி வந்தார். இதனால் சர்ச்சை எழுந்தது.
தொடர்ந்து சந்தேகம் இருப்பதை முடிவுக்குக் கொண்டு வர அதிரடி வைத்தியம் செய்தவர் கருணாநிதி. சனிக்கிழமை ( பிப்.18 ) நிருபர்களை சந்தித்த அவர், "வைகோ ஏதோ முடிவு செய்துவிட்டதைப் போலத் தெரிகிறது; அப்படி முடிவு செய்திருந்தால் நாங்களும் அதற்கேற்ப முடிவு செய்ய வேண்டும்' என்று கூறினார்.
பிப்.8 வரையில் வைகோவுக்கு ஆதரவாகவே பேசி வந்த, கருணாநிதி, தொடர்ந்து காத்திருக்க முடியாது என்ற நிலையில் சற்று கடுமையாகவே பிப்.18-ல் பேசினார்.
இதனால் அதிமுக தரப்பில் பேரம் பேசும் சக்தியும் ம.தி.மு.க.வுக்கு குறைந்துவிட்டது. திமுக அணியில் நீடிக்க வேண்டும் என்று இருக்கும் கட்சியை இழுப்பதாக இருந்தால் நிறைய தொகுதிகளை அதிமுக ஒதுக்க வேண்டியிருக்கும். ஆனால், திமுக கூட்டணி இழப்பதற்குத் தயாராகிவிட்ட ஒரு கட்சி, வேறொரு கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கொடுத்தால்தான் சேருவேன் என்று கூற முடியாது. அந்த வகையில் ம.தி.மு.க.வுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கிவிட்டார் கருணாநிதி.
2001 தேர்தலில் ம.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டபோது தென் மாவட்டங்களில் தான் கணிசமாக வாக்குகள் கிடைத்தன. ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து இறக்குவேன் என்று கூறி வேலூர் சிறை வாசலில் இருந்தே பிரசாரத்தைத் தொடங்கிய வைகோ, இப்போது அதே ஜெயலலிதாவுடன் கூட்டு சேருவதற்கு ஒரு காரணத்தைக் கூறியாக வேண்டும்.
"பொடா' சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி வைகோவை சிறையில் அடைத்துவிட்டனர் என்று கூறி திமுக அணியினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர். ம.தி.மு.க. நடத்திய கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவளித்தனர்.
பா.ஜ.க. ஆட்சியில் "பொடா' மறு ஆய்வுக் குழு அமைக்கவும், ஆட்சி மாறியபிறகு அச் சட்டத்தையே ரத்து செய்யவும் காரணமாக இருந்தது இந்தக் கூட்டணிதான்.
இதையெல்லாம் மறக்கச் செய்யும் அளவுக்கு வலுவான காரணங்களைக் கூறி அதிமுகவுடன் சேர்ந்தால் மட்டுமே மக்கள் அதை ஏற்பார்கள். இல்லாவிட்டால், சிறைவாசத்தால் வைகோவுக்குக் கிடைத்த ஆதரவு, இப்போது கைவிட்டுப் போய்விடும் என்ற அச்சம் ம.தி.மு.க.வினருக்கு ஏற்பட்டது.
வைகோவைப் பொருத்தவரை கட்சியில் ஏற்கெனவே தேர்தலில் போட்டியிட்டு நிறைய செலவு செய்த 300-க்கும் மேற்பட்டவர்களில் பலருக்கு இந்த முறை வாய்ப்பு தர வேண்டும் என விரும்பியதாகத் தெரிகிறது. வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ள இந்தத் தேர்தலில் எப்படியும் "சீட்' வாங்கிவிட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களும், முக்கியப் பிரமுகர்களும் ஆர்வம் காட்டினர்.
அதனால் ஏற்பட்ட நெருக்கடிதான் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.
வைகோ எப்போதுமே திமுக அணிக்கு தான் ஆதரவு தெரிவித்து வந்தார். அவருக்கு நெருக்கமானவர்களின் பேச்சுதான் கருத்துவேறுபாடுகளை உருவாக்கிவிட்டன என ம.தி.மு.க.வினர் இப்போது கூறுகின்றனர்.
இப்போதைக்கு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. இதை "கமா'வாக மாற்றி, மீண்டும் பிரச்சினையை உருவாக்க முடியாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இதே உற்சாகத்தில் தொகுதிப் பகிர்வு பேச்சுகளையும் கருணாநிதி தொடங்கிவிட்டார்.
தட்ஸ் தமிழ்
சென்னை, பிப்.21: திமுக தலைவர் மு. கருணாநிதியின் அதிரடி பேட்டியால் ம.தி.மு.க. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் பகிர்ந்து கொள்ள விரும்பும் தொகுதிகளின் எண்ணிக்கை பட்டியல் பிப்.15-க்குள் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டது. சில கட்சிகள் பட்டியல் சமர்ப்பித்தன. சில கட்சிகள் எப்போது பட்டியல் தரப்படும் என தெரிவித்தன.
ம.தி.மு.க. மட்டும் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. அதிமுக அணிக்கு மாறிவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அதன் மூத்த நிர்வாகி பேசி வந்தார். இதனால் சர்ச்சை எழுந்தது.
தொடர்ந்து சந்தேகம் இருப்பதை முடிவுக்குக் கொண்டு வர அதிரடி வைத்தியம் செய்தவர் கருணாநிதி. சனிக்கிழமை ( பிப்.18 ) நிருபர்களை சந்தித்த அவர், "வைகோ ஏதோ முடிவு செய்துவிட்டதைப் போலத் தெரிகிறது; அப்படி முடிவு செய்திருந்தால் நாங்களும் அதற்கேற்ப முடிவு செய்ய வேண்டும்' என்று கூறினார்.
பிப்.8 வரையில் வைகோவுக்கு ஆதரவாகவே பேசி வந்த, கருணாநிதி, தொடர்ந்து காத்திருக்க முடியாது என்ற நிலையில் சற்று கடுமையாகவே பிப்.18-ல் பேசினார்.
இதனால் அதிமுக தரப்பில் பேரம் பேசும் சக்தியும் ம.தி.மு.க.வுக்கு குறைந்துவிட்டது. திமுக அணியில் நீடிக்க வேண்டும் என்று இருக்கும் கட்சியை இழுப்பதாக இருந்தால் நிறைய தொகுதிகளை அதிமுக ஒதுக்க வேண்டியிருக்கும். ஆனால், திமுக கூட்டணி இழப்பதற்குத் தயாராகிவிட்ட ஒரு கட்சி, வேறொரு கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கொடுத்தால்தான் சேருவேன் என்று கூற முடியாது. அந்த வகையில் ம.தி.மு.க.வுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கிவிட்டார் கருணாநிதி.
2001 தேர்தலில் ம.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டபோது தென் மாவட்டங்களில் தான் கணிசமாக வாக்குகள் கிடைத்தன. ஜெயலலிதாவை ஆட்சியில் இருந்து இறக்குவேன் என்று கூறி வேலூர் சிறை வாசலில் இருந்தே பிரசாரத்தைத் தொடங்கிய வைகோ, இப்போது அதே ஜெயலலிதாவுடன் கூட்டு சேருவதற்கு ஒரு காரணத்தைக் கூறியாக வேண்டும்.
"பொடா' சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி வைகோவை சிறையில் அடைத்துவிட்டனர் என்று கூறி திமுக அணியினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர். ம.தி.மு.க. நடத்திய கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவளித்தனர்.
பா.ஜ.க. ஆட்சியில் "பொடா' மறு ஆய்வுக் குழு அமைக்கவும், ஆட்சி மாறியபிறகு அச் சட்டத்தையே ரத்து செய்யவும் காரணமாக இருந்தது இந்தக் கூட்டணிதான்.
இதையெல்லாம் மறக்கச் செய்யும் அளவுக்கு வலுவான காரணங்களைக் கூறி அதிமுகவுடன் சேர்ந்தால் மட்டுமே மக்கள் அதை ஏற்பார்கள். இல்லாவிட்டால், சிறைவாசத்தால் வைகோவுக்குக் கிடைத்த ஆதரவு, இப்போது கைவிட்டுப் போய்விடும் என்ற அச்சம் ம.தி.மு.க.வினருக்கு ஏற்பட்டது.
வைகோவைப் பொருத்தவரை கட்சியில் ஏற்கெனவே தேர்தலில் போட்டியிட்டு நிறைய செலவு செய்த 300-க்கும் மேற்பட்டவர்களில் பலருக்கு இந்த முறை வாய்ப்பு தர வேண்டும் என விரும்பியதாகத் தெரிகிறது. வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ள இந்தத் தேர்தலில் எப்படியும் "சீட்' வாங்கிவிட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களும், முக்கியப் பிரமுகர்களும் ஆர்வம் காட்டினர்.
அதனால் ஏற்பட்ட நெருக்கடிதான் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.
வைகோ எப்போதுமே திமுக அணிக்கு தான் ஆதரவு தெரிவித்து வந்தார். அவருக்கு நெருக்கமானவர்களின் பேச்சுதான் கருத்துவேறுபாடுகளை உருவாக்கிவிட்டன என ம.தி.மு.க.வினர் இப்போது கூறுகின்றனர்.
இப்போதைக்கு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. இதை "கமா'வாக மாற்றி, மீண்டும் பிரச்சினையை உருவாக்க முடியாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
இதே உற்சாகத்தில் தொகுதிப் பகிர்வு பேச்சுகளையும் கருணாநிதி தொடங்கிவிட்டார்.
தட்ஸ் தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

