02-20-2006, 06:30 PM
<span style='font-size:25pt;line-height:100%'>அன்புடன்: சாந்திக்கு
கடிதத்தை தொடருமுன் முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். காரணம் இக்கடிதத்தில் நான் எழுதியிருக்கும் விடயத்தில் உங்களிற்கு உடன்பாடு இல்லாமலிருந்தால் நீங்கள் தயவுசெய்து என்னை தப்பாய் நினைத்துகொள்ளகூடாது. அல்லது என்னை போலவே சில நேரம் உங்கள் சிந்தனையும் இருந்திருந்தால் அது இருவருக்குமே மகிழ்ச்சிதான் என்ன குழப்புகிறேன் என்று யோசிக்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.
சாந்தி நான் உங்களை விரும்புகிறேன் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதுவும் எனது மற்றும் உங்கள் வீட்டாரினதும் முக்கியமாக உங்களின் புூரண சம்மதத்துடன்.இது நான் திடீரென ஏதோ உங்கள் மீது ஏற்பட்ட அனுதாபத்திலேயோ அல்லதுஇதுவரை நாள் உங்களுடன் பழகியதால் ஏற்பட்ட வெறும் இன மன கவர்ச்சியிலேயோ எடுத்தமுடிவல்ல.
பலநாட்கள் பலதடைவை நன்றாக யோசித்து எடுத்தமுடிவுதான். ஆனால். ஆறுதலாய் யோசித்து எடுத்த முடிவை அவசரப்பட்டு தெரிவித்துவிடாமல் ஆறுதலாய் அதுவும் இப்போது தெரிவிப்பதற்கு பல காரணங்கள் உண்டு.என்னைப்பொறுத்தவரை நீங்கள் ரவியை திருமணம் செய்ததென்பது உங்களையேயறியபமல் அது உங்கள் வாழ்க்கைப்பாதையில் நடந்ததொரு விபத்தே .
அந்த கணங்கள் ஒவ்வொன்றின் ரணங்களும் இன்னும் முழுதாய் மாறவில்லையென்பதும் எனக்கு தெரியும்.மனதின் காயங்களிற்கு காலமே சிறந்தமருந்து.இந்த உங்கள்ஊர் நோக்கிய பயணம் உங்கள் குடும்பத்தினருடனான சந்திப்பு என்பன உங்களை அந்த நினைவுகளிலிருந்து நிச்சயம் மீட்டெடுக்கும்.
அப்போது நீங்கள் உங்கள்குடும்பத்தாருடனும் கதைத்து நீங்களும் யோசித்து ஒரு நல்ல பதிலை தாருங்கள்.அதற்காக நானும் வழைமையாக காதலில் சொல்லப்படும் பொய்களைப்போல காலமெல்லாம் காத்திருப்பேன் என்று சொல்லவில்லை கொஞ்சம் நடைமுறை வாழ்க்கையையும் யோசித்து உங்களிற்காக ஒரு வருட அவகாசம் தருகிறேன்.
இந்த ஒருவருட அவகாசம் உங்களிற்கு நன்றாக யோசித்து முடிவெடுக்க போதுமானது என்று நினைக்கிறேன்.நீங்கள் சம்மதித்தால் உண்மையில் நான் அதிஸ்ர சாலி ஏனெனில் உங்களைப்போல ஒரு வேறு பெண் எனக்கு மனைவியாக கிடைப்பார்களா என்பது சந்தேகமே.
இனி இதைப்பற்றிய முடிவு உங்களின் கைகளில்தான். நீங்கள் சம்மதித்தால் நாங்கள் புதியவாழ்வை ஆரம்பித்து ஒரு புதிய பாதையில் இணைந்து செல்லலாம். இல்லை சம்மதம் இல்லையென்றால் என்ன செய்வது கொஞ்சம் கவலைதான். ஆனாலும் என் இதயதுடிப்பு உள்ளவரை என் மூளையின் ஞாபக மடிப்புகளில் ஏதோ ஒரு மடிப்பில் உங்களுடன் பழகிய ஞாபகங்களை பதிந்து அவ்வப்போது அவற்றை மீட்டெடுத்து சந்தோசபட்டுக் கொள்வேன்.
முக்கிய விடயம் எனக்காக நான் செய்த உதவிகளிற்காகவோ மற்றும் நான் தவறாய் நினைத்து மனமுடைந்து விடுவேன் என்கிற எந்தவித வற்புறுத்தலுமின்றி நீங்களாக சுயமாக எடுக்கும் எந்த முடிவையும் நான் ஏற்று கொள்வேன். அதுவரை வழைமை போல நாங்கள் தொடர்புகளை பேணலாம். ஊர் போய் சேர்ந்ததும் கடிதம் போடவும்.
மற்றபடி உங்களிற்கு என்னை திருமணம் செய்து கொள்ள பிடிக்காவிட்டாலும் கூட இப்படியொரு கடிதம் உங்களிற்கு எழுதியது தவறாயின் இறுதியாகவும் மன்னிப்பு கேட்டு கொண்டு முடிக்கிறேன்
அன்புடன்
சிவா</span>
கடிதத்தை படித்து முடித்த சாந்தி அப்படியெ சிறிது நேரம் கண்களை மூடியவாறு யோசித்தாள். இதுவரை நாளும் ஊருக்கு போக வேண்டும் என்று பிவாதமாய் இருந்தவளிற்கு இறுதியாக விமான நிலையத்தில் போகலாமா? விடலாமா? என்கிற தடுமாற்றம் வந்தது ஏன்???சிவா எழுதியது போல எனக்கு அவனில் காதல் இருந்ததா?
தனது வகுப்புகளிற்கு கூட போகாமல் ஓடியோடி எனக்காக உதவியபோது நான் ரவியையும் சிவாவையும் எனது மனதராசில் எத்தனை தடைவை நிறுத்து பாத்:திருப்பேன். அப்போதே நான் சிவாவை மனதில் நிறுத்தி பார்க்க தொடங்கி விட்டேனா??
இப்படியே சாந்திக்குள்ளும் பல விடை தெரியாத கேள்விகள். எதற்கும் ஊருக்கு போய் ஆறுதலாய் பாக்கலாம் எண்று எண்ணியவள் அவன் கடிதத்தை மீண்டுமொரு முறை படிக்கதொடங்கிய போது விமானம் பிரான்ஸ் நாட்டின் தரையை விட்டு மேலெழும்பி கொண்டிருந்தது.
உறவுகளே சாந்தி சிவாவுடன் சேர்ந்து வாழ்ந்தாளா?? இல்லையா என்பதற்கு அடுத்த தொடரில் விடை கிடைத்து விடும்
கடிதத்தை தொடருமுன் முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். காரணம் இக்கடிதத்தில் நான் எழுதியிருக்கும் விடயத்தில் உங்களிற்கு உடன்பாடு இல்லாமலிருந்தால் நீங்கள் தயவுசெய்து என்னை தப்பாய் நினைத்துகொள்ளகூடாது. அல்லது என்னை போலவே சில நேரம் உங்கள் சிந்தனையும் இருந்திருந்தால் அது இருவருக்குமே மகிழ்ச்சிதான் என்ன குழப்புகிறேன் என்று யோசிக்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.
சாந்தி நான் உங்களை விரும்புகிறேன் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதுவும் எனது மற்றும் உங்கள் வீட்டாரினதும் முக்கியமாக உங்களின் புூரண சம்மதத்துடன்.இது நான் திடீரென ஏதோ உங்கள் மீது ஏற்பட்ட அனுதாபத்திலேயோ அல்லதுஇதுவரை நாள் உங்களுடன் பழகியதால் ஏற்பட்ட வெறும் இன மன கவர்ச்சியிலேயோ எடுத்தமுடிவல்ல.
பலநாட்கள் பலதடைவை நன்றாக யோசித்து எடுத்தமுடிவுதான். ஆனால். ஆறுதலாய் யோசித்து எடுத்த முடிவை அவசரப்பட்டு தெரிவித்துவிடாமல் ஆறுதலாய் அதுவும் இப்போது தெரிவிப்பதற்கு பல காரணங்கள் உண்டு.என்னைப்பொறுத்தவரை நீங்கள் ரவியை திருமணம் செய்ததென்பது உங்களையேயறியபமல் அது உங்கள் வாழ்க்கைப்பாதையில் நடந்ததொரு விபத்தே .
அந்த கணங்கள் ஒவ்வொன்றின் ரணங்களும் இன்னும் முழுதாய் மாறவில்லையென்பதும் எனக்கு தெரியும்.மனதின் காயங்களிற்கு காலமே சிறந்தமருந்து.இந்த உங்கள்ஊர் நோக்கிய பயணம் உங்கள் குடும்பத்தினருடனான சந்திப்பு என்பன உங்களை அந்த நினைவுகளிலிருந்து நிச்சயம் மீட்டெடுக்கும்.
அப்போது நீங்கள் உங்கள்குடும்பத்தாருடனும் கதைத்து நீங்களும் யோசித்து ஒரு நல்ல பதிலை தாருங்கள்.அதற்காக நானும் வழைமையாக காதலில் சொல்லப்படும் பொய்களைப்போல காலமெல்லாம் காத்திருப்பேன் என்று சொல்லவில்லை கொஞ்சம் நடைமுறை வாழ்க்கையையும் யோசித்து உங்களிற்காக ஒரு வருட அவகாசம் தருகிறேன்.
இந்த ஒருவருட அவகாசம் உங்களிற்கு நன்றாக யோசித்து முடிவெடுக்க போதுமானது என்று நினைக்கிறேன்.நீங்கள் சம்மதித்தால் உண்மையில் நான் அதிஸ்ர சாலி ஏனெனில் உங்களைப்போல ஒரு வேறு பெண் எனக்கு மனைவியாக கிடைப்பார்களா என்பது சந்தேகமே.
இனி இதைப்பற்றிய முடிவு உங்களின் கைகளில்தான். நீங்கள் சம்மதித்தால் நாங்கள் புதியவாழ்வை ஆரம்பித்து ஒரு புதிய பாதையில் இணைந்து செல்லலாம். இல்லை சம்மதம் இல்லையென்றால் என்ன செய்வது கொஞ்சம் கவலைதான். ஆனாலும் என் இதயதுடிப்பு உள்ளவரை என் மூளையின் ஞாபக மடிப்புகளில் ஏதோ ஒரு மடிப்பில் உங்களுடன் பழகிய ஞாபகங்களை பதிந்து அவ்வப்போது அவற்றை மீட்டெடுத்து சந்தோசபட்டுக் கொள்வேன்.
முக்கிய விடயம் எனக்காக நான் செய்த உதவிகளிற்காகவோ மற்றும் நான் தவறாய் நினைத்து மனமுடைந்து விடுவேன் என்கிற எந்தவித வற்புறுத்தலுமின்றி நீங்களாக சுயமாக எடுக்கும் எந்த முடிவையும் நான் ஏற்று கொள்வேன். அதுவரை வழைமை போல நாங்கள் தொடர்புகளை பேணலாம். ஊர் போய் சேர்ந்ததும் கடிதம் போடவும்.
மற்றபடி உங்களிற்கு என்னை திருமணம் செய்து கொள்ள பிடிக்காவிட்டாலும் கூட இப்படியொரு கடிதம் உங்களிற்கு எழுதியது தவறாயின் இறுதியாகவும் மன்னிப்பு கேட்டு கொண்டு முடிக்கிறேன்
அன்புடன்
சிவா</span>
கடிதத்தை படித்து முடித்த சாந்தி அப்படியெ சிறிது நேரம் கண்களை மூடியவாறு யோசித்தாள். இதுவரை நாளும் ஊருக்கு போக வேண்டும் என்று பிவாதமாய் இருந்தவளிற்கு இறுதியாக விமான நிலையத்தில் போகலாமா? விடலாமா? என்கிற தடுமாற்றம் வந்தது ஏன்???சிவா எழுதியது போல எனக்கு அவனில் காதல் இருந்ததா?
தனது வகுப்புகளிற்கு கூட போகாமல் ஓடியோடி எனக்காக உதவியபோது நான் ரவியையும் சிவாவையும் எனது மனதராசில் எத்தனை தடைவை நிறுத்து பாத்:திருப்பேன். அப்போதே நான் சிவாவை மனதில் நிறுத்தி பார்க்க தொடங்கி விட்டேனா??
இப்படியே சாந்திக்குள்ளும் பல விடை தெரியாத கேள்விகள். எதற்கும் ஊருக்கு போய் ஆறுதலாய் பாக்கலாம் எண்று எண்ணியவள் அவன் கடிதத்தை மீண்டுமொரு முறை படிக்கதொடங்கிய போது விமானம் பிரான்ஸ் நாட்டின் தரையை விட்டு மேலெழும்பி கொண்டிருந்தது.
உறவுகளே சாந்தி சிவாவுடன் சேர்ந்து வாழ்ந்தாளா?? இல்லையா என்பதற்கு அடுத்த தொடரில் விடை கிடைத்து விடும்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

