02-20-2006, 01:59 PM
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. நீடிக்கும்: வைகோ அறிக்கை
சென்னை, பிப். 20-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி குறித்தும் தி.மு.கழகத்தைக் குறித்தும் மறுமலர்ச்சி தி.மு.க. கழகத்தின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத், கூறிய கருத்துக்கள் இயக்கத்துக்கு உடன்பாடானவை அல்ல என்றும், கருணாநிதி மனம் புண்படும் படியாக அவர் சொன்ன கருத்துக்கள் பற்றி நான் வருந்த நேரிட்டதையும், இது குறித்து அவரிடம் உரிய விளக்கம் கேட்கப்படும் என்றும் அறிவித்த பின்னரும் நாஞ்சில் சம்பத், தி.மு.க. தலைமையையும், தி.மு. கழகத்தையும் நிந்திக்கும் விதத்தில் பத்திரிகைகளில் பேட்டி கொடுத்தது மட்டும் அன்றி, தான் கூறிய கருத்துகள் பற்றி வருந்துவதற்கு அவசியம் இல்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததும் கூட்டணி தர்மத்துக்கு முற்றிலும் முரண்பாடானதும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறுகிற செயலும் ஆகும். தி.மு.க. தலைவரும் அவ்வியக்கத் தோழர்களும் மனம் காயப்படும் விதத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறுமலர்ச்சி தி.மு. கழகத்தின் அவைத் தலைவர் எல். கணேசன் எமது இயக்கம் வலுவுடன் வளர்ச்சி பெற்று இருக்கிறது என்றுதான் கூறியதாகவும், வேறு கட்சிகளைப் புண்படுத்தும் விதத்தில் பத்திரிகைகளில் வெளியான சொற்களைப் பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.
தி.மு.க.ழகத்தின் தலைமையிலான கூட்டணி யில் தான் ம.தி.மு.க. அங்கம் வகிக்கிறது என்பதை வலி யுறுத்தும் நோக்கத்தில்தான் அண்மையில் கடந்த 14-ம் தேதி டெல்லியில் செய்தி யாளர்களிடம் கூறுகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட்டிய கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் கடந்த 8ம் தேதி அன்று ம.தி.மு.க. பங்கேற்றது என்பதை சுட்டிக்காட்டி அந்த கூட்டணியிலேயே தொடருகிறோம் என்று நான் தெரிவித்து உள்ளேன்.
கடந்த மாதம் ஜனவரி 26ம் தேதி கருணாநிதியை சந்தித்து 1 மணி நேரம் உரையாடியதையும் ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேசியதையும் கருணாநிதி 18-ந் தேதி அன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
எனவே தொகுதி பங்கீடு குறித்து பூர்வாங்கமாகப் பேசி விட்ட நிலையில், ம.தி.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதி கள் குறித்த பட்டியலை தயார் செய்வதற்காக தலைமை நிர்வாகிகளோடும், மாவட்ட செயலாளர்களோடும்ஆலோ சனை மேற்கொண்டு வருகிறோம்.
ஏற்கனவே இது குறித்து பூர்வாங்கமாகப் பேசி இருக்கிறோம் என்பதால் பட்டியலைத்தர இன்னும் ஓரிருநாள் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி இருந்த நிலையில் 17ம் தேதி மாலை எனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் நான் படித்த பள்ளியில் பொன் விழா நிகழ்ச்சியில் பேசும் போது கூட கலிங்கப்பட்டி உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளி என்ற உயர்வு பெற உத்தரவிட்டவர் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்கள் என்பதைக் கூறியதோடு,
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி அவருக்கு நன்றி தெரிவித்துப் பேசியது 18-ந் தேதி காலை பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் 18-ம் தேதி அன்று ம.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறதா? என்ற கேள்வி சர்ச்சைக்குள்ளானது குறித்து வேதனைப்படுகிறேன்.
கூட்டணியின் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற விதத்தில் மறு மலர்ச்சி தி.மு.க. எந்த செயலிலும் ஈடுபட்டது இல்லை. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த இடங்கள் ஒதுக்கப்படாத நிலையிலும் கூட இதயசுத்தியோடு 40 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றிக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு முழு மூச்சாக உழைத்துப் பாடுபட்டது நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
அரசியல் நாணயத்தையும், நாகரீகத் தையும் கட்டிக் காக்கும் உன்னதமான குறிக்கோளோடு கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற ம.தி. மு.க. இந்த அரசியல் பண் பாட்டை பாதுகாக்கக் கொடுத்து இருக்கின்றவிலை அதிகமாகும்.
இதற்காக ஏற்றுக் கொண்ட துன்பதுயரங்கள் ஏராளம், அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி என்ற தாரக மந்திரத்தை நிலை நாட்டவும், செயல்படுத்தவும் குறுகிய தற்காலிக லாபங்களை கருதாமல், நாடாமல் தமிழகத்தின் உயர்வையும், திராவிட இயக்கத்தின் நலனையும் உயிராகக் கருதி இயங்கி வருகிறோம்.
கடந்த 2001 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணியை விட்டு விலகிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டபோதும் கூட சட்டமன்றத்தில் சில இடங்கள் கிடைத்தால் போதும் என்று கருதி இன்னொரு கூட்டணியில் இடம் பெற எண்ணிடவும் இல்லை என்பதை சுட்டிக் காட்டுவது அவசியம் ஆகும்.
அரசியல் நாணயத்தையும், அரசியல் நாகரீகத்தையும் இரு கண்களாகப் போன்றுகின்ற இயக்கம் தான் ம.தி.மு.க. என்பதை கடந்த 17 ஆண்டுகளின் செயல்பாடுகள் திட்ட வட்டமாக விளக்கக் கூடியவை ஆகும்.
பொது வாழ்வைப்பாழ்படுத்தும் அரசியல் வர்த்தக சூதாட்டத்தை அறவே அகற்றுவதே எங்கள் நோக் கம் ஒளிவு மறைவு இன்றி, எடுக்கின்ற முடிவுகளைச் செயல்படுத்தும் திறந்த புத் தகமாகவே ம.தி.மு.க. திகழ்கிறது. தி.மு.க. தலை மையிலான கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் ம.தி.மு.க. அக் கூட்டணியை வலுப்படுத்தவும், தேர்தல் களத்தில் கூட்டணியை வெற்றி பெறச் செய்யவும் உறுதி பூண்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Courtesy : Maalaimalar
சென்னை, பிப். 20-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி குறித்தும் தி.மு.கழகத்தைக் குறித்தும் மறுமலர்ச்சி தி.மு.க. கழகத்தின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத், கூறிய கருத்துக்கள் இயக்கத்துக்கு உடன்பாடானவை அல்ல என்றும், கருணாநிதி மனம் புண்படும் படியாக அவர் சொன்ன கருத்துக்கள் பற்றி நான் வருந்த நேரிட்டதையும், இது குறித்து அவரிடம் உரிய விளக்கம் கேட்கப்படும் என்றும் அறிவித்த பின்னரும் நாஞ்சில் சம்பத், தி.மு.க. தலைமையையும், தி.மு. கழகத்தையும் நிந்திக்கும் விதத்தில் பத்திரிகைகளில் பேட்டி கொடுத்தது மட்டும் அன்றி, தான் கூறிய கருத்துகள் பற்றி வருந்துவதற்கு அவசியம் இல்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததும் கூட்டணி தர்மத்துக்கு முற்றிலும் முரண்பாடானதும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறுகிற செயலும் ஆகும். தி.மு.க. தலைவரும் அவ்வியக்கத் தோழர்களும் மனம் காயப்படும் விதத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறுமலர்ச்சி தி.மு. கழகத்தின் அவைத் தலைவர் எல். கணேசன் எமது இயக்கம் வலுவுடன் வளர்ச்சி பெற்று இருக்கிறது என்றுதான் கூறியதாகவும், வேறு கட்சிகளைப் புண்படுத்தும் விதத்தில் பத்திரிகைகளில் வெளியான சொற்களைப் பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.
தி.மு.க.ழகத்தின் தலைமையிலான கூட்டணி யில் தான் ம.தி.மு.க. அங்கம் வகிக்கிறது என்பதை வலி யுறுத்தும் நோக்கத்தில்தான் அண்மையில் கடந்த 14-ம் தேதி டெல்லியில் செய்தி யாளர்களிடம் கூறுகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட்டிய கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் கடந்த 8ம் தேதி அன்று ம.தி.மு.க. பங்கேற்றது என்பதை சுட்டிக்காட்டி அந்த கூட்டணியிலேயே தொடருகிறோம் என்று நான் தெரிவித்து உள்ளேன்.
கடந்த மாதம் ஜனவரி 26ம் தேதி கருணாநிதியை சந்தித்து 1 மணி நேரம் உரையாடியதையும் ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் குறித்து பேசியதையும் கருணாநிதி 18-ந் தேதி அன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
எனவே தொகுதி பங்கீடு குறித்து பூர்வாங்கமாகப் பேசி விட்ட நிலையில், ம.தி.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதி கள் குறித்த பட்டியலை தயார் செய்வதற்காக தலைமை நிர்வாகிகளோடும், மாவட்ட செயலாளர்களோடும்ஆலோ சனை மேற்கொண்டு வருகிறோம்.
ஏற்கனவே இது குறித்து பூர்வாங்கமாகப் பேசி இருக்கிறோம் என்பதால் பட்டியலைத்தர இன்னும் ஓரிருநாள் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி இருந்த நிலையில் 17ம் தேதி மாலை எனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் நான் படித்த பள்ளியில் பொன் விழா நிகழ்ச்சியில் பேசும் போது கூட கலிங்கப்பட்டி உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளி என்ற உயர்வு பெற உத்தரவிட்டவர் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்கள் என்பதைக் கூறியதோடு,
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி அவருக்கு நன்றி தெரிவித்துப் பேசியது 18-ந் தேதி காலை பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் 18-ம் தேதி அன்று ம.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறதா? என்ற கேள்வி சர்ச்சைக்குள்ளானது குறித்து வேதனைப்படுகிறேன்.
கூட்டணியின் மதிப்புக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற விதத்தில் மறு மலர்ச்சி தி.மு.க. எந்த செயலிலும் ஈடுபட்டது இல்லை. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த இடங்கள் ஒதுக்கப்படாத நிலையிலும் கூட இதயசுத்தியோடு 40 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றிக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு முழு மூச்சாக உழைத்துப் பாடுபட்டது நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
அரசியல் நாணயத்தையும், நாகரீகத் தையும் கட்டிக் காக்கும் உன்னதமான குறிக்கோளோடு கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற ம.தி. மு.க. இந்த அரசியல் பண் பாட்டை பாதுகாக்கக் கொடுத்து இருக்கின்றவிலை அதிகமாகும்.
இதற்காக ஏற்றுக் கொண்ட துன்பதுயரங்கள் ஏராளம், அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி என்ற தாரக மந்திரத்தை நிலை நாட்டவும், செயல்படுத்தவும் குறுகிய தற்காலிக லாபங்களை கருதாமல், நாடாமல் தமிழகத்தின் உயர்வையும், திராவிட இயக்கத்தின் நலனையும் உயிராகக் கருதி இயங்கி வருகிறோம்.
கடந்த 2001 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணியை விட்டு விலகிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டபோதும் கூட சட்டமன்றத்தில் சில இடங்கள் கிடைத்தால் போதும் என்று கருதி இன்னொரு கூட்டணியில் இடம் பெற எண்ணிடவும் இல்லை என்பதை சுட்டிக் காட்டுவது அவசியம் ஆகும்.
அரசியல் நாணயத்தையும், அரசியல் நாகரீகத்தையும் இரு கண்களாகப் போன்றுகின்ற இயக்கம் தான் ம.தி.மு.க. என்பதை கடந்த 17 ஆண்டுகளின் செயல்பாடுகள் திட்ட வட்டமாக விளக்கக் கூடியவை ஆகும்.
பொது வாழ்வைப்பாழ்படுத்தும் அரசியல் வர்த்தக சூதாட்டத்தை அறவே அகற்றுவதே எங்கள் நோக் கம் ஒளிவு மறைவு இன்றி, எடுக்கின்ற முடிவுகளைச் செயல்படுத்தும் திறந்த புத் தகமாகவே ம.தி.மு.க. திகழ்கிறது. தி.மு.க. தலை மையிலான கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் ம.தி.மு.க. அக் கூட்டணியை வலுப்படுத்தவும், தேர்தல் களத்தில் கூட்டணியை வெற்றி பெறச் செய்யவும் உறுதி பூண்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Courtesy : Maalaimalar
,
......
......

