02-19-2006, 04:31 AM
இவோன் Wrote:தூயவன்,
குருவி, இளையோர் பகுதியில் எழுதியிருந்த கருத்துக்களை நீங்கள் படித்திருந்தீர்களா எனக்கு தெரியாது. ஆனால் விசமத்தனமான முறையில் அவர்களின் செயற்பாடுகளை கொச்சைப் படுத்தி சிறு சிறு விடயங்களை ஒருவித எல்லாம் தெரிந்த சுயதம்பட்ட நிலையில் நின்று குருவி எழுதிய அந்தக் கருத்துக்கள் குருவியின் உண்மை நிலையை பலருக்கு படம் போட்டுக் காட்டியிருக்கும். அவரின் அந்தக் கருத்துக்களின் தாக்கம் எந்தளவானது என்பதை உணர்த்தவே அவர் எழுதியவற்றையே ஜெர்மன் தொடர்பான செய்திகளின் கீழ் இணைத்திருந்தோம்.
ஆனால் நீங்கள் அடி எது நுனி எது என்று தெரியாமால் முழுக்கருத்தையும் வாசித்துப் பார்க்காமல் இடையில் நுழைந்து உங்கள் கருத்துக்களை எழுதியிருந்தீர்கள். உண்மையில் அவை குருவியின் கருத்துக்களுக்கு எதிராக எழுதப்பட்டவையே என்ற வகையில் என்னுடைய கருத்துக்களுக்கு வலுச் சேர்த்திருந்தன. நன்றி..
மற்றும் எனது பெயர் குறித்தும் கேள்வி கேட்டிருந்தீர்கள். தமிழ்ல பெயர் வைக்க வக்கில்லை என்று. அதற்கும் நான் பதில் சொல்லியிருந்தேன். தூக்கி விட்டார்கள்.
வணக்கம் இவோன்
உம்மை நீரே மெத்தப்படித்தவன் போலக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டால் அதை உம்மோடு மட்டும் வைத்துக் கொள்ளும்.அது எந்த முட்டாளுக்கும் இருக்கின்ற உரிமை.ஆனால் அதை எங்களிடம் காட்ட வேண்டாம். என்னவோ நீர் தான் எல்லாவற்றையும் படித்து அவர்களின் அவர்களின் ஏக்கங்களை பதிவு செய்வது போல முண்டியடிக்காதீர்!1
நான் படித்து விட்டு எழுதினேனா, அல்லது படிக்காமல் எழுதினேனா என்பது எல்லாம் உமக்கு அவசியமற்றது. உமக்கு அக்கருத்து உடன்பாடில்லை என்றால் அதைப் பற்றி விமர்சிக்கும்.
நான் இதற்குள் எழுவதைப் பற்றி கதைக்க உனக்கு என்ன யோக்கியம் இருக்கின்றது. நீர் எப்பாவது இருந்து விட்டு, இடையிடையே வந்து பல்டி அடிப்பது போலா நாம் இருக்கின்றோம்.
மேலும் உம்முடைய கருத்துக்கள் வலுச்சேர்த்தன என்பதா, இல்லையா என்பது பார்வையாளாருக்குத் தான் வெளிச்சம்.
மேலும் குழப்பியடிக்கின்ற சூட்டத்தை சேர்ந்தவர்களாக இங்கு சிலர் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றார். பொங்கல் ஒன்று கூடால இருந்தாலும் சரி, அல்லது ஆருரன் இணைந்த பரதம் தொடர்பான ஆய்வாக இருந்தாலும் சரி யார் குழப்பவாதிகள் என்று எல்லோருக்கும் தெரியும்.
மேலும் இடையில் புகுந்து வீரம் காட்டும் ஆட்கள் யாரென்றும் தெரியும். எனவே உமது மேதாவித்தனம் உமக்குள் மட்டுமே!!
[size=14] ' '

