02-18-2006, 08:20 AM
இவோன் Wrote:சரி.. தேசியத்துக்கு எதிரானவர் 4 கருத்தக்களை முன்வைக்கின்றார்.
1. தேசியம் கூடாது
2.கருணாவுடன் ஆமி காம்பில் இருத்தல்.
3.ஒற்றையாட்சி முறையில் தீர்வு
4.புலம்பெயர் நாடுகளில் சிலர் தமது சுயநலத்திற்காகவே புலிகிள்ன போராட்டத்தை பயன்படுத்துகின்றனர்.
திரும்பவும் நான் சொன்னதை வாசித்துப் பாருங்கள்.
Quote:தேசியத்திற்கு எதிரானவரும் சரியான சில கருத்துக்களை முன்வைக்கலாம்இங்கே தேசியத்திற்கு எதிரான ஒருவர் சொன்ன நான்காவது கருத்து சில இடங்களில் சரியாயிருக்கிறது. ஆக.. நாம் என்ன செய்ய வேண்டும்.. அவருடைய முதலாவது கருத்து ஏன் சரியில்லை என்று கருத்து வைக்க வேணும். இரண்டாவது கருத்து ஏன் பாதகமானது என கருத்து வைக்க வேண்டும். 3வது கருத்து எதற்காக நடக்க கூடாது என விளக்க வேணும். அதே நேரம் 4 வது கருத்தில உள்ள உண்மைநிலை நாம் உணர்ந்து கொள்ளத் தான் வேணும்.
உங்களுக்கு இன்னும் விளங்கியிருக்காது. பரவாயில்லை. தவிரவும் நான் இங்கு கருத்துக்கள பற்றித்தான் கதைச்சுக் கொண்டிருக்கிறன். அவர் என்ன நிலைப்பாடு உள்ளவராயிருந்தால் என்ன? அவரது கருத்துக்களை பாருங்கள். அதன் பின்னர் அது சரியானதா பிழையானதா என விவாதியுங்கள்..
நான் கேட்டதற்கு எங்கெ பதில்..? தேசியத்திற்கு ஆதரவான ஒருவர் பிழையான கருத்துக்களை சொல்ல மாட்டாரா..?
தலைவா உங்க கருத்துக்கு பதில் சொல்லாமல் என்ர கொம்பியூட்டரை ரேண் - ஓவ் பண்ணமாட்டன் -!
முதலிருந்தே நான் கேட்ட கேள்வியை திரும்ப கேக்கிறன் -
இவோன் அவர்களே-
நீங்கள்-யார்? உங்க நிலைப்பாடு எது-?
இந்த கருத்தை சொல்ல வருவதன் மூலம் -
உங்க நிலைப்பாடு:
1)தேசியத்துக்கு துணையாவா?
2)தேசியத்துக்கு எதிராவா?
3)இரு சார்பு நிலையும் இல்லையா?
4) சந்தடி சாக்கில - சிந்து பாடுறதா?
உங்க நிலைப்பாடை முதல் சொல்லுங்க-!8)
-!
!
!

