02-02-2004, 10:19 AM
நானும் கதை கேள்விப்பட்டேன்.. பிடித்தது கள்ள மட்டையை அல்ல கள்ள மட்டை தயார் செய்ய தகவல் எடுக்கும் கருவியை. அது மிகவும் விலை கூடிய பொருள். அதை வங்கிகளில் காசு எடுக்கும் மெசினில் பொருத்தியிருந்திருக்கிறார்கள். பணத்தை வங்கியில் இருந்து பெற காட்டை உள்ளே நுளைக்கும் இடத்தில் இது பொருத்தப்பட்டிருந்திருக்கிறது. மிக நுணுக்கமாக பார்த்தாலே இது தெரியும். இதை தான் நீங்கள் கூறிய இந்த நபர் பொலிசிடம் கொடுத்திருக்கிறார். அதில் அவரது காட் விபரங்கள் பதிந்திருக்கும் என்ற பயத்தினால்தான் அதை பொலிசீல் ஒப்படைத்தார். அந்த கருவியைதருமாறு மிரட்டிய தமிழ் வாலிபர்கள் பொலீஸ் வரும் வேளையில் நின்றது பொலீசுக்கு வேலையை சுலபமாக்கிவிட்டதாம். ஆனால் இந்த சம்பவத்தை இங்கு கொண்டு வந்தவர்கள் அந்த நபரின் உயிரைப்பற்றி கவலைப்படாது வெறும் செய்தியை கொடுப்பதில் கவனமாயிருந்தது மிக வருத்தமான செயல். ஒரு நபர் என்று செய்தியை தந்திருந்தால் அது பாதுகாப்பாக இருந்திருக்கும். தயவு செய்து எதிர்காலத்தில் செய்தி எழுதும் போது அடுத்தவர் பாதுகாப்பையும் கொஞ்சம் கருத்தில் கொள்ளுங்கள். லண்டனில் நடுக்கும் பழிவாங்கல்கள் உங்களுக்கு தெரிந்தது அல்ல.

