02-16-2006, 01:38 AM
Aravinthan Wrote:175 கருத்துக்கள் எழுதினபின்பும் பலர் என்னைப்புதிய உறுப்பினராக நினைக்கிறார்கள் :roll: :roll: :roll:
varnan Wrote:அஜீவன் அண்ணா நீண்ட விடுமுறைக்கு பிறகு வந்ததால - அரவிந்தனுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார் - அது நியாயம்:wink:
வர்ணன் சொல்வது போல
உங்களை தாமதமாக வரவேற்றேன்.
மற்றவர்களுக்கு நீங்கள் பழமையாக இருந்தாலும்
எனக்கு நீங்கள் புதியவர்தானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பாண்டிச்சேரியில் உள்ள <b>யோகி அரவிந்தர் இல்லம்</b> சென்று
வந்தேன்.
<img src='http://www.gianfrancobertagni.it/images/MATRIMANDIR.JPG' border='0' alt='user posted image'>
இங்கே அமர்ந்து தியானம் செய்யும் போது மனதுக்கு இதமாக இருந்தது.
http://www.meta-religion.com/World_Religio...i_aurobindo.htm
உங்கள் பெயர் அதனால்தானோ என்னவோ கணத்தில் பிடித்துப் போனது.
<b>புல்லாங் குழல் கண்ணன்</b>
ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய போது
வெளியே ஒரு இளைஞன் புல்லாங்குழல் விற்றுக் கொண்டிருந்தான்.
டைட்டானிக் பாடல்களை வேறு இசைத்து
எம்மைக் கவர்ந்தான்.
அவனைக் கடந்து சென்ற போது
அவன் எம்மிடம் புல்லாங் குழல்களை வாங்குமாறு வற்புறுத்தி பின்னாலே தொடர்ந்து கொண்டிருந்தான்.
அவன் எமக்கு தொல்லை தருவதாக எனக்கு பட்டதால்
10 ரூபாயை அவனிடம் கொடுத்து
போய்விடு என்றேன்.
அவன் வாங்க மறுத்தான்.
இன்னும் 5 ரூபாய் கொடுத்து விட்டு
ஒரு புல்லாங்குழலை வாங்கிக் கொள்ளுங்கள்.
இல்லாவிட்டால் இந்தப் பிச்சைக் காசு எனக்கு வேண்டாம்
என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினான்.
எமக்கு வியப்பாகவும் வெட்கமாகவும் இருந்தது.
அவனது செயல்
என்னை மட்டுமல்ல
என்னோடு வந்த அனைவரையுமே
புல்லாங் குழல்களை வாங்க வைத்தது.
அவனை என்னால் மறக்க முடியவில்லை.

