02-15-2006, 11:56 PM
சிவராம் படுகொலையில் இந்திய பேரரசுக்குத் தொடர்பு: தொல்.திருமாவளவன் பகிரங்கக் குற்றச்சாட்டு!
[புதன்கிழமை, 15 பெப்ரவரி 2006, 06:02 ஈழம்] [புதினம் நிருபர்]
மாமனிதர் ஊடகவியலாளர் சிவராம் தராக்கி படுகொலையில் இந்தியப் பேரரசுக்குத் தொடர்பிருப்பதாக தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் தொல். திருமாவளவன் ஆற்றிய நிறைவுரை:
ஜெனீவாவில் பேச்சு நடைபெற உள்ளது. ஜெனீவா பேச்சுக்களுக்கு முன்பாக என்ன நிலைமை இருந்தது?
ஆசியாவில்தான் பேச்சு நடக்க வேண்டும். ஐரோப்பாவில் பேச்சு நடத்த நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று மகிந்த ராஜபக்ச பிடிவாதம் செய்தார்.
ஆனால் விடுதலைப் புலிகளோ ஆசியாவில் நடத்த ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டோம். ஐரோப்பிய மண்ணில் எந்த தேசத்திலும் நடக்கட்டும். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றார்கள். இரண்டு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட சிக்கலில் இறுதியாக விடுதலைப் புலிகள்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ராஜபக்ச விரும்பியபடி ஆசியாவில் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஆசியாவில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று சொன்னால் அது இந்தியாவிலே நடக்கட்டும். இந்தியாவிலே நடந்தால் சிங்கள பேரினவாத அரசுக்கு இந்தியா ஆதரவைப் பெற வேண்டும். இந்தியா ஆதரவாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும்.
இந்தியா ஆதரவாக இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம்.
இந்தியா தங்களுக்கு வெளிப்படையாக ஆதரவாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச விரும்பினார். இன்று இந்தியப் பேரரசு சிங்களப் பேரினவாத அரசுக்கு உறுதுணையாக இருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
எல்லா வகையிலும் அப்படி ஆதரவு நிலையை இந்திய அரசு எடுக்கிற காரணத்தால்தான் விடுதலைச் சிறுத்தைகள் உடனடியாகத் தலையிட்டு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது.
ஈழத்திலே போருக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு டில்லிக்கு வருகிற மகிந்த ராஜபக்சவை தமிழ்நாட்டுக்கு வர அனுமதிக்கமாட்டோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்தது. விமான நிலையத்திலேயே கறுப்புக் கொடி விரட்டியடிப்போம் என்ற தீர்மானத்தை விடுதலைச் சிறுத்தைகள் எடுத்தது.
அதன் அடையாளமாக ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்தோம். அதனைத் தொடர்ந்து பெரியார் திடலிலே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி தலைமையில் மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது. ஆங்காங்கே தமிழ்த் தேசிய சக்திகளால் எழுச்சி உருவானது.
நம்முடைய இந்த எதிர்ப்பெல்லாம் ஒட்டுமொத்தமாக முதல்வரின் கவனத்துக்குச் சென்ற காரணத்தினால், ராஜபக்ச தமிழ்நாட்டுக்கு வந்து இங்குள்ள அமைதிச் சூழலை நான் கெடுக்க விரும்பவில்லை. ஆகையால் அவர் வந்தால் வரவேற்கமாட்டேன் என்று தகவல் சொன்னதால் ராஜபக்ச கேரளாவுக்குப் போய் பாயாசம் குடித்துவிட்டுப் போனார்.
இந்த மாநாடு ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு என்று போடப்பட்டிருந்தாலும் ஈழத்திலே இருக்கிற தமிழர்களைப் பாதுகாக்கிற வலிமை நம்மிடம் இல்லை. அது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனிடத்தில் இருக்கிறது. அந்த ஆற்றல் அவருக்கு இருக்கிறது. ஆனாலும் தமிழர்கள் என்ற முறையிலே நமக்கென்று சில கடமைகள் இருக்கின்றன.
நாம் இந்திய எல்லைக்குள் வாழ்கிற குடிமக்கள். நம்முடைய இந்திய அரசு எடுக்கிற முன்முயற்சிகள் நம்முடைய தேசிய இனத்துக்கு எதிரானதாக அமையுமேயானால் அதைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது.
இன்று தாம்பரம் பக்கத்தில் இருக்கிற இராணுவ பயிற்சிக் கல்லூரியில் சிங்கள இராணுவத்தைச் சார்ந்த பலருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. விடுதலைப் புலிகள் இப்போது வான்படை அமைத்துவிட்டார்கள். வான்படையால் தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்கிற வலிமை சிங்களப் படைகளுக்கு இல்லை என்பதால் அந்தப் பயிற்சியை இந்தியப் பேரரசு தந்து கொண்டிருக்கிறது.
அதைப்போல் பல தாக்குதல்களில் விடுதலைப் புலிகள் கப்பல்களை இழந்திருந்தாலும் இன்று விடுதலைப் புலிகள் கப்பற்படையை வலுப்படுத்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன. தற்போது போர்க்களத்திலே 23 கப்பல்களை விடுதலைப் புலிகள் தயாராக வைத்திருக்கிறார்கள் என்கிற உறுதியான செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட நிலையில் சிங்களப் படைகளுக்கு இந்தியப் பேரரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு பணிகளைச் செய்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற கடமையில் அதைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது.
இந்தியப் பேரரசே! ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கைக் கைவிடுங்கள்! சிங்களப் பேரினவாத அரசுக்கு உறுதுணையாக இருக்கும் போக்கைக் கைவிடுங்கள் என்று எச்சரிக்கை வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கும் இருக்கிறது.
அதைவிட வேதனையான செய்தி.
ஊடகவியலாளர்களின் ஆராய்ச்சியிலே நம்மால் காண முடிகிற செய்தி.
சிவராம் தராக்கி என்ற சிறந்த ஊடகவியலாளர்- இராணுவ களத்திலே நின்று ஆய்வு செய்யக் கூடிய சிறந்த ஆய்வாளர்- திடீரென்று படுகொலை செய்யப்பட்டார்.
அவர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்தியப் பேரரசும் இருக்கிறது என்ற செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் 'றோ' வுக்கு அதிலே தொடர்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதையெல்லாம் உண்மையாக இருக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறோம். அப்படி உண்மை இருக்குமானால் இந்த இனம் விடுதலைக்கு மேலும் பல பின்னடைவுகளைச் சந்திக்க நேரும்.
ஆகவே இந்தியப் பேரரசே!
ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குகிற போக்கை-
தமிழ்த் தேசிய எழுச்சியை நசுக்குகிற போக்கை கைவிடுங்கள் என்று கேட்டுக்கொள்ளக் கூடிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.
சுடரொளி என்ற ஊடக அலுவலகம் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. தமிழ்த் தேசியத்துக்கு உறுதுணையாக இருக்கிற ஊடகதளங்கள் இந்தியப் பேரரசால் குறிவைக்கப்படுகிற என்கிற செய்தியைக் கேட்கின்றபோது நாங்கள் அதிர்ச்சியடைகிறோம். வேதனைப்படுகிறோம்.
ஆகவே இந்தியப் பேரரசை வற்புறுத்தக் கூடிய கடமையும் பொறுப்பும் தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு இருப்பதால்தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம்.
அமெரிக்கப் பேரரசைப் பற்றி இங்கே சொன்னார்கள். அமெரிக்கா என்பது உலக நாடுகளுக்கு எல்லாம் தானே தாதாவாக இருந்து கட்டப் பஞ்சாயத்து செய்ய வேண்டும் என்கிற வெறித்தனமான காலித்தனமான போக்குகளைக் கடைபிடித்து வருகிறது.
அதனால்தான் ஒவ்வொரு முறையும் மூக்கறுக்கப்பட்டு, வால் நறுக்கப்பட்டு அது அலங்கோலமாக, அகோரமாக நின்றாலும்கூட அதன் ஆணவம் இன்னமும் அடங்கவில்லை.
அதனால்தான் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா நிலைப்பாட்டை இந்தியா மேற்கொள்ள வேண்டும்..இல்லையேல்...என்று எச்சரிக்கை விடுக்கக் கூடிய அளவுக்கு ஆணவம் தலைதூக்கி நிற்கிறது.
ஈழப் பிரச்சனையிலும் இதர பிரச்சனைகளிலும் அமெரிக்கா வீம்புக்கு மூக்கை நுழைக்கிற போது இந்தியப் பேரரசு அமைதி காத்ததுதான் காரணம். அப்படி அன்று அமைதி காத்ததன் விளைவால் மூன்றாம் உலக நாடுகளிலேயே வல்லரசாக வளர்ந்துவருகிற இந்தியப் பேரரசை அமெரிக்க வல்லரசு அச்சுறுத்துகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இருப்பதால் இந்த மாநாட்டை நாம் நடத்துகிறோம்.
ஆனானப்பட்ட அமெரிக்க வல்லரசை ஆனையிறவு மீட்சிப் போரிலே அதன் வாலை விடுதலைப் புலிகள் ஒட்ட நறுக்கி விரட்டியத்த வரலாறு உண்டு.
சிங்களப் படையினரால் விடுதலைப் புலிகளை எதிர்கொள்ள முடியவில்லை என்று திணறிய போது களத்திலேயே நின்று சிங்களப் படைகளுக்கு உத்திகளைக் கற்றுத்தந்தது அமெரிக்கப் படை. பல தந்திரங்களை கற்றுத் தந்தது அமெரிக்கப் படை. ஆனாலும் அந்த உத்திகளை விடுதலைப் புலிகள் முறியடித்தார்கள். தந்திரங்களை முறியடித்தார்கள். ஆனையிறவை மீட்டெடுத்தார்கள்.
சிங்களப் படைகளும் அவர்களுக்கு உத்திகளை வகுத்துத் தந்த அமெரிக்கப் படைகளும் பின்னங்கால் பிடரியிலே படக்கூடிய வகையில் ஓடி ஒளிந்தது. இது வரலாறு.
இன்று அமெரிக்காவின் இராணுவப் பயிற்சிப் பள்ளிகளில் எல்லாம் புலிகளின் போர் உத்திகளை வகுப்பாகப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கே தெரியாத உத்தியை இவர்கள் எப்படி புதிது புதிதாகக் கையாள்கிறார்கள்? ஒருமுறை கையாள்கிற உத்தியை மறுமுறை கையாளுவதில்லையே.. யூகம் செய்யக் கூடிய வகையிலேயே உத்திகளைக் கையாள்வதில்லையே? எங்கே கற்றார் பிரபாகரன் இந்த இராணுவ தந்திரங்களை? என்று வியப்பு மேலிட பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்க வல்லரசு.
அமெரிக்காவுக்கு நாமெல்லாம் எச்சரிக்கை விடுக்க வேண்டிய அவசியமில்லை.
வியட்நாமிலே அதன் வால் நறுக்கப்பட்டது போல, கியூபாவிலே மூக்கறுப்பட்டதைப் போல, இன்னும் சுண்டைக்காய் நாடுகள் என்ன என்னவெல்லாம் இருக்கிறதோ அந்த நாடுகளில் எல்லாம் அவமானப்பட்டதைப் போல தமிழீழத்திலும் அமெரிக்க வல்லரசு மூக்கறுபடும். அது நடக்கும். அந்த வல்லமை விடுதலைப் புலிகளுக்கு உண்டு.
ஆனாலும் தமிழர்கள் என்ற கடமை உணர்ச்சி நமக்கு இருக்கிறது.
அமெரிக்க வல்லரசே!
உன் காடைத்தனத்தை,
உன் காலித்தனத்தை,
உன் பொறுக்கித்தனத்தை
ஒரு எல்லையோடு நிறுத்திக் கொள்!
சிங்கள அரசுக்கு உறுதுணையாக இருப்பதைக் கைவிடு!
சிங்களப் பேரினவாத சக்திகள் எவ்வளவு பெரிய சேதத்தைச் சந்தித்த பின்னரும் விடுதலைக்கு இடம்கொடுக்கவில்லை என்று சொன்னால் அதற்கு சிங்களப் பேரினவாத அரசுகூட காரணமில்லை தோழர்களே!
வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால்
அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லரசுகள்தான் ஈழ விடுதலைக்கு முட்டுக்கட்டை போடுகிற சக்திகள்.
சிங்களவர்கள் எப்போதோ தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள். விடுதலைப் புலிகளிடம் சிங்களவர்கள் தோற்று 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அவர்கள் ஆயுதம் எடுத்த 5 ஆண்டுகளிலேயே சிங்களப் படை தோற்றுப் போனது. ஆனால் வல்லரசுகளின் துணையோடு அவர்கள் உயிரோடு இருப்பது போல மீண்டும் களத்திலே காட்டிக்கொள்கிறார்கள்.
அப்படிப்பட்ட இந்த நிலைமையை மாற்றியமைக்கக் கூடிய வல்லமை விடுதலைப் புலிகளுக்கு இருக்கிறது.
விடுதலைப் புலிகள் அறிவிப்புச் செய்திருக்கிறார்கள்.
என்ன அறிவிப்பு?
இந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அதன் பிறகு எங்கள் வல்லமையை நாங்கள் மீண்டும் இந்த உலகுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டியது வரும். ஏற்கனவே நாங்கள் பலமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். இதற்கு மேல் நாங்கள் சமாதானப் பேச்சுவார்த்தையை செவிமடுத்துக் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
உலக நாடுகள் எல்லாம் இன்று என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?
விடுதலைப் புலிகள்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினார்கள். புலிகள்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிங்கள இராணுவத்தை வம்புக்கு இழுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் நடந்த சம்பவங்களையெல்லாம் பொறுக்கி எடுத்து பட்டியலிட்டுப் பாருங்கள்.
புங்குடுதீவு மாணவி தர்சினி படுகொலை யாரால் நடந்தது? ஏன் நிகழ்ந்தது?
இன்று சிங்களப் படை என்ன சொல்கிறது? தர்சினி ஒரு பாலியல் தொழிலாளி- சிங்கள இராணுவத்துக்கு சேவை செய்து கொண்டிருந்தார். ஆகவே அவரது கொலையை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று பெரிதுபடுத்துகிறார்கள். தர்சினியின் மானத்தையும் கேவலப்படுத்துகிற பிரச்சாரத்தை இன்று சிங்கள அரசு கையிலெடுத்திருக்கிறது.
கொடூரமான முறையிலே பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு தர்சினி கொலை செய்யப்பட்டது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் இல்லையா?
திருகோணமலையில் சிங்களப் படையினரால் மாணவர்கள் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்களே..அது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் இல்லையா?
தேவாலயத்திலேயே போய் குடும்பத்தோடு யேசு பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பெரியவர் மாந்த நேயச் செம்மல் ஜோசப் பரராஜசிங்கம் யாரால் எதனால் எப்படிப்பட்ட சூழலில் படுகொலை செய்யப்பட்டார்? அதுவெல்லாம் போர் நிறுத்த ஒப்பந்த மீறல் இல்லையா?
கடந்த ஒரு மாத காலமாக யாழ். தீவிலும் வன்னிப் பிரதேசங்களிலும் ஏராளமான தமிழ் இளைஞர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். கடத்தப்பட்டிருக்கிறார்கள். இதுவரை மனித உரிமைகள் அமைப்பிடம் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவர்களைக் கடத்தியது யார்? காணாமல் போனதன் பின்னணி என்ன? இவையெல்லாம் செய்தது ஒப்பந்தத்தை மீறிய செயல் இல்லையா?
படைக்குள்ளேயே துரோகிகளை உருவாக்கி அந்த துரோகத்துக்குத் துணை போவதை யார் செய்வது?
துரோகிகளிடமிருந்து தப்பித்து அண்மையிலே புலிகளைச் சந்தித்த சிறுவன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். அவன் தெரிவித்திருக்கும் தகவல்கள் போர் நிறுத்த ஒப்பந்த மீறல் இல்லையா?
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது யார்?
விடுதலைப் புலிகளா?
இல்லை.
இதுவெல்லாம் இந்தியப் பேரரசுக்கும் தெரியும். இந்திய உளவுத்துறை 'றோ' வுக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஒரு நிலை இருந்தும் கூட தமிழினத்திற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ள வந்த நெருக்கடிதான் என்ன என்று தமிழ் மக்கள் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கேட்கிறோம்.
தமிழீழத்தை அங்கீகரிப்பதுதான் இந்தியப் பேரரசு இந்த நேரத்தில் செய்ய வேண்டிய மிகச் சிறந்த உத்தி என்று சுட்டிக்காட்ட நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.
கடந்த கால வரலாற்றில் நடந்த சுவடுகளை எல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு,
காணப்படுகிற கறைகளை எல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு இனத்தின் எதிர்காலம்- நாட்டின் எதிர்காலம்- இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு தமிழீழத்தை இந்தியப் பேரரசு அங்கீகரிக்க முன்வர வேண்டும்.
உலக அளவிலேயே மிக மோசமான பயங்கரவாத இயக்கம் என்று சொல்லப்பட்ட ஹமாஸ் இயக்கம் இன்று மக்களால் அங்கீகரிக்கப்பட்ட இயக்கமாக பாலஸ்தீன ஆட்சிப் பீடத்தை கைப்பற்றி இருக்கிறது.
பாலஸ்தீனத்து ஆட்சி அதிகாரத்தில் இன்று அமர்ந்திருப்பவர்கள் உலக நாடுகளால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள்.
132 இடங்களில் 80-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி மக்களின் அங்கீகாரம் பெற்று இன்று அவர்கள் ஆட்சி அதிகாரத்திலே அமர்ந்திருக்கிறார்கள்.
இது உலக அரங்கத்தில் ஏற்பட்டிருக்கிறது ஒரு புதிய திருப்பம்.
இன்று மக்களால் அங்கீகரிக்கப்பட்ட இயக்கமாக விடுதலைப் புலிகள் இயக்கம் இருக்கிறதா? இல்லையா?
பொங்குதமிழ் நிகழ்ச்சிகள் சான்றுகளா இல்லையா?
ஒவ்வொரு தேர்தலிலும் கிடைக்கின்ற விடைகள் சான்றுகளா இல்லையா?
அண்மையிலே நடைபெற்ற தேர்தல் புறக்கணிப்பை அறைகூவலாக விடுத்தார்கள். மக்கள் அதை ஏற்றுக்கொண்டார்களா இல்லையா?
ஆக
மக்கள் இயக்கமாக இன்று அந்த இயக்கம் நடைபோட்டுக் கொண்டிருக்கிற சூழலில்,
அங்கே ஒரு அரசை நடத்திக் கொண்டிருக்கிற சூழலில்-
தமிழீழத்தை இந்தியப் பேரரசு அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் இந்திய நாட்டு மக்கள் நாங்கள் விடுக்கின்ற வேண்டுகோள்.
இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் அகதிகள் முகாம் என்ற பெயரிலே பல்வேறு திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைபட்டுக்கிடக்கிறார்கள்.
இந்த அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு இந்தியப் பேரரசால் எந்த அளவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது?
அடிப்படை உரிமைகள் இல்லை-
மனித உரிமைகள் இல்லை-
அங்கிருந்து வெளியே வர வேண்டுமானாலும் காவல்துறையிடம் சொல்லிவிட்டுப் போக வேண்டும்-
உள்ளே போக வேண்டுமானாலும் காவல்துறையிடம் சொல்லிவிட்டுப் போக வேண்டும்-
வேலைக்குச் செல்வதானாலும் சொல்லிவிட்டுப் போக வேண்டும்-
சம்பளத்தைப் பெற வேண்டுமானாலும் காவல்துறையிடம் சொல்லிவிட்டுப் பெற வேண்டும்-
திரைப்படம் பார்க்க விரும்பினாலும் கூட காவல்துறையிடம் சொல்லிவிட்டுத்தான் போக வேண்டும்!
தமிழகத்துக்கு அகதி முகாம்கள் எல்லாம் திறந்தவெளி சிறைச்சாலைகளாகத்தான் உள்ளன.
அந்த அகதிகளுக்கு என்ன பாதுகாப்பு?
அகதிகளை எவனாவது அடித்தால் - அடித்துக் கொன்றால் எந்தச் சட்டத்தின் கீழ் இங்கே நடவடிக்கை எடுப்பார்கள்?
அகதிகளைக் கொன்றால் தாழ்த்தப்பட்ட தமிழனை கொன்றால் சட்டம் எப்படி கைக்கட்டி இங்கே வேடிக்கை பார்க்குமோ அப்படித்தான் அகதிகளைக் கொன்றாலும் வேடிக்கை பார்க்கும்.
ஆகவே அகதிகளைப் பாதுகாப்பதற்கு என்று ஐக்கிய நாடுகள் பேரவை, அகதிகள் மறுவாழ்வு சபையை நடத்துகிறது.
அது என்ன சொல்கிறது? அதனுடைய விதிகள் என்ன? அதனுடைய விதிமுறைகள் என்ன?
அவற்றையெல்லாம் உலக நாடுகள் அனைத்தும் ஜனநாயக நாடுகள் எல்லாம் மாந்த நேயத்தின் மீது மதிப்பு வைத்துள்ள நாடுகள் எல்லாம் ஐ.நா. பேரவையின் அகதிகள் சங்கத்தின் விதிமுறைகளுக்கு ஒப்புக் கொண்டு அதனை பின்பற்றுகின்றன.
இன்று உலக அரங்கிலே அந்தப் பேரவையின் விதிகளை மதிக்காத ஒரு நாடு இந்திய நாடுதான்.
இந்தியப் பேரரசு மட்டும் ஐ.நாவின் அகதிகள் சங்கத்தின் விதிமுறைகளுக்கு உடன்படவில்லை. கையொப்பமிடவில்லை. ஒப்புதல் அளிக்கவில்லை. பின்பற்றத் தயாராக இல்லை.
அகதிகளை சிறைக் கைதிகளை விட மிக மோசமாக நடத்திக் கொண்டிருக்கிறது.
ஐரோப்பியாவில், கனடாவில் வாழ்கிற புலம்பெயர் தமிழர்கள் கடினப்பட்டாலும்
நாடு இழந்து-
உறவை இழந்து-
தேசத்து இயற்கையை இழந்து-
எங்கோ ஒரு மூலையில் வாழ வேண்டிய கொடுமைக்கு ஆளாகி இருக்கிற நிலையில் இருந்தாலும் கூட-
கனடாவில் இருக்கிற சுதந்திரம்-
லண்டனிலே இருக்கிற சுதந்திரம்-
ஐரோப்பிய நாடுகளிலே வழங்கப்பட்டிருக்கும் மனித உரிமை பாதுகாப்பு
இந்த நாட்டில் இல்லையே...
என்பதுதான் வேதனையளிக்கிறது.
ஆகவேதான் இந்த மாநாட்டிலே அகதிகள் மறுவாழ்வு என்ற தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறோம்.
இந்தியப் பேரரசே!
ஐ.நா. பேரவை காட்டியிருக்கிற வழிகாட்டுதல்களை விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொண்டு இந்தியாவிலே வாழுகிற எல்லா அகதிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
நேரடியாக பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இல்லை.
அவர்களின் பாதுகாப்பை ஐ.நா. பேரவையிடம் ஒப்படையுங்கள். ஐ.நா. பேரவை பார்த்துக் கொள்ளும்.
ஐ.நா.பேரவை அதற்கென உலக அளவிலே நிதி திரட்டி வைத்திருக்கிறது.
அகதிகளுக்கு வாழ்விடம், குடிநீர், மருத்துவம், உடை, வேலை வாய்ப்பு, மனித உரிமை பாதுகாப்பு என அனைத்துக்கும் உறுதி கொடுக்கக் கூடிய பொறுப்பும் கடமையும் ஐ.நா. பேரவைக்கு இருக்கிறது.
ஐ.நா. பேரவையை இந்தியாவுக்குள் அனுமதிக்காமல் தடை செய்திருக்கிறது இந்தியப் பேரரசு. அந்த ஒப்பந்ததில் கையெழுத்துப் போடாத காரணத்தால்தான் அத்தகைய தீர்மானத்தை இந்த மாநாட்டில் முன்மொழிந்திருக்கிறோம்.
ஈழம் ஏற்கனவே மலர்ந்துவிட்டது! அங்கே அரசு நடந்து கொண்டிருக்கிறது!
இப்போது ஜெனீவாவில் 22, 23ஆம் நாட்களில் தொடங்க இருக்கிற பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க அரசு ஒத்துழைப்பு கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறது. இந்தியப் பேரரசும் அதை வரவேற்பதாகச் சொல்லியிருக்கிறது.
அந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு நிலையான தீர்வு கிடைக்கக் கூடிய வகையிலே சர்வதேச சமூகம், ஜனநாயக சக்திகள் ஈழத்திலே போர் நடக்காமல் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது.
ஈழம் வெல்லும்! அதனை காலம் சொல்லும்!!என்றார் திருமாவளவன்.
http://www.eelampage.com/?cn=24224
- புதினம்
[புதன்கிழமை, 15 பெப்ரவரி 2006, 06:02 ஈழம்] [புதினம் நிருபர்]
மாமனிதர் ஊடகவியலாளர் சிவராம் தராக்கி படுகொலையில் இந்தியப் பேரரசுக்குத் தொடர்பிருப்பதாக தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் தொல். திருமாவளவன் ஆற்றிய நிறைவுரை:
ஜெனீவாவில் பேச்சு நடைபெற உள்ளது. ஜெனீவா பேச்சுக்களுக்கு முன்பாக என்ன நிலைமை இருந்தது?
ஆசியாவில்தான் பேச்சு நடக்க வேண்டும். ஐரோப்பாவில் பேச்சு நடத்த நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று மகிந்த ராஜபக்ச பிடிவாதம் செய்தார்.
ஆனால் விடுதலைப் புலிகளோ ஆசியாவில் நடத்த ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டோம். ஐரோப்பிய மண்ணில் எந்த தேசத்திலும் நடக்கட்டும். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றார்கள். இரண்டு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட சிக்கலில் இறுதியாக விடுதலைப் புலிகள்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ராஜபக்ச விரும்பியபடி ஆசியாவில் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஆசியாவில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று சொன்னால் அது இந்தியாவிலே நடக்கட்டும். இந்தியாவிலே நடந்தால் சிங்கள பேரினவாத அரசுக்கு இந்தியா ஆதரவைப் பெற வேண்டும். இந்தியா ஆதரவாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும்.
இந்தியா ஆதரவாக இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம்.
இந்தியா தங்களுக்கு வெளிப்படையாக ஆதரவாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச விரும்பினார். இன்று இந்தியப் பேரரசு சிங்களப் பேரினவாத அரசுக்கு உறுதுணையாக இருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
எல்லா வகையிலும் அப்படி ஆதரவு நிலையை இந்திய அரசு எடுக்கிற காரணத்தால்தான் விடுதலைச் சிறுத்தைகள் உடனடியாகத் தலையிட்டு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது.
ஈழத்திலே போருக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு டில்லிக்கு வருகிற மகிந்த ராஜபக்சவை தமிழ்நாட்டுக்கு வர அனுமதிக்கமாட்டோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்தது. விமான நிலையத்திலேயே கறுப்புக் கொடி விரட்டியடிப்போம் என்ற தீர்மானத்தை விடுதலைச் சிறுத்தைகள் எடுத்தது.
அதன் அடையாளமாக ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்தோம். அதனைத் தொடர்ந்து பெரியார் திடலிலே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி தலைமையில் மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது. ஆங்காங்கே தமிழ்த் தேசிய சக்திகளால் எழுச்சி உருவானது.
நம்முடைய இந்த எதிர்ப்பெல்லாம் ஒட்டுமொத்தமாக முதல்வரின் கவனத்துக்குச் சென்ற காரணத்தினால், ராஜபக்ச தமிழ்நாட்டுக்கு வந்து இங்குள்ள அமைதிச் சூழலை நான் கெடுக்க விரும்பவில்லை. ஆகையால் அவர் வந்தால் வரவேற்கமாட்டேன் என்று தகவல் சொன்னதால் ராஜபக்ச கேரளாவுக்குப் போய் பாயாசம் குடித்துவிட்டுப் போனார்.
இந்த மாநாடு ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு என்று போடப்பட்டிருந்தாலும் ஈழத்திலே இருக்கிற தமிழர்களைப் பாதுகாக்கிற வலிமை நம்மிடம் இல்லை. அது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனிடத்தில் இருக்கிறது. அந்த ஆற்றல் அவருக்கு இருக்கிறது. ஆனாலும் தமிழர்கள் என்ற முறையிலே நமக்கென்று சில கடமைகள் இருக்கின்றன.
நாம் இந்திய எல்லைக்குள் வாழ்கிற குடிமக்கள். நம்முடைய இந்திய அரசு எடுக்கிற முன்முயற்சிகள் நம்முடைய தேசிய இனத்துக்கு எதிரானதாக அமையுமேயானால் அதைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது.
இன்று தாம்பரம் பக்கத்தில் இருக்கிற இராணுவ பயிற்சிக் கல்லூரியில் சிங்கள இராணுவத்தைச் சார்ந்த பலருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. விடுதலைப் புலிகள் இப்போது வான்படை அமைத்துவிட்டார்கள். வான்படையால் தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்கிற வலிமை சிங்களப் படைகளுக்கு இல்லை என்பதால் அந்தப் பயிற்சியை இந்தியப் பேரரசு தந்து கொண்டிருக்கிறது.
அதைப்போல் பல தாக்குதல்களில் விடுதலைப் புலிகள் கப்பல்களை இழந்திருந்தாலும் இன்று விடுதலைப் புலிகள் கப்பற்படையை வலுப்படுத்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன. தற்போது போர்க்களத்திலே 23 கப்பல்களை விடுதலைப் புலிகள் தயாராக வைத்திருக்கிறார்கள் என்கிற உறுதியான செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட நிலையில் சிங்களப் படைகளுக்கு இந்தியப் பேரரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு பணிகளைச் செய்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற கடமையில் அதைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது.
இந்தியப் பேரரசே! ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கைக் கைவிடுங்கள்! சிங்களப் பேரினவாத அரசுக்கு உறுதுணையாக இருக்கும் போக்கைக் கைவிடுங்கள் என்று எச்சரிக்கை வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கும் இருக்கிறது.
அதைவிட வேதனையான செய்தி.
ஊடகவியலாளர்களின் ஆராய்ச்சியிலே நம்மால் காண முடிகிற செய்தி.
சிவராம் தராக்கி என்ற சிறந்த ஊடகவியலாளர்- இராணுவ களத்திலே நின்று ஆய்வு செய்யக் கூடிய சிறந்த ஆய்வாளர்- திடீரென்று படுகொலை செய்யப்பட்டார்.
அவர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்தியப் பேரரசும் இருக்கிறது என்ற செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவின் 'றோ' வுக்கு அதிலே தொடர்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதையெல்லாம் உண்மையாக இருக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறோம். அப்படி உண்மை இருக்குமானால் இந்த இனம் விடுதலைக்கு மேலும் பல பின்னடைவுகளைச் சந்திக்க நேரும்.
ஆகவே இந்தியப் பேரரசே!
ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குகிற போக்கை-
தமிழ்த் தேசிய எழுச்சியை நசுக்குகிற போக்கை கைவிடுங்கள் என்று கேட்டுக்கொள்ளக் கூடிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.
சுடரொளி என்ற ஊடக அலுவலகம் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. தமிழ்த் தேசியத்துக்கு உறுதுணையாக இருக்கிற ஊடகதளங்கள் இந்தியப் பேரரசால் குறிவைக்கப்படுகிற என்கிற செய்தியைக் கேட்கின்றபோது நாங்கள் அதிர்ச்சியடைகிறோம். வேதனைப்படுகிறோம்.
ஆகவே இந்தியப் பேரரசை வற்புறுத்தக் கூடிய கடமையும் பொறுப்பும் தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு இருப்பதால்தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம்.
அமெரிக்கப் பேரரசைப் பற்றி இங்கே சொன்னார்கள். அமெரிக்கா என்பது உலக நாடுகளுக்கு எல்லாம் தானே தாதாவாக இருந்து கட்டப் பஞ்சாயத்து செய்ய வேண்டும் என்கிற வெறித்தனமான காலித்தனமான போக்குகளைக் கடைபிடித்து வருகிறது.
அதனால்தான் ஒவ்வொரு முறையும் மூக்கறுக்கப்பட்டு, வால் நறுக்கப்பட்டு அது அலங்கோலமாக, அகோரமாக நின்றாலும்கூட அதன் ஆணவம் இன்னமும் அடங்கவில்லை.
அதனால்தான் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா நிலைப்பாட்டை இந்தியா மேற்கொள்ள வேண்டும்..இல்லையேல்...என்று எச்சரிக்கை விடுக்கக் கூடிய அளவுக்கு ஆணவம் தலைதூக்கி நிற்கிறது.
ஈழப் பிரச்சனையிலும் இதர பிரச்சனைகளிலும் அமெரிக்கா வீம்புக்கு மூக்கை நுழைக்கிற போது இந்தியப் பேரரசு அமைதி காத்ததுதான் காரணம். அப்படி அன்று அமைதி காத்ததன் விளைவால் மூன்றாம் உலக நாடுகளிலேயே வல்லரசாக வளர்ந்துவருகிற இந்தியப் பேரரசை அமெரிக்க வல்லரசு அச்சுறுத்துகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இருப்பதால் இந்த மாநாட்டை நாம் நடத்துகிறோம்.
ஆனானப்பட்ட அமெரிக்க வல்லரசை ஆனையிறவு மீட்சிப் போரிலே அதன் வாலை விடுதலைப் புலிகள் ஒட்ட நறுக்கி விரட்டியத்த வரலாறு உண்டு.
சிங்களப் படையினரால் விடுதலைப் புலிகளை எதிர்கொள்ள முடியவில்லை என்று திணறிய போது களத்திலேயே நின்று சிங்களப் படைகளுக்கு உத்திகளைக் கற்றுத்தந்தது அமெரிக்கப் படை. பல தந்திரங்களை கற்றுத் தந்தது அமெரிக்கப் படை. ஆனாலும் அந்த உத்திகளை விடுதலைப் புலிகள் முறியடித்தார்கள். தந்திரங்களை முறியடித்தார்கள். ஆனையிறவை மீட்டெடுத்தார்கள்.
சிங்களப் படைகளும் அவர்களுக்கு உத்திகளை வகுத்துத் தந்த அமெரிக்கப் படைகளும் பின்னங்கால் பிடரியிலே படக்கூடிய வகையில் ஓடி ஒளிந்தது. இது வரலாறு.
இன்று அமெரிக்காவின் இராணுவப் பயிற்சிப் பள்ளிகளில் எல்லாம் புலிகளின் போர் உத்திகளை வகுப்பாகப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கே தெரியாத உத்தியை இவர்கள் எப்படி புதிது புதிதாகக் கையாள்கிறார்கள்? ஒருமுறை கையாள்கிற உத்தியை மறுமுறை கையாளுவதில்லையே.. யூகம் செய்யக் கூடிய வகையிலேயே உத்திகளைக் கையாள்வதில்லையே? எங்கே கற்றார் பிரபாகரன் இந்த இராணுவ தந்திரங்களை? என்று வியப்பு மேலிட பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்க வல்லரசு.
அமெரிக்காவுக்கு நாமெல்லாம் எச்சரிக்கை விடுக்க வேண்டிய அவசியமில்லை.
வியட்நாமிலே அதன் வால் நறுக்கப்பட்டது போல, கியூபாவிலே மூக்கறுப்பட்டதைப் போல, இன்னும் சுண்டைக்காய் நாடுகள் என்ன என்னவெல்லாம் இருக்கிறதோ அந்த நாடுகளில் எல்லாம் அவமானப்பட்டதைப் போல தமிழீழத்திலும் அமெரிக்க வல்லரசு மூக்கறுபடும். அது நடக்கும். அந்த வல்லமை விடுதலைப் புலிகளுக்கு உண்டு.
ஆனாலும் தமிழர்கள் என்ற கடமை உணர்ச்சி நமக்கு இருக்கிறது.
அமெரிக்க வல்லரசே!
உன் காடைத்தனத்தை,
உன் காலித்தனத்தை,
உன் பொறுக்கித்தனத்தை
ஒரு எல்லையோடு நிறுத்திக் கொள்!
சிங்கள அரசுக்கு உறுதுணையாக இருப்பதைக் கைவிடு!
சிங்களப் பேரினவாத சக்திகள் எவ்வளவு பெரிய சேதத்தைச் சந்தித்த பின்னரும் விடுதலைக்கு இடம்கொடுக்கவில்லை என்று சொன்னால் அதற்கு சிங்களப் பேரினவாத அரசுகூட காரணமில்லை தோழர்களே!
வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால்
அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லரசுகள்தான் ஈழ விடுதலைக்கு முட்டுக்கட்டை போடுகிற சக்திகள்.
சிங்களவர்கள் எப்போதோ தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள். விடுதலைப் புலிகளிடம் சிங்களவர்கள் தோற்று 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அவர்கள் ஆயுதம் எடுத்த 5 ஆண்டுகளிலேயே சிங்களப் படை தோற்றுப் போனது. ஆனால் வல்லரசுகளின் துணையோடு அவர்கள் உயிரோடு இருப்பது போல மீண்டும் களத்திலே காட்டிக்கொள்கிறார்கள்.
அப்படிப்பட்ட இந்த நிலைமையை மாற்றியமைக்கக் கூடிய வல்லமை விடுதலைப் புலிகளுக்கு இருக்கிறது.
விடுதலைப் புலிகள் அறிவிப்புச் செய்திருக்கிறார்கள்.
என்ன அறிவிப்பு?
இந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அதன் பிறகு எங்கள் வல்லமையை நாங்கள் மீண்டும் இந்த உலகுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டியது வரும். ஏற்கனவே நாங்கள் பலமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். இதற்கு மேல் நாங்கள் சமாதானப் பேச்சுவார்த்தையை செவிமடுத்துக் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
உலக நாடுகள் எல்லாம் இன்று என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?
விடுதலைப் புலிகள்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினார்கள். புலிகள்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிங்கள இராணுவத்தை வம்புக்கு இழுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் நடந்த சம்பவங்களையெல்லாம் பொறுக்கி எடுத்து பட்டியலிட்டுப் பாருங்கள்.
புங்குடுதீவு மாணவி தர்சினி படுகொலை யாரால் நடந்தது? ஏன் நிகழ்ந்தது?
இன்று சிங்களப் படை என்ன சொல்கிறது? தர்சினி ஒரு பாலியல் தொழிலாளி- சிங்கள இராணுவத்துக்கு சேவை செய்து கொண்டிருந்தார். ஆகவே அவரது கொலையை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று பெரிதுபடுத்துகிறார்கள். தர்சினியின் மானத்தையும் கேவலப்படுத்துகிற பிரச்சாரத்தை இன்று சிங்கள அரசு கையிலெடுத்திருக்கிறது.
கொடூரமான முறையிலே பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு தர்சினி கொலை செய்யப்பட்டது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் இல்லையா?
திருகோணமலையில் சிங்களப் படையினரால் மாணவர்கள் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்களே..அது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் இல்லையா?
தேவாலயத்திலேயே போய் குடும்பத்தோடு யேசு பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பெரியவர் மாந்த நேயச் செம்மல் ஜோசப் பரராஜசிங்கம் யாரால் எதனால் எப்படிப்பட்ட சூழலில் படுகொலை செய்யப்பட்டார்? அதுவெல்லாம் போர் நிறுத்த ஒப்பந்த மீறல் இல்லையா?
கடந்த ஒரு மாத காலமாக யாழ். தீவிலும் வன்னிப் பிரதேசங்களிலும் ஏராளமான தமிழ் இளைஞர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். கடத்தப்பட்டிருக்கிறார்கள். இதுவரை மனித உரிமைகள் அமைப்பிடம் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவர்களைக் கடத்தியது யார்? காணாமல் போனதன் பின்னணி என்ன? இவையெல்லாம் செய்தது ஒப்பந்தத்தை மீறிய செயல் இல்லையா?
படைக்குள்ளேயே துரோகிகளை உருவாக்கி அந்த துரோகத்துக்குத் துணை போவதை யார் செய்வது?
துரோகிகளிடமிருந்து தப்பித்து அண்மையிலே புலிகளைச் சந்தித்த சிறுவன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். அவன் தெரிவித்திருக்கும் தகவல்கள் போர் நிறுத்த ஒப்பந்த மீறல் இல்லையா?
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது யார்?
விடுதலைப் புலிகளா?
இல்லை.
இதுவெல்லாம் இந்தியப் பேரரசுக்கும் தெரியும். இந்திய உளவுத்துறை 'றோ' வுக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஒரு நிலை இருந்தும் கூட தமிழினத்திற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ள வந்த நெருக்கடிதான் என்ன என்று தமிழ் மக்கள் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கேட்கிறோம்.
தமிழீழத்தை அங்கீகரிப்பதுதான் இந்தியப் பேரரசு இந்த நேரத்தில் செய்ய வேண்டிய மிகச் சிறந்த உத்தி என்று சுட்டிக்காட்ட நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.
கடந்த கால வரலாற்றில் நடந்த சுவடுகளை எல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு,
காணப்படுகிற கறைகளை எல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு இனத்தின் எதிர்காலம்- நாட்டின் எதிர்காலம்- இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு தமிழீழத்தை இந்தியப் பேரரசு அங்கீகரிக்க முன்வர வேண்டும்.
உலக அளவிலேயே மிக மோசமான பயங்கரவாத இயக்கம் என்று சொல்லப்பட்ட ஹமாஸ் இயக்கம் இன்று மக்களால் அங்கீகரிக்கப்பட்ட இயக்கமாக பாலஸ்தீன ஆட்சிப் பீடத்தை கைப்பற்றி இருக்கிறது.
பாலஸ்தீனத்து ஆட்சி அதிகாரத்தில் இன்று அமர்ந்திருப்பவர்கள் உலக நாடுகளால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள்.
132 இடங்களில் 80-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி மக்களின் அங்கீகாரம் பெற்று இன்று அவர்கள் ஆட்சி அதிகாரத்திலே அமர்ந்திருக்கிறார்கள்.
இது உலக அரங்கத்தில் ஏற்பட்டிருக்கிறது ஒரு புதிய திருப்பம்.
இன்று மக்களால் அங்கீகரிக்கப்பட்ட இயக்கமாக விடுதலைப் புலிகள் இயக்கம் இருக்கிறதா? இல்லையா?
பொங்குதமிழ் நிகழ்ச்சிகள் சான்றுகளா இல்லையா?
ஒவ்வொரு தேர்தலிலும் கிடைக்கின்ற விடைகள் சான்றுகளா இல்லையா?
அண்மையிலே நடைபெற்ற தேர்தல் புறக்கணிப்பை அறைகூவலாக விடுத்தார்கள். மக்கள் அதை ஏற்றுக்கொண்டார்களா இல்லையா?
ஆக
மக்கள் இயக்கமாக இன்று அந்த இயக்கம் நடைபோட்டுக் கொண்டிருக்கிற சூழலில்,
அங்கே ஒரு அரசை நடத்திக் கொண்டிருக்கிற சூழலில்-
தமிழீழத்தை இந்தியப் பேரரசு அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் இந்திய நாட்டு மக்கள் நாங்கள் விடுக்கின்ற வேண்டுகோள்.
இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் அகதிகள் முகாம் என்ற பெயரிலே பல்வேறு திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைபட்டுக்கிடக்கிறார்கள்.
இந்த அகதிகளுக்கு உரிய பாதுகாப்பு இந்தியப் பேரரசால் எந்த அளவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது?
அடிப்படை உரிமைகள் இல்லை-
மனித உரிமைகள் இல்லை-
அங்கிருந்து வெளியே வர வேண்டுமானாலும் காவல்துறையிடம் சொல்லிவிட்டுப் போக வேண்டும்-
உள்ளே போக வேண்டுமானாலும் காவல்துறையிடம் சொல்லிவிட்டுப் போக வேண்டும்-
வேலைக்குச் செல்வதானாலும் சொல்லிவிட்டுப் போக வேண்டும்-
சம்பளத்தைப் பெற வேண்டுமானாலும் காவல்துறையிடம் சொல்லிவிட்டுப் பெற வேண்டும்-
திரைப்படம் பார்க்க விரும்பினாலும் கூட காவல்துறையிடம் சொல்லிவிட்டுத்தான் போக வேண்டும்!
தமிழகத்துக்கு அகதி முகாம்கள் எல்லாம் திறந்தவெளி சிறைச்சாலைகளாகத்தான் உள்ளன.
அந்த அகதிகளுக்கு என்ன பாதுகாப்பு?
அகதிகளை எவனாவது அடித்தால் - அடித்துக் கொன்றால் எந்தச் சட்டத்தின் கீழ் இங்கே நடவடிக்கை எடுப்பார்கள்?
அகதிகளைக் கொன்றால் தாழ்த்தப்பட்ட தமிழனை கொன்றால் சட்டம் எப்படி கைக்கட்டி இங்கே வேடிக்கை பார்க்குமோ அப்படித்தான் அகதிகளைக் கொன்றாலும் வேடிக்கை பார்க்கும்.
ஆகவே அகதிகளைப் பாதுகாப்பதற்கு என்று ஐக்கிய நாடுகள் பேரவை, அகதிகள் மறுவாழ்வு சபையை நடத்துகிறது.
அது என்ன சொல்கிறது? அதனுடைய விதிகள் என்ன? அதனுடைய விதிமுறைகள் என்ன?
அவற்றையெல்லாம் உலக நாடுகள் அனைத்தும் ஜனநாயக நாடுகள் எல்லாம் மாந்த நேயத்தின் மீது மதிப்பு வைத்துள்ள நாடுகள் எல்லாம் ஐ.நா. பேரவையின் அகதிகள் சங்கத்தின் விதிமுறைகளுக்கு ஒப்புக் கொண்டு அதனை பின்பற்றுகின்றன.
இன்று உலக அரங்கிலே அந்தப் பேரவையின் விதிகளை மதிக்காத ஒரு நாடு இந்திய நாடுதான்.
இந்தியப் பேரரசு மட்டும் ஐ.நாவின் அகதிகள் சங்கத்தின் விதிமுறைகளுக்கு உடன்படவில்லை. கையொப்பமிடவில்லை. ஒப்புதல் அளிக்கவில்லை. பின்பற்றத் தயாராக இல்லை.
அகதிகளை சிறைக் கைதிகளை விட மிக மோசமாக நடத்திக் கொண்டிருக்கிறது.
ஐரோப்பியாவில், கனடாவில் வாழ்கிற புலம்பெயர் தமிழர்கள் கடினப்பட்டாலும்
நாடு இழந்து-
உறவை இழந்து-
தேசத்து இயற்கையை இழந்து-
எங்கோ ஒரு மூலையில் வாழ வேண்டிய கொடுமைக்கு ஆளாகி இருக்கிற நிலையில் இருந்தாலும் கூட-
கனடாவில் இருக்கிற சுதந்திரம்-
லண்டனிலே இருக்கிற சுதந்திரம்-
ஐரோப்பிய நாடுகளிலே வழங்கப்பட்டிருக்கும் மனித உரிமை பாதுகாப்பு
இந்த நாட்டில் இல்லையே...
என்பதுதான் வேதனையளிக்கிறது.
ஆகவேதான் இந்த மாநாட்டிலே அகதிகள் மறுவாழ்வு என்ற தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறோம்.
இந்தியப் பேரரசே!
ஐ.நா. பேரவை காட்டியிருக்கிற வழிகாட்டுதல்களை விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொண்டு இந்தியாவிலே வாழுகிற எல்லா அகதிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
நேரடியாக பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இல்லை.
அவர்களின் பாதுகாப்பை ஐ.நா. பேரவையிடம் ஒப்படையுங்கள். ஐ.நா. பேரவை பார்த்துக் கொள்ளும்.
ஐ.நா.பேரவை அதற்கென உலக அளவிலே நிதி திரட்டி வைத்திருக்கிறது.
அகதிகளுக்கு வாழ்விடம், குடிநீர், மருத்துவம், உடை, வேலை வாய்ப்பு, மனித உரிமை பாதுகாப்பு என அனைத்துக்கும் உறுதி கொடுக்கக் கூடிய பொறுப்பும் கடமையும் ஐ.நா. பேரவைக்கு இருக்கிறது.
ஐ.நா. பேரவையை இந்தியாவுக்குள் அனுமதிக்காமல் தடை செய்திருக்கிறது இந்தியப் பேரரசு. அந்த ஒப்பந்ததில் கையெழுத்துப் போடாத காரணத்தால்தான் அத்தகைய தீர்மானத்தை இந்த மாநாட்டில் முன்மொழிந்திருக்கிறோம்.
ஈழம் ஏற்கனவே மலர்ந்துவிட்டது! அங்கே அரசு நடந்து கொண்டிருக்கிறது!
இப்போது ஜெனீவாவில் 22, 23ஆம் நாட்களில் தொடங்க இருக்கிற பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க அரசு ஒத்துழைப்பு கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறது. இந்தியப் பேரரசும் அதை வரவேற்பதாகச் சொல்லியிருக்கிறது.
அந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு நிலையான தீர்வு கிடைக்கக் கூடிய வகையிலே சர்வதேச சமூகம், ஜனநாயக சக்திகள் ஈழத்திலே போர் நடக்காமல் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுக்கிறது.
ஈழம் வெல்லும்! அதனை காலம் சொல்லும்!!என்றார் திருமாவளவன்.
http://www.eelampage.com/?cn=24224
- புதினம்

