02-11-2006, 07:48 AM
<b>அச்சுறுத்தலை மறைக்க நாடகமாடும் இராணுவம்</b>
யாழ் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்திலிருந்து இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் குழுவினரது அச்சுறுத்தலால் பெருந்தொகையாக மக்கள் வெளியேறிவருவதை மறைக்க துண்டுப் பிரசுர நாடகத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
சிறிலங்கா இராணுவம், இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் பொதுமக்கள் மீது மேற்கொண்ட அச்சுறுத்தல் மற்றும் துப்பாக்கிச் சூடுகளால் பொதுமக்கள் 25,000 பேருக்கு மேல் இடம் பெயர்ந்து வன்னி மாவட்டத்திற்குச் சென்றுள்ளனர்.
இடம்பெயர்ந்தோர் பற்றி பிழையான தகவல்கள் அடங்கிய விவரங்களை துண்டுப் பிரசுரங்களை யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
இத்துண்டுப் பிரசுரத்தில் உண்மைக்குப் புறம்பாக பல விடயங்களைத் தெரிவித்துள்ளதுடன் இரவுடன் இரவாக பொது மக்கள் கூடும் இடங்களில் ஒட்டிவிட்டும் சென்றுள்ளனர்.
அத்துண்டுப் பிரசுரம் விவரம்:
தற்போது யாழ்ப்பாணத்தில் நிலவும் நெருக்கடி காரணமாக சாதாரண தமிழ் மக்கள் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் தமது இருப்பிடங்களைக் கைவிட்டு பாதுகாப்பற்ற பகுதிக்கு இடம்பெயர்ந்து வருவதாக மக்கள் விரோத குழுவொன்று உலக நாடுகளில் பிரச்சாரத்தை மேற்கொள்ள முயற்சிப்பதை அவதானிக்க முடிகின்றது.
ஆனால் மாவீரர் மற்றும் போராளிகள் குடும்பத்தைச் சேர்ந்த சிலரே இடம்பெயர்ந்துள்ளதாக அறிய முடிகின்றது. கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிதாக இந்த அமைப்பு மேற்கொண்ட படுகொலைகள் மற்றும் கொடுமைகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்காலத்தில் இந்த அமைப்பினருக்கு எதிராக செயல்படுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே அந்த குடும்பங்கள் தற்போது இடம்பெயர்ந்து செல்வதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குழுவினருக்கு சமுதாயத்தில் முகம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தமது இருப்பிடங்களைக் கைவிட்டு யாரும் இடம்பெயரத் தேவையில்லை என்பதுடன் சகல மக்களையும் பாதுகாப்பதற்குப் பாதுகாப்புப் படையினர் தயாராக இருப்பதுடன், இந்த அமைப்பினால் கடத்திச் செல்லப்பட்ட பிள்ளைகளை மீண்டும் கடத்தித் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியத் தருகிறோம்
<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
யாழ் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்திலிருந்து இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் குழுவினரது அச்சுறுத்தலால் பெருந்தொகையாக மக்கள் வெளியேறிவருவதை மறைக்க துண்டுப் பிரசுர நாடகத்தை செயல்படுத்தி வருகின்றனர்.
சிறிலங்கா இராணுவம், இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் பொதுமக்கள் மீது மேற்கொண்ட அச்சுறுத்தல் மற்றும் துப்பாக்கிச் சூடுகளால் பொதுமக்கள் 25,000 பேருக்கு மேல் இடம் பெயர்ந்து வன்னி மாவட்டத்திற்குச் சென்றுள்ளனர்.
இடம்பெயர்ந்தோர் பற்றி பிழையான தகவல்கள் அடங்கிய விவரங்களை துண்டுப் பிரசுரங்களை யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
இத்துண்டுப் பிரசுரத்தில் உண்மைக்குப் புறம்பாக பல விடயங்களைத் தெரிவித்துள்ளதுடன் இரவுடன் இரவாக பொது மக்கள் கூடும் இடங்களில் ஒட்டிவிட்டும் சென்றுள்ளனர்.
அத்துண்டுப் பிரசுரம் விவரம்:
தற்போது யாழ்ப்பாணத்தில் நிலவும் நெருக்கடி காரணமாக சாதாரண தமிழ் மக்கள் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் தமது இருப்பிடங்களைக் கைவிட்டு பாதுகாப்பற்ற பகுதிக்கு இடம்பெயர்ந்து வருவதாக மக்கள் விரோத குழுவொன்று உலக நாடுகளில் பிரச்சாரத்தை மேற்கொள்ள முயற்சிப்பதை அவதானிக்க முடிகின்றது.
ஆனால் மாவீரர் மற்றும் போராளிகள் குடும்பத்தைச் சேர்ந்த சிலரே இடம்பெயர்ந்துள்ளதாக அறிய முடிகின்றது. கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிதாக இந்த அமைப்பு மேற்கொண்ட படுகொலைகள் மற்றும் கொடுமைகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்காலத்தில் இந்த அமைப்பினருக்கு எதிராக செயல்படுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே அந்த குடும்பங்கள் தற்போது இடம்பெயர்ந்து செல்வதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குழுவினருக்கு சமுதாயத்தில் முகம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தமது இருப்பிடங்களைக் கைவிட்டு யாரும் இடம்பெயரத் தேவையில்லை என்பதுடன் சகல மக்களையும் பாதுகாப்பதற்குப் பாதுகாப்புப் படையினர் தயாராக இருப்பதுடன், இந்த அமைப்பினால் கடத்திச் செல்லப்பட்ட பிள்ளைகளை மீண்டும் கடத்தித் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியத் தருகிறோம்
<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
"
"
"

