02-11-2006, 06:08 AM
<b>யாழில் எந்தத் தாக்குதலுக்கும் முகம் கொடுக்க இராணுவம் தயார்: சரத் பொன்சேகா </b>
யாழ்ப்பாணத்தில் எந்தத் தாக்குதலுக்கும் முகம் கொடுக்க சிறிலங்கா இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
யாழ்ப்பாண பாதுகாப்பு நிலைமைகளை நேற்று வெள்ளிக்கிழமை சரத் பொன்சேகா பார்வையிட்டார்.
அதன் பின்பு அவர் கூறியதாவது:
ஜெனீவா பேச்சுக்களுக்கான அறிவிப்புக்குப் பின்னர் படையினர் மீதான தாக்குதல் செய்தி எதுவும் வரவில்லை. யாழ். குடாவில் எந்தச் சூழலுக்கும் முகம் கொடுக்கும் வகையில் இராணுவம் தயார் நிலையில் இருப்பது திருப்தியளிக்கிறது.
யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதில் எமது பங்களிப்பை நாம் செய்திருக்கிறோம். ஜெனீவா பேச்சுக்களுக்கான அறிவிப்பையடுத்து விடுதலைப் புலிகளும் படையினருக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
இருந்தபோதும் நாம் குடாநாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அலட்சியமாக இருக்கவில்லை. எந்த நேரத்திலும் எந்தத் தாக்குதலுக்கும் முகம் கொடுக்க தயாராக உள்ளோம்.
யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளானது பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு உதவியாக உள்ளது. இந்தத் தேடுதல் நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு சிறிய அளவில்தான் தொந்தரவு உள்ளது என்றார் அவர்.
யாழ்ப்பாணத்தில் தளபதிகளுடன் அவர் சந்தித்து உரையாடினார். தேடுதல் நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிற ஆயுதங்களையும் அவர் பார்வையிட்டதாக இராணுவத் தரப்பினர் தெரிவித்தனர்.
<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
யாழ்ப்பாணத்தில் எந்தத் தாக்குதலுக்கும் முகம் கொடுக்க சிறிலங்கா இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
யாழ்ப்பாண பாதுகாப்பு நிலைமைகளை நேற்று வெள்ளிக்கிழமை சரத் பொன்சேகா பார்வையிட்டார்.
அதன் பின்பு அவர் கூறியதாவது:
ஜெனீவா பேச்சுக்களுக்கான அறிவிப்புக்குப் பின்னர் படையினர் மீதான தாக்குதல் செய்தி எதுவும் வரவில்லை. யாழ். குடாவில் எந்தச் சூழலுக்கும் முகம் கொடுக்கும் வகையில் இராணுவம் தயார் நிலையில் இருப்பது திருப்தியளிக்கிறது.
யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதில் எமது பங்களிப்பை நாம் செய்திருக்கிறோம். ஜெனீவா பேச்சுக்களுக்கான அறிவிப்பையடுத்து விடுதலைப் புலிகளும் படையினருக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
இருந்தபோதும் நாம் குடாநாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அலட்சியமாக இருக்கவில்லை. எந்த நேரத்திலும் எந்தத் தாக்குதலுக்கும் முகம் கொடுக்க தயாராக உள்ளோம்.
யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளானது பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு உதவியாக உள்ளது. இந்தத் தேடுதல் நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு சிறிய அளவில்தான் தொந்தரவு உள்ளது என்றார் அவர்.
யாழ்ப்பாணத்தில் தளபதிகளுடன் அவர் சந்தித்து உரையாடினார். தேடுதல் நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிற ஆயுதங்களையும் அவர் பார்வையிட்டதாக இராணுவத் தரப்பினர் தெரிவித்தனர்.
<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
"
"
"

