02-11-2006, 06:01 AM
<b>புதுவையில் பெப்ரவரி 18-ல் ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு </b>
இந்தியாவின் புதுவை மாநிலத்தில் பெப்ரவரி 18 ஆம் நாள் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது.
புதுவை மாநில தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
புதுவை மாநில தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவரும் தமிழீழ விடுதலை ஆதரவாளருமான லோகு. அய்யப்பன் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறார்.
இந்த மாநாட்டில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு செயல் களத்தில் ஆதரவு தெரிவித்து சிறையேகிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தமிழ்நாட்டுத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, பொதுச் செயலாளர்களில் ஒருவரான கோவை கு.இராமகிருட்டிணன் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்ட பரப்புரையாளர்களில் ஒருவரான விடுதலை க.இராசேந்திரன், அரச பயங்கரவாதத்துக்கு எதிராக நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்து செயற்பட்டமைக்காக தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி விடுதலையான முன்னை நாள் திலீபன் மன்ற நிறுவனரும் தமிழ் தமிழர் இயக்கத்தின் பொதுச் செயலாளருமான தோழர் தியாகு, மனித உரிமைச் செயற்பாட்டாளர் சுகுமாரன், தமிழர் தேசிய இயக்கத்தின் நிர்வாகி அழகிரி மற்றும் மீனவர், ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
<b>இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறியது யார்? </b>என்பதை விவரிக்கும் <i><b>விடுதலை க. ராசேந்திரனின் விளக்க நூலும் </b></i>இந்த மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது என்று எமது புதுவை செய்தியாளர் தெரிவிக்கிறார்
<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
இந்தியாவின் புதுவை மாநிலத்தில் பெப்ரவரி 18 ஆம் நாள் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது.
புதுவை மாநில தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
புதுவை மாநில தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவரும் தமிழீழ விடுதலை ஆதரவாளருமான லோகு. அய்யப்பன் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறார்.
இந்த மாநாட்டில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு செயல் களத்தில் ஆதரவு தெரிவித்து சிறையேகிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தமிழ்நாட்டுத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, பொதுச் செயலாளர்களில் ஒருவரான கோவை கு.இராமகிருட்டிணன் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்ட பரப்புரையாளர்களில் ஒருவரான விடுதலை க.இராசேந்திரன், அரச பயங்கரவாதத்துக்கு எதிராக நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்து செயற்பட்டமைக்காக தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி விடுதலையான முன்னை நாள் திலீபன் மன்ற நிறுவனரும் தமிழ் தமிழர் இயக்கத்தின் பொதுச் செயலாளருமான தோழர் தியாகு, மனித உரிமைச் செயற்பாட்டாளர் சுகுமாரன், தமிழர் தேசிய இயக்கத்தின் நிர்வாகி அழகிரி மற்றும் மீனவர், ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
<b>இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறியது யார்? </b>என்பதை விவரிக்கும் <i><b>விடுதலை க. ராசேந்திரனின் விளக்க நூலும் </b></i>இந்த மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது என்று எமது புதுவை செய்தியாளர் தெரிவிக்கிறார்
<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
"
"
"

