02-10-2006, 09:54 AM
RaMa Wrote:kuruvikal Wrote:
குருவிகள் நீங்கள் கூறுவது நல்ல கருத்து தான். ஆனால் உன்னை நீயே திருத்திக்கொள் சமுகம் தானகவே திருந்து என்று ஒரு பழமொழி உண்டு எல்லோ. நீங்கள் இணைத்த இக்கதைகளில் எங்கு சமூக ஒழுக்கத்துக்கு முன்னுரிமை அளித்து இருக்கின்றது. இதிலும் மற்றவர்களின் வாழ்க்கையை தானே ஏட்டிப் பார்த்திருக்கின்றார்கள். உங்களின் கதைபடி ஒரு அநாதை சிறுமியைப்பற்றி எழுதப்போனாலும் அவளின் குடும்பத்தை பற்றி கொஞ்சம் விபரித்து எழுதினால் தான் கதை நல்லாய் வரும். ஆகவே அவ்விடத்திலும் நாங்கள் பக்கத்து வீட்டை ஏட்டிப்பார்க்கும் நிலை தானே? நானும் சாத்திரியரரின் இக்கதையை ரசித்த கூட்டங்களில் ஒருத்தி என்றவகையில் இந்த கருத்தை எழுதுகின்றேன். உதராணத்திற்கு ஒரு கதை மற்றவர்களின் குடும்பங்களை ஏட்டிப்பார்க்கமால் எழுதிக்காட்டுங்கள். அதிலிருந்து மற்றவர்கள் தொடர்கிறார்களோ இல்லையோ நான் உங்கள் வழியில் தொடர்ந்து எழுதுகின்றேன்.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=8594http://www.yarl.com/forum/viewtopic.php?t=6521
குருவிகள் இணைத்த இரண்டு கதைகளில்..
<b>தாரமான பின்</b> வன்முறை ரீதியான அணுமுறைகளைச் சொல்லவில்லை..! ஒரு சமூக ஒழுக்கத்தை நேசிக்கும் காதலி காதலனிடம் எதிர்பார்க்கும் நடத்தையை வெளிப்படுத்தியதால் இணைத்தோம்..!
<b>உண்மை உறவுகள்..!</b>
ஒரு பெண் கணவனால் துன்பப்படுகின்ற போதும் ( இன்னென்ன சித்திரவதை செய்தான் இன்னென்ன போதைப்பொருள் பாவித்தான்...இன்னொன்னாருடன் சுத்தினான்..இன்னும் இருவரை குடிபோதையில் பழக விட்டு வேடிகை பார்த்தான்...இப்படியான எந்தச் சித்தரிப்பும் இல்லாது) தன்னை துன்பப்படுத்தும் கணவனை சீர்செய்ய முனையும் வித்தியாசமான அணுகுமுறை அங்கு தெரிந்தது அதனால் இணைத்தோம்..! அங்கு அண்ணிப் பாத்திரத்தின் மூலம் குறித்த பெண்ணின் மனிதாபிமான அணுமுறை கூட எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது..! எனவே அவளை ஒரு வன்முறைவாதியாக அக்கதை காட்டாததாலும்..குடிபோதையில் தவறு செய்யும் ஆண் அதை உணரும் போது முற்றாக மாறி அன்புக்கு அடிமையாகிவிடுகிறான் என்பதும் வெளிப்படுவதால்..குறித்த கதையை இணைத்தோம்..!
விவாகரத்து... கணவனைப் மனைவியைப் பிரிகிறவர்கள்..மற்ற ஆண்களோடு பெண்களோடு பழகும் முறை....கணவனோடு இருக்கும் பெண்ணை மற்ற ஆண்கள் பார்க்கும் முறை...பெண்கள் மீதான ஆண்களின் பார்வையை வக்கிரமானதாக மட்டும் காட்டுதல்...வன்முறை வடிவங்கள்..போதைப்பொருள்களின் அறிமுகம்..பாவனை...சேரும் கூட்டங்கள்..இப்படி அவை உண்மையில் நடந்திருந்தாலும் சமூகத்துக்கு ஆண்கள் தொடர்பான வக்கிரமான தோற்றப்பாடை காட்டுகிற அதேவேளை...அவர்களுள் மனைவியிடமான மனிதாபிமான அணுகுமுறைக்கு ஒரு சின்ன உதாரணமும் காட்டப்படுவதில்லை..! அப்படி மனநோயாளர்கள் தவிர மனிதர்கள் உலகில் வாழ முடியுமா..???! என்பது வினாக்குறி..!
சினிமாவின் பெண்கள் மீதான வன்முறையை எதிர்க்கும்..நாம்..சினிமாவில் சிகரட் பத்துவதை எதிர்க்கும் நாம்...சினிமாவில் பல ஆண்களால் ஒரு பெண் வக்கிரமாக நோக்கப்படுதலை கண்டிக்கும் நாம்...கதை.. உண்மை என்ற போர்வையில் தேவையற்ற விபரிப்புக்கள் மூலம்..அவர்கள் செய்வதையே செய்கின்றோம்..! இங்கு சினிமா பற்றிய ஒரு கருத்தாடல் வந்த போது நாம் குறிப்பிட்டோம்..சினிமாவில் காட்டப்படுவதை வடிகட்டி உள்வாங்க வேண்டியது ரசிகனின் கடமை என்று..அது சாத்தியமில்லை என்று சொன்னவர்கள்..இப்போ இக்கதைகளுக்கு ஆதரவளிப்பதன் நோக்கம்...சமூக விழிப்புணர்வு என்றால்..வரவேற்கிறோம்..! ஆனால்...விழிப்புணர்வு என்ற வகையில் சினிமாவில் ரவுடீசம் காட்டி அதை ஒழிக்க சொன்னாலும் அது வளர்ந்து வருவது போல..இப்படியான மனித வக்கிரத்தனங்களை வெளிப்படுத்தும் கதைகளை கையாளும் போது நிதானம் அவசியம் ஒரு எழுத்தாளனுக்கு...என்பதை மீண்டும் சுட்டிக்காட்டுகின்றோம்..!
மற்றும் படி சாத்திரி நீங்கள் தொடருங்கள்..நமக்கு மற்றவர்களின் கீழ்த்தரமான வாழ்க்கையை படித்துத்தான் எம்மை சீர்செய்ய வேண்டும் என்ற தேவையில்லை..! அதனால் மேலும் விமர்சனங்கள் வைக்க மாட்டோம்..! அதேவேளை மற்றவர்களின் தவறுகளை பெரிதாகக் காட்டி ரசித்துக் கொண்டு நாமும் அதே தவறுகளுக்கு வித்திடக் கூடாது. அதுவே உங்கள் கதைகளின் நல்ல பயனாக இருக்க முடியும்..! அதை இங்குள்ள கதையின் ரசிகர்கள் உள்வாங்கிக் கொண்டால் சரி..! ஆனால் ஆண்களை வன்முறைவாதிகளாக வக்கிர சிந்தனையாளர்களாக <b>மட்டும்</b> சித்திரிப்பதை இந்திய நாவலாசிரியர்கள் போல நீங்களும் தொடர்ந்து செய்யமாட்டீர்கள் என்று எண்ணுகின்றோம்...! அப்படிச் செய்ய முனைந்தால் நிச்சயம் அது உங்கள் சமூகத்தில் பெண்களின் பார்வையில் ஆண் தொடர்பில் தொடர்ந்து தவறான எண்ண ஓட்டங்களை மட்டுமே பெருக்கும்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

