Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் தமிழகத்தில் எழுச்சி அலை..!
#41
"புங்குடுதீவு தர்சினியை" அவதூறாக பேசிய சிறிலங்கா அமைச்சருக்குக் கண்டனம்: சென்னையில் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! சிறிலங்கா கடற்படையால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு தர்சினையை சென்னையில் அவதூறாகப் பேசிய சிறிலங்கா அமைச்சர் திஸ்ஸ விதாரனவைக் கண்டித்து சென்னையில் இன்று வியாழக்கிழமை பெண்கள் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


சென்னை விக்டோரியா நினைவு மண்டபம் எதிரே இன்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பெண்கள் இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.

அண்மையில் சென்னையில் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் பேசிய சிறிலங்கா அமைச்சர் திஸ்ஸ விதாரன, புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட தர்சினி ஒரு பாலியல் தொழிலாளி என்றும் இராணுவத்துக்குச் சேவையாற்றுபவர் என்றும் கூறியிருந்தார்.




சிறிலங்கா அமைச்சரின் இந்த அவதூறைக் கண்டித்து தமிழகப் பெண்கள் எழுச்சி அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் தலைவரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான பேராசிரியர் சரஸ்வதி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில்,

வீரவணக்கம்! வீரவணக்கம்!
மனித உரிமைப் போர்க்களத்தில்
பெண் உரிமைப் போர்க்களத்தில்
இன்னுயிர் நீத்த
போராளிகளுக்கு வீரவணக்கம்!

கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!
தமிழ் பெண் தர்சினியை
பாலியல் பலாத்காரம்
செய்திட்ட சிங்கள இராணுவத்தைக் கண்டிக்கிறோம்!

கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!
பாலியல் வெறியாட்டத்தை மூடி மறைத்த
சிங்கள அமைச்சர்
திஸ்ஸ விதாரனவைக் கண்டிக்கிறோம்!

இந்திய அரசே! இந்திய அரசே!
தட்டிக்கேள்! தட்டிக்கேள்!
சிங்கள அரசின்
மனித உரிமை மீறல்களைத் தட்டிக்கேள்!

தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!
இந்தியக் கூட்டணி அரசே!
இந்தியக் கூட்டணி அரசே!
இலங்கை வாழும் தமிழர்களை
இலங்கை வாழும் தமிழச்சிகளை
இனக்கொலை செய்து வெறியாட்டம் போடும்
சிங்களப் பேரினவாதிகளை தடுத்து நிறுத்து!

ஈழ விடுதலைப் போரில் உயிர்நீத்த
எங்கள் தமிழர்களுக்கு
வீரவணக்கம்! வீரவணக்கம்!!

எங்கள் உடலும் உயிரும்
இராணுவ வெறியாட்டத்துக்கு தீனியாகும் பண்டமல்ல!

அனுமதியோம்! அனுமதியோம்!
இந்தக் கொடுமையை அனுமதியோம்!

மக்களைக் காப்பாற்ற இராணுவமா?
மக்களைக் கொல்ல இராணுவமா?

பதில் சொல்! பதில் சொல்!
சிங்கள அரசே பதில் சொல்!!

ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்வில் பங்கேற்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர் ரி.எஸ்.எஸ். மணி,

கூட்டாட்சி முறையை ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் ஒற்றையாட்சியின் கீழ்தான் தீர்வு என்று கூறுகிற மகிந்த ராஜபக்ச சிறிலங்கா அரச தலைவராகப் பொறுப்பேற்றார்.




அதன் பின்னர்தான் தமிழ்ப் பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன. இத்தகைய பாலியல் வல்லுறவுகள் நடைபெற்றன.

மனித உரிமை மீறல்கள் உலகின் எந்தப் பகுதிகளில் நடந்தாலும் அதைக் கண்டிக்க வேண்டியது நம் கடமை என்றார்.

வழக்கறிஞர் மணிராஜ் பேசுகையில்,

சர்வதேச நாடுகளின் மனித உரிமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், அதைச் செயற்படுத்த இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.




தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசியதாவது:

திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்களை இராணுவம் படுகொலை செய்துவிட்டு குண்டுத் தாக்குதல் நடத்தியவர்கள் என்று முதலில் கூறியது. ஆனால் துப்பாக்கிக் குண்டுகளால்தான் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னர் விசாரணை நடத்துகிறோம் என்று மறு அறிவிப்பு வெளியிட்டது.

ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டு நல்லெண்ண நடவடிக்கையாக தங்கள் காவலில் இருந்த சிங்கள காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை விடுதலைப் புலிகள் விடுதலை செய்த 24 மணிநேரத்தில் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு மேஜர் கபிலன் என்கிற போராளி படுகொலை செய்யப்பட்டார்.

ஜெனீவாப் பேச்சுக்களுக்கான நாட்கள் குறிக்கப்பட்டிருக்கும் நிலையில் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருகிற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் 10 பேர் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் கடத்தப்பட்டுள்ளனர்.




சிறிலங்கா அரச தலைவராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் தர்சினியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிப் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. அதனால் தமிழகத்துக்கு அகதிகளின் வரும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்துக்கு வருகை தரும் அகதிகள் அனைவருமே சிங்கள இராணுவத்தின் வெறியாட்டத்தை, பாலியல் வல்லுறவுக் கொடுமைகளைச் சொல்லி வருகின்றனர் என்றார்.

ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த பேராசிரியர் சரஸ்வதி பேசியதாவது:

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இளம் பெண் தர்சினி சிங்களக் கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். ஆனால் அண்மையில் தமிழகம் வந்த சிங்கள அமைச்சர் திஸ்ஸ விதாரனவோ, தர்ச்னி ஒரு பாலியல் தொழிலாளி என்றும் இராணுவத்துக்கு சேவை செய்பவர் என்றும் சொல்லியிருக்கிறார். இப்படிச் சொன்ன செய்தி நமக்குத் தாமதமாகக் கிடைத்தமையினாலே இப்போது இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட இளம் பெண் தர்சினியை அவதூறாகப் பேசிய சிங்கள அமைச்சர் இங்கிருந்து பாதுகாப்பாகச் சென்றுள்ளார். தர்சினி சிந்தியிருக்கும் இரத்தம் நம் இரத்தம் அல்லவா?.

தமிழீழத்தில் மட்டுமல்ல உலகின் எந்தப் பகுதியிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்க வேண்டியவர்கள் பெண்களே. ஈழத்து தர்சினி நம் உறவு அல்லவா? நம் கலாச்சாரத்தை நம் இனத்தைச் சேர்ந்தவர் அல்லவா? அதனால் நாம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். தர்சினியின் படுகொலைக்குப் பொறுப்பேற்று இராணுவப் பொறுப்பில் உள்ள அமைச்சர் பதவி விலக வேண்டும். இலங்கைத் தமிழர்களின் மீதான மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்காக இந்திய அரசுக்கு தமிழ்நாடு அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

தமிழ் தமிழர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, கிராமப் பெண்கள் விடுதலை இயக்கத்தின் நிர்வாகி சாந்தி, தலித் பெண்கள் விடுதலை இயக்கத்தின் நிர்வாகி மகிமை உள்ளிட்ட பலரும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

- புதினம்.
படங்களினை இங்கே பார்க்கவும்
http://www.eelampage.com/?cn=24105
,
,
Reply


Messages In This Thread
[No subject] - by Luckyluke - 12-30-2005, 09:04 AM
[No subject] - by kurukaalapoovan - 12-30-2005, 11:59 AM
[No subject] - by ஜெயதேவன் - 12-30-2005, 12:25 PM
[No subject] - by kurukaalapoovan - 12-30-2005, 12:58 PM
[No subject] - by Vasampu - 12-30-2005, 01:47 PM
[No subject] - by Luckyluke - 12-30-2005, 01:59 PM
[No subject] - by SUNDHAL - 12-30-2005, 02:01 PM
[No subject] - by Luckyluke - 12-30-2005, 02:04 PM
[No subject] - by sinnakuddy - 12-30-2005, 02:11 PM
[No subject] - by rajathiraja - 12-30-2005, 02:15 PM
[No subject] - by Luckyluke - 12-30-2005, 02:21 PM
[No subject] - by rajathiraja - 12-30-2005, 02:24 PM
[No subject] - by SUNDHAL - 12-30-2005, 02:25 PM
[No subject] - by Vasampu - 12-30-2005, 02:28 PM
[No subject] - by Danklas - 12-30-2005, 02:31 PM
[No subject] - by vasisutha - 12-30-2005, 02:39 PM
[No subject] - by Danklas - 12-30-2005, 02:42 PM
[No subject] - by matharasi - 12-30-2005, 02:50 PM
[No subject] - by tamilini - 12-30-2005, 02:50 PM
[No subject] - by SUNDHAL - 12-30-2005, 02:53 PM
[No subject] - by SUNDHAL - 12-30-2005, 03:03 PM
[No subject] - by matharasi - 12-30-2005, 03:25 PM
[No subject] - by SUNDHAL - 12-30-2005, 03:46 PM
[No subject] - by தூயவன் - 12-30-2005, 03:50 PM
[No subject] - by kuruvikal - 12-30-2005, 04:48 PM
[No subject] - by Mathuran - 12-30-2005, 10:28 PM
[No subject] - by iruvizhi - 12-30-2005, 11:47 PM
[No subject] - by iruvizhi - 12-31-2005, 12:17 AM
[No subject] - by தூயவன் - 01-29-2006, 08:35 AM
[No subject] - by MUGATHTHAR - 01-29-2006, 11:18 AM
[No subject] - by மேகநாதன் - 01-31-2006, 01:28 AM
[No subject] - by கந்தப்பு - 01-31-2006, 01:55 AM
[No subject] - by வர்ணன் - 01-31-2006, 02:00 AM
[No subject] - by Luckyluke - 01-31-2006, 06:10 AM
[No subject] - by தூயவன் - 01-31-2006, 06:12 AM
[No subject] - by கந்தப்பு - 01-31-2006, 06:46 AM
[No subject] - by sathurangan - 01-31-2006, 07:18 AM
[No subject] - by sinnappu - 01-31-2006, 08:56 AM
[No subject] - by sanjee05 - 01-31-2006, 01:43 PM
[No subject] - by Aravinthan - 02-10-2006, 12:22 AM
[No subject] - by malu - 02-10-2006, 05:35 AM
[No subject] - by மேகநாதன் - 02-11-2006, 06:01 AM
[No subject] - by Sukumaran - 02-11-2006, 02:57 PM
[No subject] - by ஜெயதேவன் - 02-11-2006, 03:45 PM
[No subject] - by வினித் - 02-13-2006, 01:39 AM
[No subject] - by கந்தப்பு - 02-15-2006, 11:56 PM
[No subject] - by கந்தப்பு - 02-16-2006, 12:09 AM
[No subject] - by sinnakuddy - 02-16-2006, 01:06 AM
[No subject] - by கந்தப்பு - 02-16-2006, 04:44 AM
[No subject] - by கறுப்பன் - 02-16-2006, 06:09 PM
[No subject] - by sanjee05 - 02-16-2006, 10:51 PM
[No subject] - by I.V.Sasi - 02-17-2006, 12:48 AM
[No subject] - by Aravinthan - 02-17-2006, 05:19 AM
[No subject] - by Aravinthan - 02-22-2006, 02:09 AM
[No subject] - by Aravinthan - 03-27-2006, 11:59 PM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 03:18 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)