02-09-2006, 05:30 AM
<b>எமது தேசிய ஒருமைப்பாட்டை சிதைக்க ஒருவர் முற்பட்ட போது பொங்கி எழுந்தவர் கௌசல்யன்: மட்டு.மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு</b>
எமது தேசிய ஒருமைப்பாட்டை இங்கு ஒருவர் சிதைக்க முற்பட்டபோது அதனை பொறுக்க முடியாது பொங்கி எழுந்தவர் கௌசல்யன். தமிழீழ விடுதலைப் போரில் இணைந்து மக்களுக்கும், மண்ணிற்கும் பாரிய பணிகளை செய்து தமிழீழ வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவன் கௌசல்யன்
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு தெரிவித்தார். அம்பிளாந்துறையில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் ஒராண்டு நிறைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்:-
எமது இனம் பல வழிகளில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு பல வழிகளில் பேசி எமது பிரச்சினைகள் தீர்கப்படாத போது ஆயுத போராட்டத்தினை ஆரம்பித்த போது இதில் இணைந்து உறுதியுடன் நின்று இம் மண்ணுக்கு போராடினான்.
எமது மண் மீட்புப் போரில் 17900க்கு மேற்பட்ட மாவீரர்களை இழந்து நிற்கின்றோம் எமது மண் விடுதலை பெறவேண்டும் எமது எதிர்கால சந்ததியினர் சுவிட்சமாக வாழ வேண்டும் என்பதாகாகவே இந்த 17900 மேற்பட்ட மாவீர்களையும் பொது மக்களையும் இழந்து இருக்கின்றோம்.
கௌசல்லியனைப் பொறுத்த மட்டில் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அர்வம் கொண்டவர். அதன் மூலமே போராளிகளை யும் மக்களையும் வளர்த்துக் கொள்ள முடியும் என எதிர் பார்த்து நம்பிக்கை கொண்டு இருந்தார்.
நான் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் சிறிலங்கா அரசு எமக்கு எதுவிதமான தீர்வனையும் வழங்க முன்வரவில்லை. இவ்வாறான நிலையில் இன்று யுத்தநிறுத்தம் அமுல் செய்து 4 வருடங்கள் ஆகின்ற நிலையில் கூட எதுவித தீர்வும் இன்றிய நிலையில் நாம் உள்ளோம்.
இதைவிட எமது நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு சொல்ல புதிய அரசிற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கி இருக்கின்றார் எமது தலைவர். எனவே எமது தலைவரது காலத்தில் அனைவரும் ஒரு அணியாக நின்று எமது உரிமையை வென்றெடுக்க அனைவரது கரங்களும் ஒன்றுபட வேண்டும் என கட்டளைத் தளபதி பானு குறிப்பிட்டார்.
<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=5518
எமது தேசிய ஒருமைப்பாட்டை இங்கு ஒருவர் சிதைக்க முற்பட்டபோது அதனை பொறுக்க முடியாது பொங்கி எழுந்தவர் கௌசல்யன். தமிழீழ விடுதலைப் போரில் இணைந்து மக்களுக்கும், மண்ணிற்கும் பாரிய பணிகளை செய்து தமிழீழ வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவன் கௌசல்யன்
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு தெரிவித்தார். அம்பிளாந்துறையில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் ஒராண்டு நிறைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில்:-
எமது இனம் பல வழிகளில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு பல வழிகளில் பேசி எமது பிரச்சினைகள் தீர்கப்படாத போது ஆயுத போராட்டத்தினை ஆரம்பித்த போது இதில் இணைந்து உறுதியுடன் நின்று இம் மண்ணுக்கு போராடினான்.
எமது மண் மீட்புப் போரில் 17900க்கு மேற்பட்ட மாவீரர்களை இழந்து நிற்கின்றோம் எமது மண் விடுதலை பெறவேண்டும் எமது எதிர்கால சந்ததியினர் சுவிட்சமாக வாழ வேண்டும் என்பதாகாகவே இந்த 17900 மேற்பட்ட மாவீர்களையும் பொது மக்களையும் இழந்து இருக்கின்றோம்.
கௌசல்லியனைப் பொறுத்த மட்டில் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அர்வம் கொண்டவர். அதன் மூலமே போராளிகளை யும் மக்களையும் வளர்த்துக் கொள்ள முடியும் என எதிர் பார்த்து நம்பிக்கை கொண்டு இருந்தார்.
நான் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் சிறிலங்கா அரசு எமக்கு எதுவிதமான தீர்வனையும் வழங்க முன்வரவில்லை. இவ்வாறான நிலையில் இன்று யுத்தநிறுத்தம் அமுல் செய்து 4 வருடங்கள் ஆகின்ற நிலையில் கூட எதுவித தீர்வும் இன்றிய நிலையில் நாம் உள்ளோம்.
இதைவிட எமது நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு சொல்ல புதிய அரசிற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கி இருக்கின்றார் எமது தலைவர். எனவே எமது தலைவரது காலத்தில் அனைவரும் ஒரு அணியாக நின்று எமது உரிமையை வென்றெடுக்க அனைவரது கரங்களும் ஒன்றுபட வேண்டும் என கட்டளைத் தளபதி பானு குறிப்பிட்டார்.
<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=5518
"
"
"

