02-08-2006, 03:33 AM
ஒருவர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தங்குவதா அல்லது தாயகம் மீண்டும் திரும்பி வாழுவதா என்பது தொடர்பாக ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அதனை நீங்கள் உங்கள் நிலையில் இருந்து பார்த்தால் இப்படியான கருத்துக்கள் தான் வரும். இங்கு புலம்பெயர்ந்து வாழும் பலர் தாயகம் விடுதலை அடைந்ததும் மீண்டும் சென்று வாழ விரும்புகிறார்கள். தாயகத்தில் ஒன்றும் இல்லை என்று கூறுகிறீர்கள். அங்கு இவ்வளவு சம்பளம் எடுக்கமுடியாது என்று கூறுகிறீர்கள். ஏன் முடியாது. அதற்கு சில காலம் ஆகலாம் என்று மட்டுமே கூலாமே தவிர முடியாது என்று கூறவியலாது. இன்று உலகில் எந்தவொரு வளமும் இல்லாத சிங்கப்பூர் ஒரு முன்மாதிரியாக நிற்கும் போது, ஜப்பான் நிமிர்ந்து நிற்கும் போது ஏன் எம்மால் முடியாது. இன்று ஜேர்மனியில் இருந்து கணிசமான சம்பளம் பெறுகிறார்கள் என்றால் அதனை எப்படி அடைந்தார்கள். இரண்டாம் உலகப்போரின் முடிவில் கையில் பணம் இல்லாது மற்றைய நாட்டிடம் கடன் வாங்கித்தான் தமது நாட்டைக் கட்டிவளர்த்தார்கள். அதுவும் மிகவும் குறுகிய காலத்தில். வரலாறு இப்படி உதாரணங்களைக் காட்டி நிற்கும் போது ஏன் எம் தாயகத்தால் முடியாது.
இவை அனைத்து தமிழரிடமும் உள்ள கல்வியறிவினையும் கொண்டே அடையலாம். அவ்வறிவினை வழங்கப் புலம்பெயர்ந்து பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் கல்விகற்றுக்கொண்டிருக்கும் பல மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
இவை அனைத்து தமிழரிடமும் உள்ள கல்வியறிவினையும் கொண்டே அடையலாம். அவ்வறிவினை வழங்கப் புலம்பெயர்ந்து பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் கல்விகற்றுக்கொண்டிருக்கும் பல மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

