02-07-2006, 11:58 AM
<b>யாழில் நள்ளிரவில் இளைஞர்களை குறிவைத்து வேட்டையாடுகிறது சிறிலங்கா இராணுவம்!</b>
யாழ். குடாநாட்டில் நடு இரவுகளில் படையினரால் இளைஞர்கள் பலருடைய வீடுகள் சோதனையிடப்படுவதுடன் இளைஞர்களை பிடித்துச் செல்லும் நோக்குடன் படையினரால் அடிக்கடி முற்றுகையிடப்படுகின்றன. இதனால் அச்சமடைந்துள்ள இளைஞர்கள் இரவில் தமது வீடுகளில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இரவுப் பொழுதை வேறு இடங்களிலும் அயல் கிராமங்களிலும் இளைஞர்கள் கழித்து வருவதாகவும் படையினரால் தமது உயிர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என எண்ணும் இளைஞர்கள், மாணவர்கள் மாலையானவுடன் தமது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதும் அதிகரித்திருக்கிறது.
பகலில் வீடுகளைக் கண்காணிக்கும் படையினர் நள்ளிரவு வீடு புகுந்து இளைஞர்களைப் பிடிக்கும் முயற்சியை பல இடங்களில் மேற்கொண்டு வருவதால் தமது பாதுகாப்பு கருதி இளைஞர்கள் தங்கள் வீடுகளில் தங்குவதை தவிர்த்து வருகின்றனர்.
யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரின் நெருக்குவாரங்கள் காரணமாக முஸ்லிம்கள் கணிசமானோர் வன்னிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பலர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர் என முல்லைத்தீவு செய்திகள் தெரிவிக்கின்றன.
வன்னியில் உறவினர்கள் இல்லாதோர் தென்னிலங்கை நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர். யாழ். குடாநாட்டில் தங்கியிருக்கும் முஸ்லிம்களின் நடமாட்டங்கள், வீடுகள் ஆகியவை சிறிலங்காப் படையினரின் முழுமையான கண்காணிப்பில் இருப்பதினாலேயே அவர்கள் இடம்பெயர்கின்றனர் என யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ். குடாநாட்டில் குண்டுகள், ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அடிக்கடி இராணுவம் கூறிவருவது பொதுமக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கை என்று யாழ். குடாநாட்டு பொது அமைப்புக்கள் கண்டிக்கின்றன.
பொதுமக்களைப் பீதிக்குள்ளாக்கவும், அச்சுறுத்தவும் படையினராலேயே குண்டுகள், ஆயுதங்கள் மறைக்கப்பட்டு பின்னர் தம்மால் கண்டுபிடிக்கப்பட்டதாக படையினர் கூறி இவற்றை மீட்டு வருவதாகவும் இத்தகைய செயல்களின் மூலம் யாழ். குடாநாட்டை ஒரு பதற்றமான சூழலில் தள்ளி வருவதாகவும் இத்தகைய மோசடி ஏமாற்று நடவடிக்கைகளை சிங்களப் படைத்தரப்பும் அதனுடன் சேர்ந்து இயங்கும் குழுவினரும் மேற்கொண்டு வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து படைத்தரப்பின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.
யாழ். பேரூந்து நிலையப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்னால் மாணவி ஒருவரை ஈ.பி.டி.பியினர் வானில் கடத்த மேற்கொண்ட முயற்சி மாணவியின் சாமர்த்தியத்தால் முறியடிக்கப்பட்டது.
மாணவி பெரிதாகச் சத்தமிட்டு கத்தியதையடுத்து மாணவியை கடத்தும் முயற்சியை ஈ.பி.டி.பியினர் கை விட்டுவிட்டு சிறீதர் திரையரங்குக்குள் தப்பிச் சென்றதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
வான் ஒன்றில் வந்து காத்துக்கொண்டிருந்த ஐந்து பேர் கொண்ட ஈ.பி.டி.பி குழுவினர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் சம்பவ இடத்தில் நின்றிருந்த பொதுமக்கள் கூறினர்.
யாழ்.குடாநாட்டில் பொதுமக்களைக் குழப்பும் நோக்கத்துடன் படையினராலும் ஈ.பி.டி.பி.யினராலும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல்வேறு அமைப்புக்களின் பெயரில் சுவரொட்டிகளை அச்சடித்து படையினர் ஒட்டி வருவதுடன் அச்சுவரொட்டிகளில் தேச விடுதலையைக் கண்டிக்கும் வாசகங்கள் பல இடம்பெற்றுள்ளதுடன் தேச விடுதலைப் பற்றாளர்களை கண்டித்தும் கொச்சைப்படுத்தியும் பல விடயங்கள் திரிபுபடுத்தியும் பொதுமக்களை குழப்பும் நோக்குடன் பொதுமக்கள் கூடும் இடங்களில் படையினரால் ஒட்டப்பட்டு வருகின்றன.
யாழ். குடாநாட்டில் பொதுமக்களை ஏமாற்றும் பல்வேறு தந்திரோபாய நடவடிக்கைகளை படையினர் தற்பொழுது மேற்கொண்டு வருகின்றனர்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
யாழ். குடாநாட்டில் நடு இரவுகளில் படையினரால் இளைஞர்கள் பலருடைய வீடுகள் சோதனையிடப்படுவதுடன் இளைஞர்களை பிடித்துச் செல்லும் நோக்குடன் படையினரால் அடிக்கடி முற்றுகையிடப்படுகின்றன. இதனால் அச்சமடைந்துள்ள இளைஞர்கள் இரவில் தமது வீடுகளில் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இரவுப் பொழுதை வேறு இடங்களிலும் அயல் கிராமங்களிலும் இளைஞர்கள் கழித்து வருவதாகவும் படையினரால் தமது உயிர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என எண்ணும் இளைஞர்கள், மாணவர்கள் மாலையானவுடன் தமது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதும் அதிகரித்திருக்கிறது.
பகலில் வீடுகளைக் கண்காணிக்கும் படையினர் நள்ளிரவு வீடு புகுந்து இளைஞர்களைப் பிடிக்கும் முயற்சியை பல இடங்களில் மேற்கொண்டு வருவதால் தமது பாதுகாப்பு கருதி இளைஞர்கள் தங்கள் வீடுகளில் தங்குவதை தவிர்த்து வருகின்றனர்.
யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரின் நெருக்குவாரங்கள் காரணமாக முஸ்லிம்கள் கணிசமானோர் வன்னிக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பலர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர் என முல்லைத்தீவு செய்திகள் தெரிவிக்கின்றன.
வன்னியில் உறவினர்கள் இல்லாதோர் தென்னிலங்கை நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர். யாழ். குடாநாட்டில் தங்கியிருக்கும் முஸ்லிம்களின் நடமாட்டங்கள், வீடுகள் ஆகியவை சிறிலங்காப் படையினரின் முழுமையான கண்காணிப்பில் இருப்பதினாலேயே அவர்கள் இடம்பெயர்கின்றனர் என யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ். குடாநாட்டில் குண்டுகள், ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அடிக்கடி இராணுவம் கூறிவருவது பொதுமக்களை ஏமாற்றும் ஒரு நடவடிக்கை என்று யாழ். குடாநாட்டு பொது அமைப்புக்கள் கண்டிக்கின்றன.
பொதுமக்களைப் பீதிக்குள்ளாக்கவும், அச்சுறுத்தவும் படையினராலேயே குண்டுகள், ஆயுதங்கள் மறைக்கப்பட்டு பின்னர் தம்மால் கண்டுபிடிக்கப்பட்டதாக படையினர் கூறி இவற்றை மீட்டு வருவதாகவும் இத்தகைய செயல்களின் மூலம் யாழ். குடாநாட்டை ஒரு பதற்றமான சூழலில் தள்ளி வருவதாகவும் இத்தகைய மோசடி ஏமாற்று நடவடிக்கைகளை சிங்களப் படைத்தரப்பும் அதனுடன் சேர்ந்து இயங்கும் குழுவினரும் மேற்கொண்டு வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து படைத்தரப்பின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.
யாழ். பேரூந்து நிலையப் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்னால் மாணவி ஒருவரை ஈ.பி.டி.பியினர் வானில் கடத்த மேற்கொண்ட முயற்சி மாணவியின் சாமர்த்தியத்தால் முறியடிக்கப்பட்டது.
மாணவி பெரிதாகச் சத்தமிட்டு கத்தியதையடுத்து மாணவியை கடத்தும் முயற்சியை ஈ.பி.டி.பியினர் கை விட்டுவிட்டு சிறீதர் திரையரங்குக்குள் தப்பிச் சென்றதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
வான் ஒன்றில் வந்து காத்துக்கொண்டிருந்த ஐந்து பேர் கொண்ட ஈ.பி.டி.பி குழுவினர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் சம்பவ இடத்தில் நின்றிருந்த பொதுமக்கள் கூறினர்.
யாழ்.குடாநாட்டில் பொதுமக்களைக் குழப்பும் நோக்கத்துடன் படையினராலும் ஈ.பி.டி.பி.யினராலும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல்வேறு அமைப்புக்களின் பெயரில் சுவரொட்டிகளை அச்சடித்து படையினர் ஒட்டி வருவதுடன் அச்சுவரொட்டிகளில் தேச விடுதலையைக் கண்டிக்கும் வாசகங்கள் பல இடம்பெற்றுள்ளதுடன் தேச விடுதலைப் பற்றாளர்களை கண்டித்தும் கொச்சைப்படுத்தியும் பல விடயங்கள் திரிபுபடுத்தியும் பொதுமக்களை குழப்பும் நோக்குடன் பொதுமக்கள் கூடும் இடங்களில் படையினரால் ஒட்டப்பட்டு வருகின்றன.
யாழ். குடாநாட்டில் பொதுமக்களை ஏமாற்றும் பல்வேறு தந்திரோபாய நடவடிக்கைகளை படையினர் தற்பொழுது மேற்கொண்டு வருகின்றனர்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

