02-07-2006, 09:30 AM
<b>தாக்குதல்கள், அச்சுறுத்தல்களை ஆட்சேபித்து
திருமலைத் தமிழ் வர்த்தகர்கள்
நேற்றுஎதிர்ப்புஆர்ப்பாட்டம் </b>
திருகோணமலையில் தமிழ் வர்த்தகர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருமலை நகர தமிழ் வர்த்தகர் கள் திருமலை பொலீஸ் நிலையத்திற்கு முன் பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நேற்று நடத்தினர்.
அதேசமயம், நேற்றைய தினம் நகரத்தின் அனைத்துக் கடைகளும் இழுத்து மூடப்பட்டன. தமது பாதுகாப்பிற்கு படைத் தரப்பினர் உத்தரவாதம் தரும்வரை கடைகளைத் திறக்கப் போவதில்லையென்று வர்த்தகர்கள் திட்ட வட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
நேற்று முன்தினம் ஏகாம்பரம் வீதியிலுள்ள வெஸ்கோ நகை மாளிகையைச் சேர்ந்த இரு முஸ்லிம் வர்த்தகர்களைச் சிங்களக் காடையர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கின் றனர். பொல்லுகள், தடிகள் சகிதம் வந்திருந்த சுமார் 15 பேரைக்கொண்ட இந்தக் காடையர் கள் குழு, நாளை (அதாவது நேற்று) கடைகளை திறக்கக் கூடாது என்று கூறியே தாக்குதல் நடத் தியிருக்கின்றது.
இது குறித்து தாக்கப்பட்டவர்கள் அருகிலி ருந்த இராணுவத்தினரிடம் கூறியபோதும் அதனை அசட்டை செய்த இராணுவத்தினர் தங்களால் ஒன்றும்செய்ய இயலாதென கை விரித்துவிட்டனராம்.
இதேபோல், மூன்றாம் குறுக்குத் தெரு விலுள்ள தமிழ் வர்த்தகர் ஒருவரும் தாக்குத லுக்கு உள்ளானார் எனத் தெரியவருகிறது.
இந்தத் தாக்குதல்களை கண்டித்தும், எதிர்ப் புத் தெரிவித்துமே நேற்றைய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
தமிழ் வர்த்தகர்களின் இந்த ஆர்ப்பாட்டத் தையடுத்து, மேற்படி தாக்குதல் குறித்தான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் திருகோணமலை பொலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
<i><b>தகவல் மூலம்-உதயன்</b></i>
திருமலைத் தமிழ் வர்த்தகர்கள்
நேற்றுஎதிர்ப்புஆர்ப்பாட்டம் </b>
திருகோணமலையில் தமிழ் வர்த்தகர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருமலை நகர தமிழ் வர்த்தகர் கள் திருமலை பொலீஸ் நிலையத்திற்கு முன் பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நேற்று நடத்தினர்.
அதேசமயம், நேற்றைய தினம் நகரத்தின் அனைத்துக் கடைகளும் இழுத்து மூடப்பட்டன. தமது பாதுகாப்பிற்கு படைத் தரப்பினர் உத்தரவாதம் தரும்வரை கடைகளைத் திறக்கப் போவதில்லையென்று வர்த்தகர்கள் திட்ட வட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
நேற்று முன்தினம் ஏகாம்பரம் வீதியிலுள்ள வெஸ்கோ நகை மாளிகையைச் சேர்ந்த இரு முஸ்லிம் வர்த்தகர்களைச் சிங்களக் காடையர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கின் றனர். பொல்லுகள், தடிகள் சகிதம் வந்திருந்த சுமார் 15 பேரைக்கொண்ட இந்தக் காடையர் கள் குழு, நாளை (அதாவது நேற்று) கடைகளை திறக்கக் கூடாது என்று கூறியே தாக்குதல் நடத் தியிருக்கின்றது.
இது குறித்து தாக்கப்பட்டவர்கள் அருகிலி ருந்த இராணுவத்தினரிடம் கூறியபோதும் அதனை அசட்டை செய்த இராணுவத்தினர் தங்களால் ஒன்றும்செய்ய இயலாதென கை விரித்துவிட்டனராம்.
இதேபோல், மூன்றாம் குறுக்குத் தெரு விலுள்ள தமிழ் வர்த்தகர் ஒருவரும் தாக்குத லுக்கு உள்ளானார் எனத் தெரியவருகிறது.
இந்தத் தாக்குதல்களை கண்டித்தும், எதிர்ப் புத் தெரிவித்துமே நேற்றைய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
தமிழ் வர்த்தகர்களின் இந்த ஆர்ப்பாட்டத் தையடுத்து, மேற்படி தாக்குதல் குறித்தான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் திருகோணமலை பொலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
<i><b>தகவல் மூலம்-உதயன்</b></i>
"
"
"

