02-07-2006, 04:44 AM
<span style='color:green'><b>கௌசல்யனின் இலட்சிய கனவுகள் நனவாகும் </b>
ஆண்டு ஒன்றுக்கு முன் ஒரு தடவை நினைத்துப் பார்ப்போம். தமிழர் தாயகம் பதறித் துடித்தது. அதுதான் மட்டு அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்த லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மூன்று போராளிகள் படுகொலை செய்யப்பட்ட துயரச் செய்தி அது.
தேசியத் தலைவனிடம் சென்று தமது சேவைக்காக மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போது வெலிக்கந்தைப் பகுதியில் வைத்துச் சிங்களக் கூலிப் படையும், அந்தக் கூலிப் படைக்கு ஏவல் செய்யும் துரோகிகளும் கோழைத்தனமாக நடத்திய தாக்குதல் அது.
பல களம் கண்ட வீரர்கள். பல களம் காணத் துடித்த வீரர்கள். போர் நிறுத்த உடன்படிக்கையும், அதன் விதி முறைகளையும் செம்மையாகக் கடைப்பிடித்து வந்ததுடன் போர் நிறுத்தக் காலத்தில் எதிரி இப்படித் தாக்குவான் என்று அறிந்திராத நிலை, கொடியவர்களின் துப்பாக்கிகள் கோழைத்தனமாகக் கௌசல்யன் உட்பட மற்றும் மூன்று போராளிகளின் உயிர்களையும் பறித்தெடுத்து விட்டது. இந்த நயவஞ்சகத் தாக்குதலில் படுகாயமடைந்த அம்பாறை மாவட்ட முன்னாள் தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு படுகாயமடைந்தார். இவர் மறுநாள் உயிரிழந்தார். இது அம்பாறை மாவட்ட தமிழ் மக்களிடையே இன்னும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மட்டு. அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த லெப். கேணல் கௌசல்யன் தமிழ் பேசும் சமூகங்கங்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அயராது பாடுபட்டவர்.
போர்க் காலச் சூழலில் இரு சமூகங்களிடையிலே இருந்து வந்த கசப்புணர்வு, சந்தேகப் பார்வை என்பவற்றைக்களைந் தெறிந்து முஸ்லிம் உறவுகளுடனும் நட்புறவு பூண்டு அவர்கள் எதிர் நோக்கிய நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த கருணா தேசத் துரோகம் செய்து தமிழ்த் தேசியத்துக்கு எதிராக மாறிய போது அந்தத் துரோகியின் பிடியிலிருந்து விடுபட்டு வன்னி சென்ற போராளிகளில் ஒருவனாகத் தேசியத் தலைவன் மீதான தமது பற்றையும், தேசியத் தலைவனின் கீழ் அணிதிரண்டு விடுதலையை வென்றெடுக்க வேண்டுமென்ற அவசியத்தை வலியுறுத்தினார்.
கருணாவும், கருணாவின் சகாக்களும் கிழக்கில் பிரதேசவாதத்தைத் தூண்டி வட பகுதி வர்த்தகர்களை மிரட்டி, வெளியேற்றி, ஒரு குழப்பகரமான சூழலை உருவாக்கிய போது அதனை முறியடித்து மக்களை தெளிவுபடுத்தியதுடன், தேசியத் தலைவன் மீது தென்தமிழீழ மக்கள் கொண்டிருக்கும் அந்தப் பற்றினை வெளிப்படுத்தினார்.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது துயர் துடைப்புப் பணிகளில் இரவு பகல் பாராது சேவைகளைச் செய்து வந்த கௌசல்யன் அந்த மக்களின் பிரச்சினைகளைக் கண்டு கேட்டறிந்து தீர்வு காண்பதற்கான முயற்சிகளிலும் அயராது பாடுபட்டார்.
மட்டு. அம்பாறை மாவட்டத்தின் கல்வி நிலை மிகப் மோசமாகப் பின்னடைந்திருந்தது. குறிப்பாக விடுதலைப்புலிகளின் நிர்வாகப் பகுதியிலுள்ள வறிய கிராமங்களின் கல்வி நிலையை உயர்த்துவதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களைத் துறைசார்ந்தோரிடம் பகிர்ந்து அதனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
ஒட்டு மொத்தத்தில் மட்டு. அம்பாறை மாவட்டத்தில் லெப்.கேணல் கௌசல்யன் அவர்கள் போராளியாக பொது மக்களின் சேவகனாக நின்று தமது சேவையைத் தேசியத்துக்கும், தாயக மக்களுக்கும் அற்பணிப்பு டன் செய்துள்ளார் என்றால் அது மிகையாகாது.
இவ்வாறான ஒரு சிறந்த வீரனை, மக்கள் சேவகனை, விடுதலையை நேசித்த தேசியத் தலைவனின் கீழ் நின்ற பொறுப்பாளனை, தமிழர் தாயகம் இழந்து ஓராண்டாகின்றது. லெப்.கேணல் கௌசல்யனுடன் அரசியல்துறைப் போராளிகளான மேஜர் செந்தமிழன், மேஜர் புகழவன், 2ம் லெப்.விதிமாறன் மற்றும் வாகன சாரதியான விவேகானந்தமூர்த்தி மற்றும் மாமனிதர் அ. சந்திரநேரு ஆகியோரும் இந்தத் துரோகிகளின் தாக்குதலில் உயிரிழந்தனர். இவர்களுக்கும் அனுதாபங்கள் உரித்தாகட்டும். ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும் அந்தத் துயரம் இன்னும் தமிழினத்தின் நெஞ்சில் மாறாத ரணமாகவுள்ளது.
இன்னும் துரோகிகளின் கொடூரத்தனத்துக்கு முற்றுப்பள்ளி வைத்து இதயசுத்தியுடன் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான எந்த நடவடிக்கைகளும் சிறிலங்கா அரசு ஏற்படுத்த முனையவில்லை.
எனவே எந்த இலட்சியக் கனவுகளை லெப்.கேணல் கௌசல்யன் கண்டாரோ, அதனைத் தலைவனின் வழியில் நின்று சக போராளிகள் சரித்திரம் படைப்பார்கள் அதற்கான காலம் நாள் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.</span>
<i><b>நன்றி- ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு-
ஆசிரியர் தலையங்கம்(07/02/06)</b></i>[/b]
ஆண்டு ஒன்றுக்கு முன் ஒரு தடவை நினைத்துப் பார்ப்போம். தமிழர் தாயகம் பதறித் துடித்தது. அதுதான் மட்டு அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவிருந்த லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மூன்று போராளிகள் படுகொலை செய்யப்பட்ட துயரச் செய்தி அது.
தேசியத் தலைவனிடம் சென்று தமது சேவைக்காக மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போது வெலிக்கந்தைப் பகுதியில் வைத்துச் சிங்களக் கூலிப் படையும், அந்தக் கூலிப் படைக்கு ஏவல் செய்யும் துரோகிகளும் கோழைத்தனமாக நடத்திய தாக்குதல் அது.
பல களம் கண்ட வீரர்கள். பல களம் காணத் துடித்த வீரர்கள். போர் நிறுத்த உடன்படிக்கையும், அதன் விதி முறைகளையும் செம்மையாகக் கடைப்பிடித்து வந்ததுடன் போர் நிறுத்தக் காலத்தில் எதிரி இப்படித் தாக்குவான் என்று அறிந்திராத நிலை, கொடியவர்களின் துப்பாக்கிகள் கோழைத்தனமாகக் கௌசல்யன் உட்பட மற்றும் மூன்று போராளிகளின் உயிர்களையும் பறித்தெடுத்து விட்டது. இந்த நயவஞ்சகத் தாக்குதலில் படுகாயமடைந்த அம்பாறை மாவட்ட முன்னாள் தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு படுகாயமடைந்தார். இவர் மறுநாள் உயிரிழந்தார். இது அம்பாறை மாவட்ட தமிழ் மக்களிடையே இன்னும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மட்டு. அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த லெப். கேணல் கௌசல்யன் தமிழ் பேசும் சமூகங்கங்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அயராது பாடுபட்டவர்.
போர்க் காலச் சூழலில் இரு சமூகங்களிடையிலே இருந்து வந்த கசப்புணர்வு, சந்தேகப் பார்வை என்பவற்றைக்களைந் தெறிந்து முஸ்லிம் உறவுகளுடனும் நட்புறவு பூண்டு அவர்கள் எதிர் நோக்கிய நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த கருணா தேசத் துரோகம் செய்து தமிழ்த் தேசியத்துக்கு எதிராக மாறிய போது அந்தத் துரோகியின் பிடியிலிருந்து விடுபட்டு வன்னி சென்ற போராளிகளில் ஒருவனாகத் தேசியத் தலைவன் மீதான தமது பற்றையும், தேசியத் தலைவனின் கீழ் அணிதிரண்டு விடுதலையை வென்றெடுக்க வேண்டுமென்ற அவசியத்தை வலியுறுத்தினார்.
கருணாவும், கருணாவின் சகாக்களும் கிழக்கில் பிரதேசவாதத்தைத் தூண்டி வட பகுதி வர்த்தகர்களை மிரட்டி, வெளியேற்றி, ஒரு குழப்பகரமான சூழலை உருவாக்கிய போது அதனை முறியடித்து மக்களை தெளிவுபடுத்தியதுடன், தேசியத் தலைவன் மீது தென்தமிழீழ மக்கள் கொண்டிருக்கும் அந்தப் பற்றினை வெளிப்படுத்தினார்.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது துயர் துடைப்புப் பணிகளில் இரவு பகல் பாராது சேவைகளைச் செய்து வந்த கௌசல்யன் அந்த மக்களின் பிரச்சினைகளைக் கண்டு கேட்டறிந்து தீர்வு காண்பதற்கான முயற்சிகளிலும் அயராது பாடுபட்டார்.
மட்டு. அம்பாறை மாவட்டத்தின் கல்வி நிலை மிகப் மோசமாகப் பின்னடைந்திருந்தது. குறிப்பாக விடுதலைப்புலிகளின் நிர்வாகப் பகுதியிலுள்ள வறிய கிராமங்களின் கல்வி நிலையை உயர்த்துவதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களைத் துறைசார்ந்தோரிடம் பகிர்ந்து அதனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
ஒட்டு மொத்தத்தில் மட்டு. அம்பாறை மாவட்டத்தில் லெப்.கேணல் கௌசல்யன் அவர்கள் போராளியாக பொது மக்களின் சேவகனாக நின்று தமது சேவையைத் தேசியத்துக்கும், தாயக மக்களுக்கும் அற்பணிப்பு டன் செய்துள்ளார் என்றால் அது மிகையாகாது.
இவ்வாறான ஒரு சிறந்த வீரனை, மக்கள் சேவகனை, விடுதலையை நேசித்த தேசியத் தலைவனின் கீழ் நின்ற பொறுப்பாளனை, தமிழர் தாயகம் இழந்து ஓராண்டாகின்றது. லெப்.கேணல் கௌசல்யனுடன் அரசியல்துறைப் போராளிகளான மேஜர் செந்தமிழன், மேஜர் புகழவன், 2ம் லெப்.விதிமாறன் மற்றும் வாகன சாரதியான விவேகானந்தமூர்த்தி மற்றும் மாமனிதர் அ. சந்திரநேரு ஆகியோரும் இந்தத் துரோகிகளின் தாக்குதலில் உயிரிழந்தனர். இவர்களுக்கும் அனுதாபங்கள் உரித்தாகட்டும். ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும் அந்தத் துயரம் இன்னும் தமிழினத்தின் நெஞ்சில் மாறாத ரணமாகவுள்ளது.
இன்னும் துரோகிகளின் கொடூரத்தனத்துக்கு முற்றுப்பள்ளி வைத்து இதயசுத்தியுடன் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான எந்த நடவடிக்கைகளும் சிறிலங்கா அரசு ஏற்படுத்த முனையவில்லை.
எனவே எந்த இலட்சியக் கனவுகளை லெப்.கேணல் கௌசல்யன் கண்டாரோ, அதனைத் தலைவனின் வழியில் நின்று சக போராளிகள் சரித்திரம் படைப்பார்கள் அதற்கான காலம் நாள் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.</span>
<i><b>நன்றி- ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு-
ஆசிரியர் தலையங்கம்(07/02/06)</b></i>[/b]
"
"
"

