02-07-2006, 04:29 AM
<b>யாழில் தொடர்ந்து படைக்குவிப்பு- தேடுதல் நடவடிக்கைகள்! </b>
யாழ். குடாநாட்டில் இயல்பு நிலைக்கு எதிராக தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக பல்வேறு பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.
அமைதி முயற்சிகளை மீண்டும் முன்னெடுக்கும் விதத்தில் ஜெனீவாவில் அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற இருக்கின்ற பேச்சுக்கான நல்லெண்ண நடவடிக்கையாக யாழ். குடாநாட்டில் பொங்குயெழும் மக்கள் படையால் படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த சகல நடவடிக்கைகளும் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ள சூழலில் பொதுமக்களுக்கு எதிரான சிறிலங்காப் படைகளின் அரச பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்ந்தும் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாக பல்வேறு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படையால் விடுக்கப்பட்ட தாக்குதல் எச்சரிக்கை குறித்து சிறிலங்கா படை உயர் அதிகாரிகள் நேற்று பலாலி இராணுவத் தளத்தில் ஒன்று கூடி ஆராய்ந்துள்ளனர்.
பலாலி இராணுவத் தளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு இச்சந்திப்பு யாழ். மாவட்டத் தளபதி சந்திரசிறி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஒன்று கூடலில் வீதிக் கண்காணிப்பையும் சுற்றுக்காவல் நடவடிக்கையையும் தேடுதல் நடவடிக்கையையும் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாகவச்சேரி டச்சு வீதியில் நேற்றுக் காலை குறிப்பிட்ட சில வீடுகள் படையினரால் முற்றுகையிடப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வீடுகள் மற்றும் காணிகளைப் படையினர் தோண்டி சோதனை நடத்தியதுடன் பொதுமக்கள் சிலரையும் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
தென்மராட்சியில் நேற்று பல இடங்களில் படையினரால் வாகனங்கள் மறிக்கப்பட்டு வீதிச் சோனை நடைபெற்றுள்ளது.
இச்சம்பவத்தின் போது கைதடியில் இளைஞர் ஒருவரை படையினர் தடிகளால் தாக்கினர்.
கடந்த ஒரு மாத காலப்பகுதியில் படையினராலும் ஈ.பி.டி.பியினராலும் கடத்திச் செல்லப்பட்டு இளைஞர்கள் பலர் பலாலியிலோ, காங்கேசன்துறையிலோ இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டிருக்காலம் என்று காணாமல் போன இளைஞர்களின் உறவினர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக உறவினர்களால் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் பலர் தம்மால் கைது செய்யப்படவில்லை என்று படையினர் கூறி வருவதாகவும், இதனால் காணாமல் போனவர் தொடர்பில் மர்மம் நிலவி வருவதுடன் இவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஊர்காவல்துறை தம்பட்டிக் கிராம கடற்றொழிலாளர்களுக்கு சிறிலங்காக் கடற்படையினர் மேலதிகமாக விசேட அடையாள அட்டை ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அடையாள அட்டையை வழங்குவதற்கும் வசதியாக கடற்றொழிலாளர்களை புகைப்படம் பிடித்து வரும் கடற்படையினர் அவர்களிடமிருந்து அட்டை ஒன்றில் கையொப்பங்கள் பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
நாரந்தனை வடக்கில் நிலை கொண்டிருக்கும் கடற்படையினரே இந்த அடையாள அட்டைகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடற்றொழிலாளர்களிடம் தேசிய அடையாள அட்டை, இராணுவ விசேட அடையாள அட்டை, கடற்படையினர் வழங்கிய மீனவ அடையாள அட்டை, கடற்றொழில் சங்கம் வழங்கிய தொழிலாளர் அட்டை ஆகிய நான்கு அடையாள அட்டைகள் இருக்கும் நிலையில் ஐந்தாவது அட்டை ஒன்றை வழங்குவதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
கச்சாய் குடாக்கடல் பரப்பில் படையினரால் மேற்கொள்ளப்படும் மீன் பிடித்தடைகள், கடல் உயர் பாதுகாப்பு வலய விஸ்தரிப்பு நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்ட நூற்றுக்காணக்கான சிறு கடல் மீன்பிடித்தொழில் ஈடுபட்டு வந்த குடும்பங்களுக்கு சிறிலங்கா அரசு தொழில் நட்டஈடு வழங்க வேண்டும் என்று கச்சாய் லிகோரியார் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் அரச அதிபர் மற்றும் பல்வேறு தரப்புக்களுக்கு அவரச வேண்டுகோளை விடுத்திருக்கின்றது.
முகமாலை சோதனைச் சாவடியூடாக வரும் பொது மக்களை விசாரணைக்குட்படுத்தும் படைப்புலனாய்வாளர்கள் பத்திரிகைகளில் வருகின்ற பொதுமக்களின் புகைப்படங்கள் பெயர்கள் அடங்கிய குறிப்புக்களுடன் தற்பொழுது விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் தொடர்பாகவும் அவர்களின் இருப்பிடங்கள் குடும்ப விவரங்கள் போன்றவற்றை படைப் புலனாயர்வாளர்கள் திரட்டி வருவதாகவும் தெரியவருகிறது.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
யாழ். குடாநாட்டில் இயல்பு நிலைக்கு எதிராக தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக பல்வேறு பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.
அமைதி முயற்சிகளை மீண்டும் முன்னெடுக்கும் விதத்தில் ஜெனீவாவில் அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற இருக்கின்ற பேச்சுக்கான நல்லெண்ண நடவடிக்கையாக யாழ். குடாநாட்டில் பொங்குயெழும் மக்கள் படையால் படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த சகல நடவடிக்கைகளும் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ள சூழலில் பொதுமக்களுக்கு எதிரான சிறிலங்காப் படைகளின் அரச பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்ந்தும் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாக பல்வேறு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே யாழ். மாவட்ட பொங்கியெழும் மக்கள் படையால் விடுக்கப்பட்ட தாக்குதல் எச்சரிக்கை குறித்து சிறிலங்கா படை உயர் அதிகாரிகள் நேற்று பலாலி இராணுவத் தளத்தில் ஒன்று கூடி ஆராய்ந்துள்ளனர்.
பலாலி இராணுவத் தளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு இச்சந்திப்பு யாழ். மாவட்டத் தளபதி சந்திரசிறி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஒன்று கூடலில் வீதிக் கண்காணிப்பையும் சுற்றுக்காவல் நடவடிக்கையையும் தேடுதல் நடவடிக்கையையும் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாகவச்சேரி டச்சு வீதியில் நேற்றுக் காலை குறிப்பிட்ட சில வீடுகள் படையினரால் முற்றுகையிடப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வீடுகள் மற்றும் காணிகளைப் படையினர் தோண்டி சோதனை நடத்தியதுடன் பொதுமக்கள் சிலரையும் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
தென்மராட்சியில் நேற்று பல இடங்களில் படையினரால் வாகனங்கள் மறிக்கப்பட்டு வீதிச் சோனை நடைபெற்றுள்ளது.
இச்சம்பவத்தின் போது கைதடியில் இளைஞர் ஒருவரை படையினர் தடிகளால் தாக்கினர்.
கடந்த ஒரு மாத காலப்பகுதியில் படையினராலும் ஈ.பி.டி.பியினராலும் கடத்திச் செல்லப்பட்டு இளைஞர்கள் பலர் பலாலியிலோ, காங்கேசன்துறையிலோ இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டிருக்காலம் என்று காணாமல் போன இளைஞர்களின் உறவினர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக உறவினர்களால் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் பலர் தம்மால் கைது செய்யப்படவில்லை என்று படையினர் கூறி வருவதாகவும், இதனால் காணாமல் போனவர் தொடர்பில் மர்மம் நிலவி வருவதுடன் இவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஊர்காவல்துறை தம்பட்டிக் கிராம கடற்றொழிலாளர்களுக்கு சிறிலங்காக் கடற்படையினர் மேலதிகமாக விசேட அடையாள அட்டை ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அடையாள அட்டையை வழங்குவதற்கும் வசதியாக கடற்றொழிலாளர்களை புகைப்படம் பிடித்து வரும் கடற்படையினர் அவர்களிடமிருந்து அட்டை ஒன்றில் கையொப்பங்கள் பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
நாரந்தனை வடக்கில் நிலை கொண்டிருக்கும் கடற்படையினரே இந்த அடையாள அட்டைகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடற்றொழிலாளர்களிடம் தேசிய அடையாள அட்டை, இராணுவ விசேட அடையாள அட்டை, கடற்படையினர் வழங்கிய மீனவ அடையாள அட்டை, கடற்றொழில் சங்கம் வழங்கிய தொழிலாளர் அட்டை ஆகிய நான்கு அடையாள அட்டைகள் இருக்கும் நிலையில் ஐந்தாவது அட்டை ஒன்றை வழங்குவதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
கச்சாய் குடாக்கடல் பரப்பில் படையினரால் மேற்கொள்ளப்படும் மீன் பிடித்தடைகள், கடல் உயர் பாதுகாப்பு வலய விஸ்தரிப்பு நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்ட நூற்றுக்காணக்கான சிறு கடல் மீன்பிடித்தொழில் ஈடுபட்டு வந்த குடும்பங்களுக்கு சிறிலங்கா அரசு தொழில் நட்டஈடு வழங்க வேண்டும் என்று கச்சாய் லிகோரியார் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் அரச அதிபர் மற்றும் பல்வேறு தரப்புக்களுக்கு அவரச வேண்டுகோளை விடுத்திருக்கின்றது.
முகமாலை சோதனைச் சாவடியூடாக வரும் பொது மக்களை விசாரணைக்குட்படுத்தும் படைப்புலனாய்வாளர்கள் பத்திரிகைகளில் வருகின்ற பொதுமக்களின் புகைப்படங்கள் பெயர்கள் அடங்கிய குறிப்புக்களுடன் தற்பொழுது விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் தொடர்பாகவும் அவர்களின் இருப்பிடங்கள் குடும்ப விவரங்கள் போன்றவற்றை படைப் புலனாயர்வாளர்கள் திரட்டி வருவதாகவும் தெரியவருகிறது.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
"

