02-07-2006, 04:26 AM
<b>எஸ்.பி.திசநாயக்க விடுதலை எப்போது?</b>
சிறிலங்கா நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவருமான எஸ்.பி.திசநாயக்க விசேட மன்னிப்பின் கீழ் இம்மாதம் 15 ஆம் நாள் அல்லது 17 ஆம் நாள் விடுதலையாகக் கூடும் என்று சிறிலங்கா அரச தலைவர் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் காப்பாற்றக் கோரி எஸ்.பி.திசநாயக்க உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு எதிர்வரும் 13 ஆம் நாள் விசாரணைக்கு வருகிறது.
எஸ்.பி.திசநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படும் நிலையில் இந்த வழக்கு திரும்பப் பெறக் கூடும் என்று தெரியவருகிறது.
அந்த வழக்கு திரும்பபெறப்பட்டால் எஸ்.பி.யை விடுதலை செய்வதற்கு இருக்கும் சட்டச் சிக்கல்கள் தீரும் என்பது அரச தலைவர் செயலகத்தின் கருத்தாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எஸ்.பி.திசநாயக்கவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைப் படி மார்ச் மாதம் 27 ஆம் நாள்தான் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
சிறிலங்கா நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவருமான எஸ்.பி.திசநாயக்க விசேட மன்னிப்பின் கீழ் இம்மாதம் 15 ஆம் நாள் அல்லது 17 ஆம் நாள் விடுதலையாகக் கூடும் என்று சிறிலங்கா அரச தலைவர் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் காப்பாற்றக் கோரி எஸ்.பி.திசநாயக்க உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு எதிர்வரும் 13 ஆம் நாள் விசாரணைக்கு வருகிறது.
எஸ்.பி.திசநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படும் நிலையில் இந்த வழக்கு திரும்பப் பெறக் கூடும் என்று தெரியவருகிறது.
அந்த வழக்கு திரும்பபெறப்பட்டால் எஸ்.பி.யை விடுதலை செய்வதற்கு இருக்கும் சட்டச் சிக்கல்கள் தீரும் என்பது அரச தலைவர் செயலகத்தின் கருத்தாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எஸ்.பி.திசநாயக்கவுக்கு விதிக்கப்பட்ட தண்டனைப் படி மார்ச் மாதம் 27 ஆம் நாள்தான் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>
"
"
"

