02-06-2006, 09:41 PM
Quote: உங்கள் நேர்மைக்கு தலைவணங்கிறன்.. ஆனாலும் இடிக்கிறதே.. உங்கடை சகோதரர்கள் தமிழீழ பணி செய்யினம்.. நீங்களோ தமிழீழம் கிடைச்சால் என்னைத் திருப்பி அனுப்பிப் போடுவான்.. எண்டு நினைக்கிறீங்கள்.. அப்ப எப்ப தமிழீழம் கிடைக்க வேணும் எண்டுறியள்..? உங்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பிறகா? உழைக்க வந்தேனெண்டுறியள்.. ? அப்ப நீங்களாவது உழைச்சு முடிஞ்ச பிறகு தமிழீழம் போவீங்கள் தானே? மற்றாக்கள் போல விடுமுறைக்கு மட்டும் போகாமல்..?
ம்... புலிகள் தமிழீழத்தை பிரகடனம் செய்ய போகிறார்கள் என்ற செய்தி வரும் போதெல்லாம் உங்கை எத்தினை பேருக்கு மனசு திடுக்கு திடுக்கு எண்டு அடிச்சிருக்கும் எண்டு இப்ப விளங்குது...
இவோன் எமது குடும்பம் மிகவும் வறிய குடும்பம். நான் ஒருவன் தான் வெளிநாட்டில் இருக்கிறேன். நான் எனது 15 வது வயதில் இங்கு வந்தேன். இங்கு வந்து 8 ம் வகுப்பில் இருந்து எனது கல்வியை இங்கு தொடர்ந்தேன் 3 வருடங்கள் தொடர்ந்து படித்தேன். மாலையில் உணவகத்தில் வேலை காலையில் பாடசாலை இப்படி எனது வாழ்க்கையை 3 வருடங்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஓட்டிப்பார்த்தேன் முடியவில்லை. எமது குடும்ப நிலைக்கு பெருந்தொகை பணம் தேவைப்பட்ட படியால் பாடசாலைக்கு முற்று புள்ளிவைத்துவிட்டு தொடர்ந்து வேலை செய்ய தொடங்கினேன். இன்று நான் எனக்கு இருந்த பொறுப்புக்கள் யாவற்றையும் தீர்த்துவிட்டேன். ஆனாலும் இன்றும் எனது குடும்பத்தவர்களை நான் தான் பார்த்துவருகிறேன்.
எனக்கு வதிவிட அனுமதி பற்றி கவலை இல்லை ஏனெனில் எனக்கு ஜேர்மனிய தேசிய இன உரிமை கிடைத்துவிட்டது.
நான் 11 வருடங்கள் இங்கு வாழ்ந்து பழகிவிட்டேன். இங்கு பெறும் ஊதியம் போல் இலங்கையில் ஒரு போதுமே பெற முடியாது. இதனால் எனக்கு அங்கு சென்று வாழ விருப்பமில்லை. ஏனெனில் எமது ஏழ்மை நிலையை போக்கணும் என்றால் நான் இங்கு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அதனால் அங்கு சென்று வாழ்வது என்பது என்னால் முடியாத காரியம்.

