02-06-2006, 10:57 AM
ஊமை Wrote:தல நீங்கள் எனக்கு சொன்னதோ யாருக்கு சொன்னதோ என்பது இப்ப பிரச்சனை இல்லை. எனக்கு நாடே வேண்டாம் நான் ஓடித்தப்புகிறேன் என தான் நாம் இங்கு வந்தோம். அங்கே எவ்வளவு சனங்கள் எப்படி எப்படி எல்லாம் கஸ்டப்படுகின்றனர். அவர்கள் தங்கள் உயிரிலும் இரத்தத்திலும் நாட்டைக்கட்டி அங்கு ஒரு ஆட்பதிவுத்திணைக்களத்தை நிறுவி அங்கு தங்களையே தாங்கள் பதியவைக்கும் போது ஓடி வந்த நாம் என்ன தெனாவட்டு இருந்தால் அங்கு போய் எம்மையும் பதிய நிற்போம்.
[b]*** தணிக்கை
முதலில் பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாம். புலம் பெயர்நாட்டில் ஏதிலிகளாய் மட்டும் அல்ல , மாணவர்களாய் , உத்தியோகத்தர்களாயும் ஈழத்தவர்கள் உள்ளார்கள்.... அது முக்கியமான விடயமல்ல. தமிழீழ வளர்ச்சியில் இங்குள்ளவர் பங்கு அதிகம்.... ஆகவே எனக்கோ அல்லது புலம் பெயர் தமிழர் அனைவருக்கும் தாயகம் பற்றி பேசவும் அதற்கான தகுதியும் இருக்கிறது.
புலம் பெயர்ந்த ஒருவர்... அல்லது தற்காலிகமாக வெளிநாட்டில் தங்கிய ஒருவர் நாட்டுக்காக இரத்தம் சிந்தவில்லை அல்லது உயிர்த் தியாகம் செய்யவில்லை என்பதை கேட்க்க சிரிப்புத்தான் வருகிறது.... எல்லோருக்கும் தாயகத்துக்குப் பாடுபடாதவர்களிற்கும் அவர்கள் நாட்டில் உரிமை இருக்கிறது.... அதற்க்கு நான் விதிவிலக்கு அல்ல....!
[b]*** தணிக்கை
::

