02-06-2006, 09:16 AM
[b][size=20]மீண்டும் புலத்தில் இருந்து ஓர் புலம்பல்...
Spice கடை
<img src='http://www.toothpastefordinner.com/061302/i-hate-grocery-shopping.gif' border='0' alt='user posted image'>
[b]
புலத்தில் இருக்கும் எங்கள் வாழ்க்கயில் தமிழ் கடைகள் பெரும் உதவி புரின்றன. ஊரில் உள்ள பொருட்களை எல்லாம் பெற்றுகொள்ள முடிகிறது.
இப்ப இங்க அவுஸ்திரேலியாவில இருக்கிற தமிழ் கடைகளை எங்கட சனம் "ஸ்பைர்ஸ் (spice) கடை" என்று தான் சொல்லுவினம் என்ன..என்னமோ ஸ்பைர்ஸ் கேள்ஸ் மாதிரி..சரி கதைக்கி வருவமன்..
ராஜன் வீட்டுக்கு செல்வோமா?
மாலை 6 மணி, தொலைக்காட்சியில் அவுஸ்திரேலியாவும் தென்னாபிரிக்காவும் கிரிக்கட் விளையாடி கொண்டு இருக்கிறார்கள். ராஜன் தொலைக்காச்சியின் முன்னால்..
வெளியால போக தயாராகி வந்த ராதிகா, "என்னங்க?என்ன்ன்னங்க..."
"ராதி தள்ளி நில்லும் பார்ப்பம். மட்ச் பார்க்கிறன் தெரியவில்லையா??"
"அதை சொல்லுங்கோ, சரியா மட்ச் பார்த்திருந்தா உங்களிட்ட மாட்டி இருப்பனா?"
"பழைய கதை எல்லாம் இப்ப எதுக்கு, நிம்மதியா மனிசனை ஒரு மட்ச் பார்க்கவிடமாட்டியளா?"
"மாமி..மாமி இங்க ஒருக்கா வாங்கோ?"
"இப்ப எதுக்கு உன்ட கொத்தையை கூப்புடுறீர்?"
அதற்குல் ராதிகாவின் குரல் கேட்டு வீட்டின் மண்டபத்திற்குள் ரஜனின் தாயார் வர,
"மாமி இவர என்ன என்று கேளுங்கோ, எங்கள வெளிக்கிட சொல்லி போட்டு டீவீக்கு முன்னால குந்தி கொண்டு இருக்கிறார்"
"தம்பி அப்பு, ராசா இந்த ஸ்பைர்ஸ் கடைக்கு போக வேணும் அப்பன், விடிய காலையில இருந்து கேட்கிறமல்லோ.." என கூறி பக்கத்தில் வந்து அமர,
"சரி சரி விட மாட்டியளே ஒரு ரெணுடு நிமிசத்தில வாறன், காரில போய் இருங்கோ" என கூறி கை கால் கழுவ செல்ல, ராதிகாவும் புவனேஸ்வரியும் கீழ் தளத்தில் இருக்கும் காரை நாடி செல்கின்றனர்.
"என்ன மாமியும் மருமகளும் சீட் பெள்ற்றை போடுறமாதிரி ஏதாவது யோசனை இருக்கா இல்லையா?" என கேட்டவாறு காருக்குள் ராஜன் ஏற.
"என்டா தம்பி நாங்கள் அந்த காலத்தில பார்க்காத காரா? அங்க எல்லாம் சீற்று பெல்ற்றே போடனாங்கள்??"
"எனை என்ட லைஸன்ஸ நீங்களே பிடுங்கி பொலிஸிற்ற குடுப்பியள் போல, ரெண்டு பேரும் பெல்ற்றை போடுங்கோ"என கூறி காரை ஓட தொடங்கினான்.
"ராதி என்ன என்ன வேண்டுறது என்று பட்டியல் போட்டாச்சு தானே, பிறகு கடையில நின்று கொண்டு மாமியாரும் மருமகளும் லிஸ்ட்போடாதிங்கோ , இப்பவே சொல்லிபோட்டன்"
"அதெல்லாம் போட்டாச்சு...என்னங என்னங்க பார்த்து வெள்ளை கோட்டை தாண்டி கார் போகுது"
"தொடங்கியாச்சா? இது தான் அம்மாவோட உம்மளை பின்னால காரில இருக்க சொல்லுறனான். பக்கத்தில இருந்து கொண்டு புதுசா வீதி முறை எல்லாம் கண்டு பிடிக்கிறீர்"
கணவவின் பேச்சுக்கு முகத்தை சுளித்திவிட்டு, காரின் பின் இருக்கையில் இருந்த மாமியாருடம் என்ன பொருட்கள் வாங்குவது என பேச்சில் இறங்கினாள்.
10 நிமிடங்களின் பின்னர் எவரெஸ்ட் ஸ்பைர்ஸ் கடையில் ராஜன் குடும்பம்...
"வணக்கம் சேகர் அண்ணை, எப்பிடி சுகம்?"
"வணக்கம் ராஜன், வாங்கோ வாங்கோ,என்ன கன நாளா ஆட்களை காணம்?"
இடையில் குறுக்கிட்ட ராதிகா "அது சேகர் அண்ணை இவருக்கு வேலை போய்வரவே நேரம் சரியா இருக்கு என்ன, ஏதோ இப்பதான் கன நாளுக்கு பின்னால நேரம் கிடைச்சு இருக்கு"
சேகர் மனதிற்குள் "இது தான் எங்கட பொம்பிளையளின்ட மனசு, புருசன பூரிக்கட்டையால வீட்டில அடிசாலும் , வெளியில ஒரு சொட்டு தன்னும் விட்டுகுடுக்க மாட்டாங்கள்"
"சேகர் அண்ணை ,ஒரு பரத நாட்டிய அரங்கேற்றத்துக்கு போக வேணும், என்னத்தை குடுக்கிறது என்று தெரியலை, கடையில ஏதாவது பரிசுபொருட்கள் இருக்கே?"
"இடது பக்கத்தில இருக்கும் பாருங்கோவன் ராதிகா, ராஜன் யாருடைய அரங்கேற்றம்?"
"இவை பாலா அண்ணையிட மகளின்ட தான்?"
"என்ன? அந்த பிள்ளை நான் இங்கு வந்த பிறகு தானே பிறந்தது..ஒரு 10 வயசு இருக்குமா?
"10 இல்லாட்டி 11 தான் இருக்கும்..சின்ன பிள்ளை தான்"
"எங்கட சனத்தில சிலதுக்கு இது ஒரு வேலை என்ன? பிள்ளையளையும் கஸ்டபடுத்தி, காசையும் சிலவு செய்து....அதுக்குள்ள என்னத்தை அரங்கேற்றம்"
"இந்த சன்.டீவியில பாட்டு போட்டியல சொல்லுவினமே "நான் 2 வயசில இருந்து பாட்டு கத்துகிறேன்" "
"அது என்டா சரிதான், எங்கட சனத்தில சிலதுக்கு இது ஒரு மான பிரச்சனை என்ன. தாங்கள் நல்ல வசதி என்று காட்ட இதுவும் ஒரு வழி.."
"சரி தம்பி சேகர் செல்வி புதுசா வந்ததே" ராஜனின் தாய் தன்னுடைய வேலையில கவனமாக..
"வந்தது வெளியில போட்டுது என்ன, அடுத்த முறை எடுங்கோவன்"
"என்ன தம்பி சரியா மேசைக்கு கீழ பாருமன், வேண்டியவைக்கு குடுக்க எடுத்து வச்சிருப்பியள்" <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கடைக்காரன் முகத்தில் அசடு வழிய "ஈஈஈஈஈஈஈ" <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
"இங்ச சேகர் சொல்ல வேணும் என்று நினைச்சனான் இந்த கஸற்றுகளை ஏன்டா பழைய கஸட்டில அடிக்கிறியள்? கிளியர் இல்லை?"
"அம்மா உங்களை ராதி கூப்பிடுற போல இருக்கு" என ராஜன் தாயை எங்கிருந்து அகற்றமுயல..
"சரி காரில இருக்கிறம், காசை குடுத்து போட்டு வா அப்பு, அப்ப தமி சேகர் பிறகு பார்ப்பம் என்ன"
"ஓம் அம்மா பிறகு பார்ப்பம்.."
பணத்தை குடுத்து பொருற்களுடன் காரில் ஏறிய ராஜன் தாயை பார்த்து "எனை அம்மா எதுக்கு கடையில சேகர் அண்ணாவோட அப்பிடி கதைக்கிறியள்?"
"பின்ன என்னடா பூனைக்கு யாராவது மணி கட்ட வேணும் தானே?"
காரை கிளப்பியவாறு "என்ன வீட்டில இருக்கிற ரெண்டு பூனைக்கு யார் மணிகட்டுறது.?" என சத்தம் போடாமல் கூற..
ராதிகாவும், புவனேஸ்வரியும் ஒன்றாக "என்ன?"
"இல்லை இந்த காரை முன்னுக்குவிட்டவன் சரியா விடலை என்ன, காரை எடுக்க சிரமமாஇருக்கு.."என்றவாறு ராஜன் தன் காரை வீதியில் நகரவைத்தான்...
புலம்பலுக்கு ஒரு சின்ன இடைவேளை....
Spice கடை
<img src='http://www.toothpastefordinner.com/061302/i-hate-grocery-shopping.gif' border='0' alt='user posted image'>
[b]
புலத்தில் இருக்கும் எங்கள் வாழ்க்கயில் தமிழ் கடைகள் பெரும் உதவி புரின்றன. ஊரில் உள்ள பொருட்களை எல்லாம் பெற்றுகொள்ள முடிகிறது.
இப்ப இங்க அவுஸ்திரேலியாவில இருக்கிற தமிழ் கடைகளை எங்கட சனம் "ஸ்பைர்ஸ் (spice) கடை" என்று தான் சொல்லுவினம் என்ன..என்னமோ ஸ்பைர்ஸ் கேள்ஸ் மாதிரி..சரி கதைக்கி வருவமன்..
ராஜன் வீட்டுக்கு செல்வோமா?
மாலை 6 மணி, தொலைக்காட்சியில் அவுஸ்திரேலியாவும் தென்னாபிரிக்காவும் கிரிக்கட் விளையாடி கொண்டு இருக்கிறார்கள். ராஜன் தொலைக்காச்சியின் முன்னால்..
வெளியால போக தயாராகி வந்த ராதிகா, "என்னங்க?என்ன்ன்னங்க..."
"ராதி தள்ளி நில்லும் பார்ப்பம். மட்ச் பார்க்கிறன் தெரியவில்லையா??"
"அதை சொல்லுங்கோ, சரியா மட்ச் பார்த்திருந்தா உங்களிட்ட மாட்டி இருப்பனா?"
"பழைய கதை எல்லாம் இப்ப எதுக்கு, நிம்மதியா மனிசனை ஒரு மட்ச் பார்க்கவிடமாட்டியளா?"
"மாமி..மாமி இங்க ஒருக்கா வாங்கோ?"
"இப்ப எதுக்கு உன்ட கொத்தையை கூப்புடுறீர்?"
அதற்குல் ராதிகாவின் குரல் கேட்டு வீட்டின் மண்டபத்திற்குள் ரஜனின் தாயார் வர,
"மாமி இவர என்ன என்று கேளுங்கோ, எங்கள வெளிக்கிட சொல்லி போட்டு டீவீக்கு முன்னால குந்தி கொண்டு இருக்கிறார்"
"தம்பி அப்பு, ராசா இந்த ஸ்பைர்ஸ் கடைக்கு போக வேணும் அப்பன், விடிய காலையில இருந்து கேட்கிறமல்லோ.." என கூறி பக்கத்தில் வந்து அமர,
"சரி சரி விட மாட்டியளே ஒரு ரெணுடு நிமிசத்தில வாறன், காரில போய் இருங்கோ" என கூறி கை கால் கழுவ செல்ல, ராதிகாவும் புவனேஸ்வரியும் கீழ் தளத்தில் இருக்கும் காரை நாடி செல்கின்றனர்.
"என்ன மாமியும் மருமகளும் சீட் பெள்ற்றை போடுறமாதிரி ஏதாவது யோசனை இருக்கா இல்லையா?" என கேட்டவாறு காருக்குள் ராஜன் ஏற.
"என்டா தம்பி நாங்கள் அந்த காலத்தில பார்க்காத காரா? அங்க எல்லாம் சீற்று பெல்ற்றே போடனாங்கள்??"
"எனை என்ட லைஸன்ஸ நீங்களே பிடுங்கி பொலிஸிற்ற குடுப்பியள் போல, ரெண்டு பேரும் பெல்ற்றை போடுங்கோ"என கூறி காரை ஓட தொடங்கினான்.
"ராதி என்ன என்ன வேண்டுறது என்று பட்டியல் போட்டாச்சு தானே, பிறகு கடையில நின்று கொண்டு மாமியாரும் மருமகளும் லிஸ்ட்போடாதிங்கோ , இப்பவே சொல்லிபோட்டன்"
"அதெல்லாம் போட்டாச்சு...என்னங என்னங்க பார்த்து வெள்ளை கோட்டை தாண்டி கார் போகுது"
"தொடங்கியாச்சா? இது தான் அம்மாவோட உம்மளை பின்னால காரில இருக்க சொல்லுறனான். பக்கத்தில இருந்து கொண்டு புதுசா வீதி முறை எல்லாம் கண்டு பிடிக்கிறீர்"
கணவவின் பேச்சுக்கு முகத்தை சுளித்திவிட்டு, காரின் பின் இருக்கையில் இருந்த மாமியாருடம் என்ன பொருட்கள் வாங்குவது என பேச்சில் இறங்கினாள்.
10 நிமிடங்களின் பின்னர் எவரெஸ்ட் ஸ்பைர்ஸ் கடையில் ராஜன் குடும்பம்...
"வணக்கம் சேகர் அண்ணை, எப்பிடி சுகம்?"
"வணக்கம் ராஜன், வாங்கோ வாங்கோ,என்ன கன நாளா ஆட்களை காணம்?"
இடையில் குறுக்கிட்ட ராதிகா "அது சேகர் அண்ணை இவருக்கு வேலை போய்வரவே நேரம் சரியா இருக்கு என்ன, ஏதோ இப்பதான் கன நாளுக்கு பின்னால நேரம் கிடைச்சு இருக்கு"
சேகர் மனதிற்குள் "இது தான் எங்கட பொம்பிளையளின்ட மனசு, புருசன பூரிக்கட்டையால வீட்டில அடிசாலும் , வெளியில ஒரு சொட்டு தன்னும் விட்டுகுடுக்க மாட்டாங்கள்"
"சேகர் அண்ணை ,ஒரு பரத நாட்டிய அரங்கேற்றத்துக்கு போக வேணும், என்னத்தை குடுக்கிறது என்று தெரியலை, கடையில ஏதாவது பரிசுபொருட்கள் இருக்கே?"
"இடது பக்கத்தில இருக்கும் பாருங்கோவன் ராதிகா, ராஜன் யாருடைய அரங்கேற்றம்?"
"இவை பாலா அண்ணையிட மகளின்ட தான்?"
"என்ன? அந்த பிள்ளை நான் இங்கு வந்த பிறகு தானே பிறந்தது..ஒரு 10 வயசு இருக்குமா?
"10 இல்லாட்டி 11 தான் இருக்கும்..சின்ன பிள்ளை தான்"
"எங்கட சனத்தில சிலதுக்கு இது ஒரு வேலை என்ன? பிள்ளையளையும் கஸ்டபடுத்தி, காசையும் சிலவு செய்து....அதுக்குள்ள என்னத்தை அரங்கேற்றம்"
"இந்த சன்.டீவியில பாட்டு போட்டியல சொல்லுவினமே "நான் 2 வயசில இருந்து பாட்டு கத்துகிறேன்" "
"அது என்டா சரிதான், எங்கட சனத்தில சிலதுக்கு இது ஒரு மான பிரச்சனை என்ன. தாங்கள் நல்ல வசதி என்று காட்ட இதுவும் ஒரு வழி.."
"சரி தம்பி சேகர் செல்வி புதுசா வந்ததே" ராஜனின் தாய் தன்னுடைய வேலையில கவனமாக..
"வந்தது வெளியில போட்டுது என்ன, அடுத்த முறை எடுங்கோவன்"
"என்ன தம்பி சரியா மேசைக்கு கீழ பாருமன், வேண்டியவைக்கு குடுக்க எடுத்து வச்சிருப்பியள்" <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கடைக்காரன் முகத்தில் அசடு வழிய "ஈஈஈஈஈஈஈ" <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->"இங்ச சேகர் சொல்ல வேணும் என்று நினைச்சனான் இந்த கஸற்றுகளை ஏன்டா பழைய கஸட்டில அடிக்கிறியள்? கிளியர் இல்லை?"
"அம்மா உங்களை ராதி கூப்பிடுற போல இருக்கு" என ராஜன் தாயை எங்கிருந்து அகற்றமுயல..
"சரி காரில இருக்கிறம், காசை குடுத்து போட்டு வா அப்பு, அப்ப தமி சேகர் பிறகு பார்ப்பம் என்ன"
"ஓம் அம்மா பிறகு பார்ப்பம்.."
பணத்தை குடுத்து பொருற்களுடன் காரில் ஏறிய ராஜன் தாயை பார்த்து "எனை அம்மா எதுக்கு கடையில சேகர் அண்ணாவோட அப்பிடி கதைக்கிறியள்?"
"பின்ன என்னடா பூனைக்கு யாராவது மணி கட்ட வேணும் தானே?"
காரை கிளப்பியவாறு "என்ன வீட்டில இருக்கிற ரெண்டு பூனைக்கு யார் மணிகட்டுறது.?" என சத்தம் போடாமல் கூற..
ராதிகாவும், புவனேஸ்வரியும் ஒன்றாக "என்ன?"
"இல்லை இந்த காரை முன்னுக்குவிட்டவன் சரியா விடலை என்ன, காரை எடுக்க சிரமமாஇருக்கு.."என்றவாறு ராஜன் தன் காரை வீதியில் நகரவைத்தான்...
புலம்பலுக்கு ஒரு சின்ன இடைவேளை....
[b][size=15]
..
..

