Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர்-முஸ்லிம் நல்லுறவு பேணல் முயற்சிகள்
#3
<b>மூன்றரை மாதத்துக்கு பின்னரான முஸ்லிம்கள் - புலிகள் சந்திப்பில் சமூகங்களில் இருந்து முரண்பாட்டாளர்களை புறந்தள்ளுவதாக தீர்மானம் </b>

அம்பாறை மாவட்டத்தில் சுமார் மூன்றரைமாத கால இடைவெளியின் பின்னர் நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அனுசரணையுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான பாவட்டாவிலுள்ள மாவட்ட அரசியல்துறைப் பணிமனையில் இச்சந்திப்பு இடம் பெற்றது.

இச்சந்திப்பில் விடுதலைப் புலிகளின் சார்பில் அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா, தளபதி ஜனார்த்தனன், மாவட்ட நிருவாகப் பொறுப்பாளர் தொல்காப்பியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முஸ்லிம்கள் சார்பில் அக்கரைப்பற்று பட்டின பள்ளிவாசல் தலைவர் ஏ.ரீ.பாறூக், அக்கரைப்பற்று வர்த்தகர் சங்க முக்கியஸ்த்தர் ஓ.எம்.இஸ் மாயில், சகவாழ்வுமன்ற அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஐ.எம்.இப்றா கீம், முஸ்லிம் சமாதான செயலக தலைவர் யூ.எம்.உவைஸ் மற்றும் முக்கிய பிரமுகர்களான ஏ. எல்.மு கைதீன், எம்.சீ.முகம்மட்ஹாசீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மிக அந்நியோன்னியமாகவும், புரிந்துணர்வுடனும் நடைபெற்ற இச்சந்திப்பு வெற்றிகரமாக இடம் பெற்றதாக இருதரப்பினரும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பின் இறுதியில் விடுதலைப்புலிகளும், முஸ்லிம் பிரதிநிதிகளும் கூட்டாகவிடுத்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஒவ்வொரு மாதமும் இருசாராரும் சந்தித்து மக்களின் அன்றாட வாழ்க்கை வசதிகள், பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடி இயல்பு வாழ்க்கையை தொடர்ந்து பேணுவதுடன் தமிழ், முஸ்லிம் உறவுகளைப் பேணிப்பாதுகாப்பது என்றும், தற்போது நிலவும் விவசாயச் செய்கை, மற்றும் வியாபாரத் தற்காலிக தொழில் புரிதல் சம்பந்தமாக இடையூறுகள் அனைத்தும் களையப்பட்டு இன்று முதல் தமிழ், முஸ்லிம் மக்கள் தத்தமது தொழில்களை இயல்பாகச் செய்வதென்றும் முடிவு காணப்பட்டது.

இரு சமூகங்களுக்குமிடையேயிருந்து குறிப்பிட்ட ஒரு சிலர் முரண்பாட்டாளர்களாகத் தொழிற்படுவதை இனங்கண்டு அவர்களை சமூகங்களிலிருந்து புறந்தள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தொடர்ந்து ஏற்படுத்தப்படும் சந்திப்புக்களில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களைச் சேர்ந்த பிரமுகர்களை கலந்துகொள்ளச் செய்வதென்றும் அநாவசியமற்ற, நாகரீகமற்ற, முகவரியற்ற துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வதோடு அவர்களை இரு சமூகங்களும் உடனுக்குடன் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-29-2006, 09:10 AM
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 08:22 AM
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 09:01 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 09:37 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)