02-06-2006, 08:21 AM
இவோன் Wrote:ஐயாக்கள்.. தமிழீழ ஆட்பதிவு திணைக்களத்தில பதியிறதுக்கு தமிழீழத்தில இருக்க வேணும் எண்டு சொல்லிட்டால் எல்லாரும் உடனடியாக போக றெடியோ..? இதே களத்தில தான் ஊமை ஒருமுறை எழுதியிருந்தவர்.. தன்ர மனக்கிடக்கையை... நாளைக்கே தமிழீழம் எண்டு புலிகள் அறிவித்தால்.. தங்களை உடனை திருப்பி அனுப்பிப் போடுவாங்களாம்.. அங்கை போய் தான் என்ன செய்யிறதாம்..? பாவம் சரியா கவலைப்படுறார்..
ஆண்டவா.. இவையைப் போல ஆட்களுக்காக எண்டாலும் தமிழீழம் கெதியில கிடைக்க வேணும்..
அது தான் இவோன் தமிழீழம் கிடைச்சால் நாம் அங்கை போய் என்ன தெருத்தெருவாக பிச்சை எடுப்பதோ ? நாம் அவப்போது விடுமுறையில் எமது குடும்பத்த பார்க்க செல்வோமே தவிர அங்கு போய் யார் நிரந்தரமாக தங்குவது. நாங்கள் உள்ளதுகளை உள்ள படி தான் சொல்வோம் ஓவர் எடுப்புகள் எல்லாம் எடுக்க மாட்டோம். நான் புலம் பெயர்ந்தது உழைப்பதற்காகவே அன்றி நாட்டு போர் சூழல் காரணமாக இல்லை. என்னைத்தவிர எம் குடும்பத்தவர் அனைவரும் தமிழீழத்தில் தான் அதுவும் என் சகோதரர்கள் தமிழீழப் பணி செய்த வண்ணமே இருக்கிறார்கள் சற்று அடக்கி வாசியுங்கள்.

