02-06-2006, 05:56 AM
<b><span style='font-size:25pt;line-height:100%'>முகத்தார் வீடு - அங்கம் 17</b></span>
<i>(9 மணியாகியும் பொண்ணம்மாக்கா நித்திரையாலை எழும்பவில்லை தேத்தண்ணியைப் போட்டுக் கொண்டு வந்து எழுப்புகிறார் முகத்தார் )</i>
முகத்தார் : இஞ்சரும் எழும்புமன் தேத்தண்ணி ஆறப்போகுது
பொண்ணம்மா: (கண்ணை மூடியபடியே) இப்ப எத்தினை மணி வேளைக்கு என்னத்துக்கு எழுப்பிறீயள்
முகத்தார் : இல்லை தேத்தண்ணியைக் குடிச்சிட்டுப் படுமன்
பொண்ணம்மா: பெரிய கரைச்சலப்பா உங்களாலை (தலையணைக்கு கீழை கையை விட்டு ஒரு போட்டோவை எடுத்து கண்ணிலை ஒத்துகிறா)
முகத்தார் : (சிரித்துக் கொண்டு) என்னதான் சொன்னாலும் உனக்கடி என்னிலை அன்;புதான் அல்லது எழும்பினவுடனை என்ரைபோட்டோவை கும்பிடுவியோ?
பொண்ணம்மா: லூசாப்பா நீங்க பாருங்கோ இது என்ன போட்டோ எண்டு
முகத்தார் : அட இது எங்கடை நாய் லசி இதை ஏனப்பா கும்பிடுறீர்?
பொண்ணம்மா: உங்கடை அம்மா எப்பிடி செத்தவ இந்த நாய் கடிச்சு ஏற்பாக்கித்தானே என்னை பெரிய கஷ்டத்திலை இருந்து காப்பாத்திய தெய்வத்தை நான் கும்பிடக்கூடாதோ?
முகத்தார் : நல்லா இருக்கடியம்மா உன்ரை பக்தி;
பொண்ணம்மா: சும்மா காலேலையே தொடங்காமல் பேஸ்ட்டை எடுத்து வையுங்கோ
முகத்தார் : அந்தக் கஷ்டம் உமக்கு வேண்டாம் எண்டுதான் நானே பல்செட்டை பிறஸ் பண்ணி வைச்சிருக்கன் எடுத்து மாட்டும்
<i>(அந்த நேரம் படலையைத் திறந்து கொண்டு சின்னப்பு வாறது தெரிகிறது)</i>
பொண்ணம்மா: இஞ்சை கூட்டாளி வாறர் வெளிலை வைச்சு கதைச்சுப் போட்டு அனுப்பி விடுங்கோ
முகத்தார் : (சா. . .இவள் படுத்தமாதிரியே விட்டிருக்கலாம் ) வா சின்னப்பு என்ன காலேலை இஞ்சாலிப் பக்கம்
சின்னப்பு : ஒரு சிக்கல் அதுதான் உன்னட்டை கேட்டுப் பாப்பம் எண்டு வந்தனான்
முகத்தார் : சொல்லு பாப்பம் ஏலுமெண்டா செய்யிறன்
சின்னப்பு : இல்லை மனுசிக்கு கோல் எடுக்க வேணும் ஒரு 200ரூபா கைமாத்தா எடுக்கேலுமோ.
முகத்தார் : ம். . .ம் ..மனுசியைச் சாட்டி இண்டையான் பொழுதைப் போக்கப் போறாய் கொஞ்சம் இதிலை இரன் மனுசி கிணத்தடியிலை நிக்கிறா வந்தவுடனை கேட்டு வாங்கித்தாறன் அது சரி இப்ப என்னதுக்கு சின்னாச்சி கொழும்புக்கு போனவா?
சின்னப்பு : அதையேன் கேக்கிறாய் இவள் கனகத்தின்ரை பெடிச்சி வெளிநாட்டுக்கு போக வெளிக்கிட்டது இவ தனக்கு எல்லாம் தெரியும் கூட்டிக் கொண்டு போறன் எண்டு போட்டு போயிட்டா நான் இஞ்சை நாயாகிறன்
முகத்தார் : எந்த நாட்டுக்காம் பெடிச்சி போகுது
சின்னப்பு : இந்த குவைத்துக்கு ஹவுஸ்மேட் ஆகப் போகப்போகுதாம்
முகத்தார் : கிழிஞ்சுது சனத்தைத் திருத்தேலாது என்ன பெரிய ஹவுஸ்மேட். . . வீட்டுவேலைக்காரியா போற தெண்டு சொல்லுறதுதானே வீட்டிலை அதிலை கிடக்கிற கிண்ணத்தை எடுக்க மாட்டினம் வெளிநாட்டிலை போய் எல்லாம் வெட்டிப் புடுங்கப் போயினம்
சின்னப்பு : ஏன் முகத்தான் இப்பிடி சொல்லுறாய்?;
முகத்தார் : சின்னப்பு அங்கை போற பிள்ளையள் எப்பிடியெல்லாம் கஷ்டப்படுகினம் எண்டு எனக்குத் தெரியும் ஏன்தான் இப்பிடி பணத்தாசையிலை போய் சீரழிஞ்சு போகுதுகள் எண்டு நினைக்கேக்கை கவலையாக் கிடக்கு
சின்னப்பு : கொஞ்சம் விளக்கமா சொல்லு பாப்பம்
முகத்தார் : இஞ்சை பார் இப்ப மத்திய கிழக்கு நாடுகளுக்கு குறைஞ்ச சம்பளத்துக்கு ஆட்களை அனுப்பிறதெண்டால் எங்கடை ஆசியா நாடுகள்தான் (இலங்கை இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ்) அதிலும் இலங்கை தவிர மற்ற நாடுகள் ஹவுஸ்மேட்டுகளை அனுப்ப மாட்டாங்கள்; இந்தியா நேர்ஸ் மாதிரி நல்ல வேலைக்குத்தான் பெண்களை அனுப்புவாங்கள்;;
சின்னப்பு : பார் எங்களைவிட பிச்சைகார நாடான பங்களாதேஷ் கூட பெண்களுக்கு மதிப்பளிச்சு அனுப்புதில்லை ஆனா இலங்கை. . . அதுசரி முகத்தான் ஏன் இந்த பிள்ளையளுக்கு அப்பிடி என்ன கொடுமை செய்யிறாங்கள்?
முகத்தார் : இந்த அரபி நாட்டுக்காரங்கள் இவங்களை அடிமைகள் போலத்தான் நடத்துறாங்கள் கண்டியோ . . 18மணிநேர வேலை சரியான சாப்பாடு இல்லை வெறும் 10000 ரூபாதான் மாதச்சம்பளம் அதுவும் சில இடங்களிலை ஒழுங்கில்லை இதோடை பாலியல் தொல்லைகள் வேறை பாவமடா. . .
சின்னப்பு : அட இந்த கூத்து வேறை நடக்குதோ?
முகத்தார் : உவங்களுக்கு பெம்பிளை எடுக்கிறது கடையிலை சாமான் வாங்கிற மாதிரி கையிலை காசு இருந்தா பெண்ணின் அப்பாட்டை கொண்டு போய் குடுத்திட்டு கூட்டி வந்திடுவங்கள் அவங்கடை சமயத்திலையே இதுக்கு அனுமதியிருக்கிறதாலை பெண்சாதிமாருக்கு ஒண்டும் செய்யேலாது அப்ப இதைத்தடுக்கிறதெண்டால் புருஷனை வெளியிலை போக விடாமல் பாக்கவேண்டும் இதுக்காண்டி இந்த அரபிப் பெம்பிளையள் வீட்டுக்கு வரும் ஹவுஸ்மேட்டுகளை புருஷனோடை அயஸ்பண்ணி போகச் சொல்லுவளவையாம் இப்பிடி நிறையக் கதையள் இருக்கு.
சின்னப்பு : அப்பிடி மாட்டன் எண்டாத்தான் கொடுமையள் நடக்கும் போல என்ன
முகத்தார் : சில கதையளைக் கேட்டா அழுகைதான் வரும் இதெல்லாம் தெரிஞ்சு கொண்டு போற சனத்தை என்ன செய்யுறது
சின்னப்பு : இப்ப முகத்தான் எங்கடை தமிழ் பெம்பிளையள் பெரிசா உங்காலை போறேலைத்தானே
முகத்தார் : எங்கடை யாழ்ப்பாணத்துச்சனம் பெரிசா போறேலைதான் ஆனா கிழக்கு மாகாணத்து தமிழ் சனங்கள் அங்கையிருக்கிற முஸ்லீம் ஏஜென்சிகளை நம்பி பேரை மாத்தி போறது என்னவோ நடந்தபடிதான் இருக்கு
சின்னப்பு : இப்படியான பிரச்சனைக்கு இலங்கை அரசாங்கம் எதன் நடவடிக்கை எடுக்கேலாதோ?
முகத்தார் : அவை எப்பிடி எடுப்பினம் இந்த வெளிநாட்டு காசுகளை வைச்சுத்தானே அரசாங்கத்தை நடத்திக் கொண்டு போகினம் ஆனா சின்னப்பு உப்பிடியான வாழ்க்கையை விரும்பி போற சிங்களப் பெட்டையள் இல்லாமல் இல்லை
சின்னப்பு : என்னண்டு சொல்லுறாய்?
முகத்தார் : சவுதிலை நான் பாத்த ஒரு சில வீடுகளிலை இருக்கும் சிங்கள ஹவுஸ்மேட் பெட்டையள் வீட்டு எஜமானிகள் மாதிரி நடக்கினம் எண்டால் என்ன அர்த்தம் வீட்டிலை இருக்கிற தகப்பன் மகன் கார் டிரைவர் எல்லாரையும் கையுக்கை வைச்சிருக்கிறா எண்டுதானே
சின்னப்பு : நாசமாப் போச்சு பிறகேன் இவளவை நாட்டுப்பக்கம் வரப் போறலாவை
முகத்தார் : என்னதான் சிங்களப் பெட்டையள் எண்டாலும் நாங்கள் ஒரு பெண்னினமெண்டு பாக்க வேண்டாமோ
சின்னப்பு : எல்லாம் இந்த பகட்டுவாழ்க்கைக்;கு ஆசைப்பட்டுத்தான் முகத்தான் தெரியாம கேக்கிறன் இப்பிடி சிலவேளை சீரழிஞ்சு போய் வாற பிள்ளைகளின்ரை நிலை என்ன?
முகத்தார் : வீட்டிலை தெரியாத மட்டும் பிரச்சனையில்லை வீட்டுக்கோ அல்லது புருஷனுக்கோ தெரிய வரேக்கை வீட்டாலை கலைக்கப்படுகினம்; இப்பிடி போற சனம் வயித்துப்பாட்டுக்காக விபச்சார தொழிலில் ஈடுபடுவதுதான் வேதனைக்குரியது மருதானை லொஜ்சுகள் சிலதிலை இருக்கிற விலைமாதர் அனேகரின் பிண்ணனி வெளிநாட்டு வாழ்க்கையாம் இது எனக்கெப்பிடித் தெரியும் எண்டு கேக்காதை கேள்விப்பட்டதைச் சொல்லறன்;
சின்னப்பு : சா. . இவன் சின்னாச்சிக்கு தேவையில்லாத வேலை அந்தபிள்ளையை இஞ்சை கூலிவேலை செய்ய விட்டாலும் பரவாயில்லை. . . பொறு கோல் எடுத்து கிழிக்கிறன் பார். . .
பொண்ணம்மா : என்ன காலேலையே குந்திட்டியள் சின்னப்புக்குத்தான் வேலையில்லை எண்டா உங்களுக்குமோ?
முகத்தார் : உம்மைப் பாக்கத்தான்; இருக்கிறார் ஒரு 200 ரூபா காசிருந்தா குடும் மனுசிக்கு கோல் எடுக்கவேணுமாம்
பொண்ணம்மா : என்ன சின்னப்பு உண்மையோ. . . பிறகு மனுசி வர கேப்பன்
சின்னப்பு
(அண்மையில் கிழக்கு மாகாண தமிழ் 1வுஸ் மேட்டின் கதை ஒண்றை கேட்க முடிந்தது குடும்ப வறுமை சூழ்நிலை வெளிநாடு வரத் தூண்டியது வேலைக்கு அமர்ந்த வீட்டில் கிடைத்த பல இன்னல்களை பொறுத்து பார்த்து முடியாத கட்டத்தில் அந்த வீட்டிலிருந்து தப்பித்து இலங்கைத் தூதரகத்தில் போய் தஞ்சமடைந்திருக்கிறார் நாட்டுக்கு போனதும் குடும்பத்தினர் அவரை ஏற்பார்களா .விலக்கி வைப்பார்களா என்பது கேள்விகுறிதான் அவரின் முழுக்கதையும் எழுத முடியாது நீங்க படித்தனீங்கள் எப்பிடியான கஷ்டம் அந்த பெண்ணுக்கு கிடைத்திருக்கும் என ஊகித்திருப்பீர்கள் வெளிநாடு மோகத்தில் அரபி நாட்டுக்கு மட்டும் பெண்களை வேலைக்கு அனுப்பிப் போடாதைங்கோ. . . .)
<i>(9 மணியாகியும் பொண்ணம்மாக்கா நித்திரையாலை எழும்பவில்லை தேத்தண்ணியைப் போட்டுக் கொண்டு வந்து எழுப்புகிறார் முகத்தார் )</i>
முகத்தார் : இஞ்சரும் எழும்புமன் தேத்தண்ணி ஆறப்போகுது
பொண்ணம்மா: (கண்ணை மூடியபடியே) இப்ப எத்தினை மணி வேளைக்கு என்னத்துக்கு எழுப்பிறீயள்
முகத்தார் : இல்லை தேத்தண்ணியைக் குடிச்சிட்டுப் படுமன்
பொண்ணம்மா: பெரிய கரைச்சலப்பா உங்களாலை (தலையணைக்கு கீழை கையை விட்டு ஒரு போட்டோவை எடுத்து கண்ணிலை ஒத்துகிறா)
முகத்தார் : (சிரித்துக் கொண்டு) என்னதான் சொன்னாலும் உனக்கடி என்னிலை அன்;புதான் அல்லது எழும்பினவுடனை என்ரைபோட்டோவை கும்பிடுவியோ?
பொண்ணம்மா: லூசாப்பா நீங்க பாருங்கோ இது என்ன போட்டோ எண்டு
முகத்தார் : அட இது எங்கடை நாய் லசி இதை ஏனப்பா கும்பிடுறீர்?
பொண்ணம்மா: உங்கடை அம்மா எப்பிடி செத்தவ இந்த நாய் கடிச்சு ஏற்பாக்கித்தானே என்னை பெரிய கஷ்டத்திலை இருந்து காப்பாத்திய தெய்வத்தை நான் கும்பிடக்கூடாதோ?
முகத்தார் : நல்லா இருக்கடியம்மா உன்ரை பக்தி;
பொண்ணம்மா: சும்மா காலேலையே தொடங்காமல் பேஸ்ட்டை எடுத்து வையுங்கோ
முகத்தார் : அந்தக் கஷ்டம் உமக்கு வேண்டாம் எண்டுதான் நானே பல்செட்டை பிறஸ் பண்ணி வைச்சிருக்கன் எடுத்து மாட்டும்
<i>(அந்த நேரம் படலையைத் திறந்து கொண்டு சின்னப்பு வாறது தெரிகிறது)</i>
பொண்ணம்மா: இஞ்சை கூட்டாளி வாறர் வெளிலை வைச்சு கதைச்சுப் போட்டு அனுப்பி விடுங்கோ
முகத்தார் : (சா. . .இவள் படுத்தமாதிரியே விட்டிருக்கலாம் ) வா சின்னப்பு என்ன காலேலை இஞ்சாலிப் பக்கம்
சின்னப்பு : ஒரு சிக்கல் அதுதான் உன்னட்டை கேட்டுப் பாப்பம் எண்டு வந்தனான்
முகத்தார் : சொல்லு பாப்பம் ஏலுமெண்டா செய்யிறன்
சின்னப்பு : இல்லை மனுசிக்கு கோல் எடுக்க வேணும் ஒரு 200ரூபா கைமாத்தா எடுக்கேலுமோ.
முகத்தார் : ம். . .ம் ..மனுசியைச் சாட்டி இண்டையான் பொழுதைப் போக்கப் போறாய் கொஞ்சம் இதிலை இரன் மனுசி கிணத்தடியிலை நிக்கிறா வந்தவுடனை கேட்டு வாங்கித்தாறன் அது சரி இப்ப என்னதுக்கு சின்னாச்சி கொழும்புக்கு போனவா?
சின்னப்பு : அதையேன் கேக்கிறாய் இவள் கனகத்தின்ரை பெடிச்சி வெளிநாட்டுக்கு போக வெளிக்கிட்டது இவ தனக்கு எல்லாம் தெரியும் கூட்டிக் கொண்டு போறன் எண்டு போட்டு போயிட்டா நான் இஞ்சை நாயாகிறன்
முகத்தார் : எந்த நாட்டுக்காம் பெடிச்சி போகுது
சின்னப்பு : இந்த குவைத்துக்கு ஹவுஸ்மேட் ஆகப் போகப்போகுதாம்
முகத்தார் : கிழிஞ்சுது சனத்தைத் திருத்தேலாது என்ன பெரிய ஹவுஸ்மேட். . . வீட்டுவேலைக்காரியா போற தெண்டு சொல்லுறதுதானே வீட்டிலை அதிலை கிடக்கிற கிண்ணத்தை எடுக்க மாட்டினம் வெளிநாட்டிலை போய் எல்லாம் வெட்டிப் புடுங்கப் போயினம்
சின்னப்பு : ஏன் முகத்தான் இப்பிடி சொல்லுறாய்?;
முகத்தார் : சின்னப்பு அங்கை போற பிள்ளையள் எப்பிடியெல்லாம் கஷ்டப்படுகினம் எண்டு எனக்குத் தெரியும் ஏன்தான் இப்பிடி பணத்தாசையிலை போய் சீரழிஞ்சு போகுதுகள் எண்டு நினைக்கேக்கை கவலையாக் கிடக்கு
சின்னப்பு : கொஞ்சம் விளக்கமா சொல்லு பாப்பம்
முகத்தார் : இஞ்சை பார் இப்ப மத்திய கிழக்கு நாடுகளுக்கு குறைஞ்ச சம்பளத்துக்கு ஆட்களை அனுப்பிறதெண்டால் எங்கடை ஆசியா நாடுகள்தான் (இலங்கை இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ்) அதிலும் இலங்கை தவிர மற்ற நாடுகள் ஹவுஸ்மேட்டுகளை அனுப்ப மாட்டாங்கள்; இந்தியா நேர்ஸ் மாதிரி நல்ல வேலைக்குத்தான் பெண்களை அனுப்புவாங்கள்;;
சின்னப்பு : பார் எங்களைவிட பிச்சைகார நாடான பங்களாதேஷ் கூட பெண்களுக்கு மதிப்பளிச்சு அனுப்புதில்லை ஆனா இலங்கை. . . அதுசரி முகத்தான் ஏன் இந்த பிள்ளையளுக்கு அப்பிடி என்ன கொடுமை செய்யிறாங்கள்?
முகத்தார் : இந்த அரபி நாட்டுக்காரங்கள் இவங்களை அடிமைகள் போலத்தான் நடத்துறாங்கள் கண்டியோ . . 18மணிநேர வேலை சரியான சாப்பாடு இல்லை வெறும் 10000 ரூபாதான் மாதச்சம்பளம் அதுவும் சில இடங்களிலை ஒழுங்கில்லை இதோடை பாலியல் தொல்லைகள் வேறை பாவமடா. . .
சின்னப்பு : அட இந்த கூத்து வேறை நடக்குதோ?
முகத்தார் : உவங்களுக்கு பெம்பிளை எடுக்கிறது கடையிலை சாமான் வாங்கிற மாதிரி கையிலை காசு இருந்தா பெண்ணின் அப்பாட்டை கொண்டு போய் குடுத்திட்டு கூட்டி வந்திடுவங்கள் அவங்கடை சமயத்திலையே இதுக்கு அனுமதியிருக்கிறதாலை பெண்சாதிமாருக்கு ஒண்டும் செய்யேலாது அப்ப இதைத்தடுக்கிறதெண்டால் புருஷனை வெளியிலை போக விடாமல் பாக்கவேண்டும் இதுக்காண்டி இந்த அரபிப் பெம்பிளையள் வீட்டுக்கு வரும் ஹவுஸ்மேட்டுகளை புருஷனோடை அயஸ்பண்ணி போகச் சொல்லுவளவையாம் இப்பிடி நிறையக் கதையள் இருக்கு.
சின்னப்பு : அப்பிடி மாட்டன் எண்டாத்தான் கொடுமையள் நடக்கும் போல என்ன
முகத்தார் : சில கதையளைக் கேட்டா அழுகைதான் வரும் இதெல்லாம் தெரிஞ்சு கொண்டு போற சனத்தை என்ன செய்யுறது
சின்னப்பு : இப்ப முகத்தான் எங்கடை தமிழ் பெம்பிளையள் பெரிசா உங்காலை போறேலைத்தானே
முகத்தார் : எங்கடை யாழ்ப்பாணத்துச்சனம் பெரிசா போறேலைதான் ஆனா கிழக்கு மாகாணத்து தமிழ் சனங்கள் அங்கையிருக்கிற முஸ்லீம் ஏஜென்சிகளை நம்பி பேரை மாத்தி போறது என்னவோ நடந்தபடிதான் இருக்கு
சின்னப்பு : இப்படியான பிரச்சனைக்கு இலங்கை அரசாங்கம் எதன் நடவடிக்கை எடுக்கேலாதோ?
முகத்தார் : அவை எப்பிடி எடுப்பினம் இந்த வெளிநாட்டு காசுகளை வைச்சுத்தானே அரசாங்கத்தை நடத்திக் கொண்டு போகினம் ஆனா சின்னப்பு உப்பிடியான வாழ்க்கையை விரும்பி போற சிங்களப் பெட்டையள் இல்லாமல் இல்லை
சின்னப்பு : என்னண்டு சொல்லுறாய்?
முகத்தார் : சவுதிலை நான் பாத்த ஒரு சில வீடுகளிலை இருக்கும் சிங்கள ஹவுஸ்மேட் பெட்டையள் வீட்டு எஜமானிகள் மாதிரி நடக்கினம் எண்டால் என்ன அர்த்தம் வீட்டிலை இருக்கிற தகப்பன் மகன் கார் டிரைவர் எல்லாரையும் கையுக்கை வைச்சிருக்கிறா எண்டுதானே
சின்னப்பு : நாசமாப் போச்சு பிறகேன் இவளவை நாட்டுப்பக்கம் வரப் போறலாவை
முகத்தார் : என்னதான் சிங்களப் பெட்டையள் எண்டாலும் நாங்கள் ஒரு பெண்னினமெண்டு பாக்க வேண்டாமோ
சின்னப்பு : எல்லாம் இந்த பகட்டுவாழ்க்கைக்;கு ஆசைப்பட்டுத்தான் முகத்தான் தெரியாம கேக்கிறன் இப்பிடி சிலவேளை சீரழிஞ்சு போய் வாற பிள்ளைகளின்ரை நிலை என்ன?
முகத்தார் : வீட்டிலை தெரியாத மட்டும் பிரச்சனையில்லை வீட்டுக்கோ அல்லது புருஷனுக்கோ தெரிய வரேக்கை வீட்டாலை கலைக்கப்படுகினம்; இப்பிடி போற சனம் வயித்துப்பாட்டுக்காக விபச்சார தொழிலில் ஈடுபடுவதுதான் வேதனைக்குரியது மருதானை லொஜ்சுகள் சிலதிலை இருக்கிற விலைமாதர் அனேகரின் பிண்ணனி வெளிநாட்டு வாழ்க்கையாம் இது எனக்கெப்பிடித் தெரியும் எண்டு கேக்காதை கேள்விப்பட்டதைச் சொல்லறன்;
சின்னப்பு : சா. . இவன் சின்னாச்சிக்கு தேவையில்லாத வேலை அந்தபிள்ளையை இஞ்சை கூலிவேலை செய்ய விட்டாலும் பரவாயில்லை. . . பொறு கோல் எடுத்து கிழிக்கிறன் பார். . .
பொண்ணம்மா : என்ன காலேலையே குந்திட்டியள் சின்னப்புக்குத்தான் வேலையில்லை எண்டா உங்களுக்குமோ?
முகத்தார் : உம்மைப் பாக்கத்தான்; இருக்கிறார் ஒரு 200 ரூபா காசிருந்தா குடும் மனுசிக்கு கோல் எடுக்கவேணுமாம்
பொண்ணம்மா : என்ன சின்னப்பு உண்மையோ. . . பிறகு மனுசி வர கேப்பன்
சின்னப்பு
(அண்மையில் கிழக்கு மாகாண தமிழ் 1வுஸ் மேட்டின் கதை ஒண்றை கேட்க முடிந்தது குடும்ப வறுமை சூழ்நிலை வெளிநாடு வரத் தூண்டியது வேலைக்கு அமர்ந்த வீட்டில் கிடைத்த பல இன்னல்களை பொறுத்து பார்த்து முடியாத கட்டத்தில் அந்த வீட்டிலிருந்து தப்பித்து இலங்கைத் தூதரகத்தில் போய் தஞ்சமடைந்திருக்கிறார் நாட்டுக்கு போனதும் குடும்பத்தினர் அவரை ஏற்பார்களா .விலக்கி வைப்பார்களா என்பது கேள்விகுறிதான் அவரின் முழுக்கதையும் எழுத முடியாது நீங்க படித்தனீங்கள் எப்பிடியான கஷ்டம் அந்த பெண்ணுக்கு கிடைத்திருக்கும் என ஊகித்திருப்பீர்கள் வெளிநாடு மோகத்தில் அரபி நாட்டுக்கு மட்டும் பெண்களை வேலைக்கு அனுப்பிப் போடாதைங்கோ. . . .)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>


