02-04-2006, 03:38 AM
<b>யாழில் கிராம அலுவலர்களைக் குறிவைக்கும் இராணுவம் </b>
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக இராணுவத்தினர் பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் மீது மேற் கொள்ளும் அடாவடி நடவடிக்கைகள் சம்பந்தமான தகவல்களை கிராம அலுவலர்கள் உடனுக்குடன் நீதி மன்றங்கள் மனித உரிமைகள் அமைப்பு என்பவற்றிற்கு வழங்கி வருவதினால் இராணுவத்தினரின் நடவடிக்கைகள் பலவும் தடுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய செயற்பாடுகளை கிராம அலுவலர்கள் ஓரு சிலர் உற்சாகத்துடன் செய்கின்ற போதிலும் இராணுவத்தினர் பொதுவாக கிராம அலுவலர்கள் மீது வஞ்சம் தீர்ப்பது போன்று வெருட்டுவதுடன் அவர்களை அவமரியாதை செய்யும் நடவடிக்கைகளையும் மேற் கொண்டு வருகின்றார்கள்.
கடந்த வாரம் யாழ் மாவட்ட மனிதஉரிமைகள் அமைப்புக்களும் இராணுவத்தினரும் கலந்துரையாடும் போது கிராம அலுவர்களுடன் இணைந்து சுற்றி வளைப்புக்கள் மற்றும் இராணு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற மனித உரிமை அமைப்புக்களின் கோரிக்கையை இராணுவ உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டு நடவடிக்கையும் எடுப்பதாகவும் அறிவித்த நிலையிலேயே இராணுவத்தினர் கிராம அலுவலர்களுடன் முரண்படத் தொடங்கியுள்ளார்கள் தற்போது கிராம அலுவர்கள் மற்றும் பொது மக்கள் கொடுக்கும் தகவல்கள் காரணமாக உடனடியாக உரியவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலமும் பலருடைய கைதுகள் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக இராணுவத்தினர் பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் மீது மேற் கொள்ளும் அடாவடி நடவடிக்கைகள் சம்பந்தமான தகவல்களை கிராம அலுவலர்கள் உடனுக்குடன் நீதி மன்றங்கள் மனித உரிமைகள் அமைப்பு என்பவற்றிற்கு வழங்கி வருவதினால் இராணுவத்தினரின் நடவடிக்கைகள் பலவும் தடுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய செயற்பாடுகளை கிராம அலுவலர்கள் ஓரு சிலர் உற்சாகத்துடன் செய்கின்ற போதிலும் இராணுவத்தினர் பொதுவாக கிராம அலுவலர்கள் மீது வஞ்சம் தீர்ப்பது போன்று வெருட்டுவதுடன் அவர்களை அவமரியாதை செய்யும் நடவடிக்கைகளையும் மேற் கொண்டு வருகின்றார்கள்.
கடந்த வாரம் யாழ் மாவட்ட மனிதஉரிமைகள் அமைப்புக்களும் இராணுவத்தினரும் கலந்துரையாடும் போது கிராம அலுவர்களுடன் இணைந்து சுற்றி வளைப்புக்கள் மற்றும் இராணு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற மனித உரிமை அமைப்புக்களின் கோரிக்கையை இராணுவ உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டு நடவடிக்கையும் எடுப்பதாகவும் அறிவித்த நிலையிலேயே இராணுவத்தினர் கிராம அலுவலர்களுடன் முரண்படத் தொடங்கியுள்ளார்கள் தற்போது கிராம அலுவர்கள் மற்றும் பொது மக்கள் கொடுக்கும் தகவல்கள் காரணமாக உடனடியாக உரியவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலமும் பலருடைய கைதுகள் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
"

