02-03-2006, 07:41 AM
<b>மூங்கிலாற்றில் லெப். கேணல் கௌசல்யன் உள்ளிட்ட மாவீரர்களின் முதலாண்டு நினைவு கூரல் </b>
கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்ட லெப். கேணல் கௌசல்யன் உள்ளிட்ட மாவீரர்கள் மற்றும் மாமனிதர் சந்திரநேரு ஆகியோரது முதலாமாண்டு நினைவு கூரல் மூங்கிலாற்றில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் குழுவும் கடந்த வருடம் (07.02.05) மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் கௌசல்யன், மேஜர் புகழன், மேஜர் செந்தோழன், இரண்டாம் லெப். விதிமாறன், மாமனிதர் சந்திரநேரு ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் மூங்கிலாற்றில் அமைந்துள்ள மட்டு-அம்பாறை மாவீரர் நினைவு மண்டபத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
மட்டு. அம்பாறை தொடர்பகப் பொறுப்பாளர் இராசு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை சீடோ நிறுவன உதவி இணைப்பாளர் அகிலன் ஏற்றிவைத்தார்.
தமிழீழத் தேசியக் கொடியினை அம்பாறை மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் காண்டீபன் ஏற்றினார்.
மாவீரர்களின் திருவுருவுப் படங்களுக்கு சுடரேற்றி மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
லெப். கேணல் கௌசல்யனின் திருவுருவப்படத்திற்கு ஜெயந்தன் படையணியின் நிர்வாகப் பொறுப்பாளர் நளன்,
மேஜர் புகழனின் திருவுருவப்படத்திற்கு ஜெயந்தன் படையணிப் போராளி மேனன்,
ஜர் செந்தமிழனின் திருவுருவப்படத்திற்கு மதிவாளன் மாஸ்ரர்,
2 ஆம் லெப் விதிமாறன் திருவுருவப்படத்திற்கு ஜெயந்தன் படையணிப் போராளி பிரியதர்சன்,
மாமனிதர் சந்திரநேரு திருவுருவப்படத்திற்கு சீடோர் நிறுவனப் பணிப்பாளர் தில்லைநாயகி
ஆகியோர் சுடர்ஏற்றி மலர் மாலை அணிவித்தனர்.
அதன் பின்னர் அகவணக்க நிகழ்வும் மலர் வணக்க நிகழ்வும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மட்டு. அம்பாறை தொடர்பகப் பொறுப்பாளர் இராசு நினைவுரையை ஆற்றினார்.
இந்நிகழ்வில் பெருமளவான போராளிகளும் மக்களும் கலந்து கொண்டனர்.
<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்ட லெப். கேணல் கௌசல்யன் உள்ளிட்ட மாவீரர்கள் மற்றும் மாமனிதர் சந்திரநேரு ஆகியோரது முதலாமாண்டு நினைவு கூரல் மூங்கிலாற்றில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் குழுவும் கடந்த வருடம் (07.02.05) மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் கௌசல்யன், மேஜர் புகழன், மேஜர் செந்தோழன், இரண்டாம் லெப். விதிமாறன், மாமனிதர் சந்திரநேரு ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் மூங்கிலாற்றில் அமைந்துள்ள மட்டு-அம்பாறை மாவீரர் நினைவு மண்டபத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
மட்டு. அம்பாறை தொடர்பகப் பொறுப்பாளர் இராசு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை சீடோ நிறுவன உதவி இணைப்பாளர் அகிலன் ஏற்றிவைத்தார்.
தமிழீழத் தேசியக் கொடியினை அம்பாறை மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் காண்டீபன் ஏற்றினார்.
மாவீரர்களின் திருவுருவுப் படங்களுக்கு சுடரேற்றி மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
லெப். கேணல் கௌசல்யனின் திருவுருவப்படத்திற்கு ஜெயந்தன் படையணியின் நிர்வாகப் பொறுப்பாளர் நளன்,
மேஜர் புகழனின் திருவுருவப்படத்திற்கு ஜெயந்தன் படையணிப் போராளி மேனன்,
ஜர் செந்தமிழனின் திருவுருவப்படத்திற்கு மதிவாளன் மாஸ்ரர்,
2 ஆம் லெப் விதிமாறன் திருவுருவப்படத்திற்கு ஜெயந்தன் படையணிப் போராளி பிரியதர்சன்,
மாமனிதர் சந்திரநேரு திருவுருவப்படத்திற்கு சீடோர் நிறுவனப் பணிப்பாளர் தில்லைநாயகி
ஆகியோர் சுடர்ஏற்றி மலர் மாலை அணிவித்தனர்.
அதன் பின்னர் அகவணக்க நிகழ்வும் மலர் வணக்க நிகழ்வும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மட்டு. அம்பாறை தொடர்பகப் பொறுப்பாளர் இராசு நினைவுரையை ஆற்றினார்.
இந்நிகழ்வில் பெருமளவான போராளிகளும் மக்களும் கலந்து கொண்டனர்.
<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
"
"
"

