02-03-2006, 07:37 AM
<b><span style='color:darkred'>காலநதியின் கௌசல்யனே!
த.ஆவர்த்தனா
கொண்ட இலட்சியம் குன்றிடாத
கொள்கை வீரனே அண்ணா கௌசல்யன்
எண்பத்தொன்பதில் எதிரியை அழிக்க - உன்
கால்கள் விரைந்தன பாசறை நோக்கி
மீன்பாடும் தேன் நாட்டில் மட்டுமல்ல - நின்பணி
களணிகள் நிறை வன்னி மண்ணிலே
தமிழிழ விடுதலைப் போராட்ட வரலாற்றில்
தாய் சமராம் ஜெயசிக்குறுவிலும்
தடம் பதித்தாய் விடுதலை வெல்ல
சிறந்த வீரனென செயலிலே காட்டி
அரசியல் பணியிலும் முன்னின்று உமைத்தவன் நீ
சாதி மத பேதமின்றி
கல்வி உலகில் கருத்தறித்தவன்
உணவு பரிமாறுவதிலிருந்து
உணர்வுகளை புரிந்து கொள்ளவும்
கௌசல்யனே உனக்கு நிகர் நீதானடா
அமைதியான உன் புன் சிரிப்புக்குள்
ஆழமான அர்த்தம் புதைந்திருக்கும்
மண்ணில் நீ மடிந்த போது
பல நூறு புதிய கரம் பிறப்பெடுக்க
விடியும் எம் தேசம் விரைவில்
காத்திருக்கும் நின் கல்லறையில்
கண்ணீர் கொண்டு நாம் அஞ்சலிக்கவில்லை
கனவினை நனவாக்க விரைந்திடுவோம் களம் நோக்கி
பறக்கும் புலிக்கொடி கோண மலையில் - நின்
கனவும் நனவாகும் அன் நாளில்.</span>
த.ஆவர்த்தனா
வவுனியா.
<i>[b]தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
த.ஆவர்த்தனா
கொண்ட இலட்சியம் குன்றிடாத
கொள்கை வீரனே அண்ணா கௌசல்யன்
எண்பத்தொன்பதில் எதிரியை அழிக்க - உன்
கால்கள் விரைந்தன பாசறை நோக்கி
மீன்பாடும் தேன் நாட்டில் மட்டுமல்ல - நின்பணி
களணிகள் நிறை வன்னி மண்ணிலே
தமிழிழ விடுதலைப் போராட்ட வரலாற்றில்
தாய் சமராம் ஜெயசிக்குறுவிலும்
தடம் பதித்தாய் விடுதலை வெல்ல
சிறந்த வீரனென செயலிலே காட்டி
அரசியல் பணியிலும் முன்னின்று உமைத்தவன் நீ
சாதி மத பேதமின்றி
கல்வி உலகில் கருத்தறித்தவன்
உணவு பரிமாறுவதிலிருந்து
உணர்வுகளை புரிந்து கொள்ளவும்
கௌசல்யனே உனக்கு நிகர் நீதானடா
அமைதியான உன் புன் சிரிப்புக்குள்
ஆழமான அர்த்தம் புதைந்திருக்கும்
மண்ணில் நீ மடிந்த போது
பல நூறு புதிய கரம் பிறப்பெடுக்க
விடியும் எம் தேசம் விரைவில்
காத்திருக்கும் நின் கல்லறையில்
கண்ணீர் கொண்டு நாம் அஞ்சலிக்கவில்லை
கனவினை நனவாக்க விரைந்திடுவோம் களம் நோக்கி
பறக்கும் புலிக்கொடி கோண மலையில் - நின்
கனவும் நனவாகும் அன் நாளில்.</span>
த.ஆவர்த்தனா
வவுனியா.
<i>[b]தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
"

