01-31-2006, 01:49 PM
ரஜினியிடம் ஐஸ்வர்யாராய் சொன்ன பொய்
<img src='http://img62.imageshack.us/img62/7971/aishwaryarai6h8ei.jpg' border='0' alt='user posted image'>
சிவாஜியில் நடிக்கமறுத்த ஐஸ்வர்யாராய், அதற்காக சொன்ன காரணம், கலப்படமில்லாத அல்வா என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
சூப்பர்ஸ்டார், படம் துவங்கும் ஒவ்வொரு முறையும் ஐஸ்வர்யாராயை விரட்டிக்கொண்டுதான் இருக்கிறார். அவரும் ராமனுக்கு போக்கு காட்டிய மாயமானாக நழுவிக்கொண்டிருக்கிறார். இந்தமுறை எப்படியும் சிக்கிவிடுவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தனர். கடைசியில் ஜெயித்தது ஐஸ்!
"மூன்று ஹாலிவுட் படங்கள். இது தவிர இந்திப்படங்கள். இரண்டு வருடத்திற்கு தூங்கவே கால்ஷீட் இல்லாத அளவுக்கு பிஸி!" சிவாஜியில் ரஜினி ஜோடியாக நடிக்க அழைத்ததற்கு உலக அழகி தரப்பிலிருந்து வந்த பதில் இது.
ஆனால், இதை சொன்ன அதே வாயால் இன்னொரு தமிழரின் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா!
'ஆய்த எழுத்து'க்குப் பிறகு அபிஷேக்பச்சனை வைத்து படம் இயக்குகிறார் மணிரத்னம். ஆங்கிலம், இந்தி என இரு மொழிகளில் தயாராகும் இந்தப்படத்துக்கு 'குரு' என்று மணி பெயர் வைத்திருப்பதாக கூறுகிறார்கள். இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யாராய்!
ஷங்கர், ரஜினி, ஏ.வி.எம். என முக்கூட்டணி அழைத்தும் அசராதவர் மணிக்கு மட்டும் தலையசைத்தது எப்படி?
மாடல் அழகியாக இருந்த ஐஸை முதன்முதலில் 'இருவர்' மூலம் நடிகையாக்கியவர் மணிரத்னம். தவிர மணி இயக்கும் புதிய படத்தின் ஹீரோ, ஐஸ்வர்யாராயின் புதிய காதலர் அபிஷேக்பச்சன்!
இந்த பழைய நன்றிக்கடனும் புதிய காதலும்தான் இவரை இந்தப்படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறது. மணியின் இந்தப்படத்துக்கு ராஜீவ்மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். இசை... அதையும் சொல்லவேண்டுமா? வழக்கம்போல புயல்தான்!
cinesouth
<img src='http://img62.imageshack.us/img62/7971/aishwaryarai6h8ei.jpg' border='0' alt='user posted image'>
சிவாஜியில் நடிக்கமறுத்த ஐஸ்வர்யாராய், அதற்காக சொன்ன காரணம், கலப்படமில்லாத அல்வா என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
சூப்பர்ஸ்டார், படம் துவங்கும் ஒவ்வொரு முறையும் ஐஸ்வர்யாராயை விரட்டிக்கொண்டுதான் இருக்கிறார். அவரும் ராமனுக்கு போக்கு காட்டிய மாயமானாக நழுவிக்கொண்டிருக்கிறார். இந்தமுறை எப்படியும் சிக்கிவிடுவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தனர். கடைசியில் ஜெயித்தது ஐஸ்!
"மூன்று ஹாலிவுட் படங்கள். இது தவிர இந்திப்படங்கள். இரண்டு வருடத்திற்கு தூங்கவே கால்ஷீட் இல்லாத அளவுக்கு பிஸி!" சிவாஜியில் ரஜினி ஜோடியாக நடிக்க அழைத்ததற்கு உலக அழகி தரப்பிலிருந்து வந்த பதில் இது.
ஆனால், இதை சொன்ன அதே வாயால் இன்னொரு தமிழரின் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா!
'ஆய்த எழுத்து'க்குப் பிறகு அபிஷேக்பச்சனை வைத்து படம் இயக்குகிறார் மணிரத்னம். ஆங்கிலம், இந்தி என இரு மொழிகளில் தயாராகும் இந்தப்படத்துக்கு 'குரு' என்று மணி பெயர் வைத்திருப்பதாக கூறுகிறார்கள். இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யாராய்!
ஷங்கர், ரஜினி, ஏ.வி.எம். என முக்கூட்டணி அழைத்தும் அசராதவர் மணிக்கு மட்டும் தலையசைத்தது எப்படி?
மாடல் அழகியாக இருந்த ஐஸை முதன்முதலில் 'இருவர்' மூலம் நடிகையாக்கியவர் மணிரத்னம். தவிர மணி இயக்கும் புதிய படத்தின் ஹீரோ, ஐஸ்வர்யாராயின் புதிய காதலர் அபிஷேக்பச்சன்!
இந்த பழைய நன்றிக்கடனும் புதிய காதலும்தான் இவரை இந்தப்படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறது. மணியின் இந்தப்படத்துக்கு ராஜீவ்மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். இசை... அதையும் சொல்லவேண்டுமா? வழக்கம்போல புயல்தான்!
cinesouth
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

