01-31-2006, 10:35 AM
Quote:"மஞ்சள் கயிறில்கூட ஒருதாலி கொள்ள முடியாமல் மலர்கள் சில..........
"மணமிழந்து" போகையிலே இல்லத்தாள் இருக்க.... இன்னொரு துணை தேடி...........
தங்கத்தால் கொலுசு அவளுக்கு வேண்டியலைந்து - நீ
தரங்கெட்டு போயிருப்பாய்..!"
மஞ்சள் தாலி
பெண் மானம் கண்ட இழுக்கு
பொன் தாலி
பெண்ணுக்கு வேலி
மனத் தடைகள் தாம் அவை...
பெண் தடை தாண்டி
பாலுணர்வு வழி பாமரமாய் வாழ
வீர வசனம் பேசி
வீசி எறிய
வீணே கட்ட வேண்டுமா அது..??!
பகுத்தறிவால் விட்டெறிந்தான்
பதிலுக்கு தேடினான்
உற்றவள் இருக்க தானும் ஒருத்தி..!
அவள் புத்தியில் உரைக்க - ஒரு வழி
பதிலடி
பகுத்தறிவு...!
ஏட்டிக்குப் போட்டி எதுக்கு
வாழ்க்கையில் நிற்க நிலைக்க
சிந்திக்க சுயவழி..!
தங்கிக்கொள் உன் காலடி..!
மாற்றான் வேதத்தில்
மந்திரம் ஏன்...
மனதுக்கு பிடித்ததை
மற்றவனை வதைக்காததை
வரையறுக்கக் கற்றுக்கொள்..!
மதி உன்னது மட்டும் பெரிசென்று
மமதையில்
மந்தியாகாதே மானிடா
பகுத்தறிவு புலப்படாமலே
பட்டுப்போயிடுவாய்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

