01-31-2006, 08:01 AM
Danklas Wrote:aathipan Wrote:இந்தியாவில எனக்கு நடந்த சில அவமரியாதைகளால் பலதடவை எப்படா அந்த நாட்டைவிட்டு போவன் என்று நினைத்ததுண்டு. ஆனாலும் எனது நண்பர்களால் இதையெல்லாம் மறந்து 15 வருடம் வாழ்தேன்.
ஆதிபன்,, உங்களுக்கு ஏற்பட்ட அவமரியாதைகளை முடியுமெண்டால் இங்கு சொல்லுங்களேன்,,,,, :roll: :roll:
முதலில் பொஸிட்டிவாக எழுதாலாம் என்று நினைக்கிறேன்.
எப்போதும் எனக்கு விசா தர மறுத்த அந்த நாட்டு உயர்ஸ்தானிகர் ஆலயம் நிரந்தர விசா தந்து எனக்கு கடிதம் போட்டிருந்தது. ஆனால் அவர்கள் மூன்று வாரத்திற்குள் தங்கள் நாட்டுக்குள் வந்துவிடவேண்டு என உறுதியாக கட்டளை இட்டிருந்தார்கள். எனக்கு அந்தக்கடிதம்கிடைக்கும் போதே அந்த 3 வாரத்தில் 4 நாட்கள் கழிந்துவிட்டது. நாம் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு இந்தியாவின் எக்ஸிட் விசா தேவை. அதை பெறுவது இலகுவான காரியம் இல்லை. அதற்கு பொலிஸிடம் எம்மேல் எந்த குற்றப்பதிவும் இல்லை என கடிதம் வாங்க வேண்டும். அவர்கள் அக்கம் பக்கத்தில் வந்து விசாரித்துதான் அதை தருவார்கள். எங்கெல்லாம் நாம் இருந்தோமோ அங்கெல்லாம் உள்ள பொலிஸாரிடம் அந்த கடிதம் வாங்கவேண்டும். இது எல்லாம் அந்த 15 நாட்களில் நடக்க சாத்தியமே இல்லை. குறைந்தது ஒரு மாதம் இதற்கு எடுக்கும். இதனால் விசா வந்தும் சந்தோசப்பட முடியவில்லை. எக்ஸிட் விசாவிற்கு விண்ணப்பித்துவிட்டு வந்தேன். அவர்கள் விசா வந்தது ம் கடிதம் போடுவதாக சொல்லி அனுப்பிவிட்டார்கள். நாட்கள் கழிந்தும் எக்ஸிட் விசா வரவில்லை. எல்லாக்கடவுளுக்கும வேண்டுதல் வைத்;தும் பயம் இல்iலாது போய்விடுமோ என அச்சமாக இருந்தது. ஒரு வாரம் கழித்து ஒரு தடவை போன போது இன்னும் வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதற்குள் என்னை இலங்கையன் என தெரிந்து அங்கிருந்த பியோன் தன்னை வேலைமுடிய வந்து பார்க்கும் படி சொன்னான். பணம் பறிக்கப்போகிறான் என தெரிந்துவிட்டாலும் வேறு வழியின்றி காத்திருந்தேன். அப்போது அங்கு வந்த இன்னொரு இலங்கையர் பியோனால் எதுவும் இங்கு செய்ய முடியாது நீங்கள் பணத்தை கொடுத்து ஏமார வேண்டாம் என்றார்.மீண்டும் நான்கு நாள் கழித்து அங்கு சென்று எனக்கு எக்ஸிட் விசா வரவிலலை என முறையிட்டேன். அங்கிருந்த ஒரு அலுவலர் என்னை உயர் அதிகாரியைப்பார்க்கும் படி சொன்னார். அவருக்காக நான் காத்திருந்தேன். என்னைப்பார்க்கும் நேரம் வரவும் அவர்களுக்கு மதிய இடைவேளை வந்துவிட்டது. வெளியே வந்த அந்தப்பெண் அதிகாரி என்ன ஏதுஎன்று கனிவோடு விசாரித்தார். பின் கவலைப்படதே நான் பார்த்து வைக்கிறேன் நாளை வா என அனுப்பி வைத்தார். அன்று கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அடுத்தநாள் விமான டிக்கெட் எடுத்துவிட்டு அவரைப்பார்க்கச்சென்றேன். அவர் பொலிஸ் கமிசனர் அலுவலகத்தில் இருந்து எனது கோப்பு வரவில்லை. நான் என்ன செய்ய என்று என்னையேகேட்டார். இரண்டு நாட்களே உள்ளநிலையில் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பிறகு திடீரென கமிசனர் அலுவலகத்திற்கு போன் செய்து சம்பந்ப்பட்ட அதிகாரியை தொடர்புகொள்ள முயன்றார். அந்த அதிகாரி அவர் இருக்கையில் இல்லை என்று தெரிய வந்தது. அவரது சக அதிகாரியை அழைத்து நான் தான் .......... பேசுகிறேன் முன்னாள் இன்டெலிஜென் பொறுப்பதிகாரி. எனக்கு நாளை இந்த பேருள்ளவரின் கோப்பு வந்து சேரவேண்டும் என கராராக பேசி விட்டு போனை வைத்தார். எனக்கு நம்பிக்கை அப்போது தான் வந்தது. அவர் சொன்னது போல அடுத்த நாள் போன போது எல்லாம் தயாராகிவிட்டது. எல்லாவற்றுக்கும் பொறுப்பான உயரதிகாரி அதில் கையொப்பம்பிடவில்லை. அவர் நேராக எம்மை பாhத்து உறுதி செய்துதான் கையெழுத்pதடுவார். அவரது அறைக்குச்சென்று காத்திருந்த போது யாNh ஒரு வெளிநாட்டு விருந்தினர் அவருடன் உரையாடிக்கொண்டிருந்தார். நான் காத்திருப்பதை அந்த அதிகாரி பொருட்படுத்தவேயில்லை. வாயைத்திறந்தால் அவர்களுக்கு கோபம் வந்து நாளைவா என அனுப்பிவிடவார்களோ என்ற பயத்தில் மௌனமாக காத்திருந்தேன். அப்போது மதிய நேரம் வர அந்த விருந்தினரை அழைத்துக்கொண்டு ஏதோ ஒரு கொட்டலுக்குச்செல்ல அவர்கள் தயாரானார். அப்போது அந்த பக்கமாக சென்ற அந்தப்பெண் உயரதிகாரி என்னை பார்த்ததும் நிலமையை புரிந்துகொண்டு உள்ளே வந்தார்.எனது கோப்பில் ஒரு கையெழுத்து அவசரம் தேவைப்படுகிறது என்று கேட்டு வாங்கி என்னையும் அழைத்துச்சென்று மேலும் செய்யவேண்டிய அனைத்தையும் புூர்த்தி செய்து எனது கையிலே எனது எக்ஸிட் விசாவைக்கொடுத்தார். எனக்கு கண்கள் கலங்கிவிட்டது அவரைக்கையெடுத்துக்கும்பிட்டேன். கவலைப்படாதே தம்பி போட்டுவாஎன விடைகொடுத்தார். அன்று இரவு 12 மணிக்கு நான் சிங்கப்புூர் பயணித்தேன்.

