01-31-2006, 02:49 AM
<b>எஸ்.பி. திசநாயக்க நாடாளுமன்ற ஆசனத்துக்கு ரேணுகா ஹேரத் நியமனம் </b>
ஐக்கிய தேசியக் கட்சியின் எஸ்.பி.திசநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனத்துக்கு ரேணுகா ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயகக் வெளியிட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் எஸ்.பி.திசநாயக்க இருப்பதால் நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. நாடாளுமன்றக் கூட்டங்களில் 3 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து பங்கேற்காததால் எஸ்.பி. திசநாயக்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.
இதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரேணுகா ஹேரத் அந்த ஆசனத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
1977 ஆம் ஆண்டு வலபனெ தொகுதியில் போட்டியிட்டு ரேணுகா ஹேரத் வெற்றி பெற்றார். 1989 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை சுகாதாரம் மற்றும் மகளிர் விவகாரங்களுக்கான அமைச்சராகவும் ரேணுகா ஹேரத் பணியாற்றினார்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
ஐக்கிய தேசியக் கட்சியின் எஸ்.பி.திசநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனத்துக்கு ரேணுகா ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயகக் வெளியிட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் எஸ்.பி.திசநாயக்க இருப்பதால் நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. நாடாளுமன்றக் கூட்டங்களில் 3 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து பங்கேற்காததால் எஸ்.பி. திசநாயக்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.
இதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரேணுகா ஹேரத் அந்த ஆசனத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
1977 ஆம் ஆண்டு வலபனெ தொகுதியில் போட்டியிட்டு ரேணுகா ஹேரத் வெற்றி பெற்றார். 1989 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை சுகாதாரம் மற்றும் மகளிர் விவகாரங்களுக்கான அமைச்சராகவும் ரேணுகா ஹேரத் பணியாற்றினார்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

