01-31-2006, 01:28 AM
<b>அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து சேலத்தில் இன்று எழுச்சிமிக்க பேரணி- கண்டன ஆர்ப்பாட்டம்!! </b>
[<i><b>திங்கட்கிழமை, 30 சனவரி 2006</b></i>, 19:46 ஈழம்] [புதினம் நிருபர்]
ஈழத் தமிழரை மிரட்டும் வகையில் உரையாற்றிய சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து தமிழகத்தின் சேலம் நகரில் இன்று திங்கட்கிழமை எழுச்சிமிக்க பேரணியும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நடத்தப்பட்ட இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்குத் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமை வகித்தார்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு "ஈழத் தமிழரை மிரட்டும் அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து" பேரணி தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகளுடாகச் சென்ற பேரணி சேலம் போஸ் மைதானத்தை வந்தடைந்தது.
அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து இந்தப் பேரணியில் முழக்கங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன.
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரின் மிரட்டல் உரையை தமிழக மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் தமிழக நாளிதழ்களில் வெளியான அமெரிக்கத் தூதுவரின் உரையையும்
லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாகி வரும் சோசலிச அரசுகளுடன் விடுதலைப் புலிகள் நேசக்கரம் நீட்டுவதை விளக்கி இந்திய இடதுசாரிகளும் விடுதலைப் புலிகளை ஆதரிக்க வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களும் பேரணியூடாக வீதிகள் தோறும் வழங்கப்பட்டு வந்தன.
சர்வதேச சமூகம் கூறிவருகிற "பயங்கரவாதம்" என்பதற்கான வரையறைகள் என்ன? என்று கடந்த மாவீரர் நாள் உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியதையும் துண்டுப் பிரசுரமாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வழங்கினர்
சேலம் நகர முக்கிய வீதிகளுடாக நகர்ந்த இந்தப் பேரணி 2 மணித்தியாலங்கள் கழித்து போஸ் மைதானத்தை வந்தடைந்தது.
போஸ் மைதானத்தில் பெருந்திரளாகக் கூடியிருந்த தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள், அமெரிக்கத் தூதுவரின் அச்சுறுத்தும் உரைக்குக் கண்டனம் தெரிவித்தும், தமிழீழ விடுதலைக்கு தமிழகத் தமிழர்களின் ஆதரவை வெளிப்படுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த பேரணியில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்:
<b>எங்கள் இரத்தம் எங்கள் இரத்தம்
ஈழத் தமிழர் எங்கள் இரத்தம்!
வாழ்க வாழ்க வாழியவே!
எங்கள் தலைவர் பிரபாகரன் வாழியவே!
வெல்லட்டும் வெல்லட்டும்
விடுதலைப் புலிப் படை வெல்லட்டும்!
புலியே! புலியே! விளையாடு
சிங்களவன் தலையை பந்தாடு!!
மலரட்டும் மலரட்டும்
தமிழீழம் மலரட்டும்!
இந்திய தேசியம் பேசும் அண்ணாச்சியே!
பாலஸ்தீனம் இனிக்குது
வங்கதேசம் இனிக்குது
ஈழம் மட்டும் கசக்குதா?
அமெரிக்க அரசே! அமெரிக்க அரசே!
ஈழச் சிக்கலில் தலையிடாதே!!
இந்திய அரசே! இந்திய அரசே!
பயிற்சி கொடு பயிற்சி கொடு
தமிழக மீனவர்களுக்கு
ஆயுதப் பயிற்சி கொடு!</b>
ஆகிய முழக்கங்களை பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் திரண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் உரத்த குரலில் முழக்கம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் 1 மணித்தியாலம் நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, தமிழின உணர்வாளர் புதுக்கோட்டை பாவாணன், ராஜீவ் வழக்கில் சிறையில் வாடும் பேரறிவாளவனின் தாயார் அற்புதம் குயில்தான் அம்மையார், தமிழின உணர்வாளர் மு.அந்தாலனார், விடுதலைச் சிறுத்தைகளின் சேலம் மாவட்டச் செயலாளர் தமிழன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சேலம் மாவட்டத் தலைவர் முல்லைவேந்தன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் ஆனையப்பன், தமிழ்ச் சான்றோர் பேரவையின் பாவலர் எழுஞாயிறு, தமிழ் தமிழர் இயக்கத்தின் ஆறுமுகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இயக்கங்களின் பிரதிநிதிகளும் தமிழின உணர்வாளர்களும் போஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி பேசியதாவது:
இலங்கை யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகள் எதனையுமே சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இப்போது பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தைக்குப் போகிற சிறிலங்கா அரசாங்கம், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்தித்தான் ஆக வேண்டும். அப்படி யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்தா நிலை ஏற்பட்டால் சர்வதேசத்துக்கு ஒரு உண்மையும் தெரிய வரும். சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் சிறிலங்கா இராணுவம் இருக்கிறதா? அல்லது சிங்களப் பேரினவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்கிற அந்த உண்மை வரத்தான் போகிறது.
தமிழகத்திலிருந்து ஈழத் தமிழர்களுக்காக ஆதரவாகக் குரல் கொத்துக் கொண்டிருப்பதில் எதுவித பொருளும் இல்லை. தமிழகத்திலும் உரிமை பெற்ற தமிழர்களுக்கான தனியரசு அமைகின்ற போதுதான் ஈழத் தமிழர்களுக்கான நமது குரல் அர்த்தமுடையதாக இருக்கும் என்றார் கொளத்தூர் தா.செ. மணி.
puthinam.com
எழுச்சி நிகழ்வுப் படங்களைப் பார்க்க http://www.eelampage.com/?cn=23847
[<i><b>திங்கட்கிழமை, 30 சனவரி 2006</b></i>, 19:46 ஈழம்] [புதினம் நிருபர்]
ஈழத் தமிழரை மிரட்டும் வகையில் உரையாற்றிய சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து தமிழகத்தின் சேலம் நகரில் இன்று திங்கட்கிழமை எழுச்சிமிக்க பேரணியும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நடத்தப்பட்ட இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்குத் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமை வகித்தார்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு "ஈழத் தமிழரை மிரட்டும் அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து" பேரணி தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகளுடாகச் சென்ற பேரணி சேலம் போஸ் மைதானத்தை வந்தடைந்தது.
அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து இந்தப் பேரணியில் முழக்கங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன.
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரின் மிரட்டல் உரையை தமிழக மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் தமிழக நாளிதழ்களில் வெளியான அமெரிக்கத் தூதுவரின் உரையையும்
லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாகி வரும் சோசலிச அரசுகளுடன் விடுதலைப் புலிகள் நேசக்கரம் நீட்டுவதை விளக்கி இந்திய இடதுசாரிகளும் விடுதலைப் புலிகளை ஆதரிக்க வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களும் பேரணியூடாக வீதிகள் தோறும் வழங்கப்பட்டு வந்தன.
சர்வதேச சமூகம் கூறிவருகிற "பயங்கரவாதம்" என்பதற்கான வரையறைகள் என்ன? என்று கடந்த மாவீரர் நாள் உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியதையும் துண்டுப் பிரசுரமாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வழங்கினர்
சேலம் நகர முக்கிய வீதிகளுடாக நகர்ந்த இந்தப் பேரணி 2 மணித்தியாலங்கள் கழித்து போஸ் மைதானத்தை வந்தடைந்தது.
போஸ் மைதானத்தில் பெருந்திரளாகக் கூடியிருந்த தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள், அமெரிக்கத் தூதுவரின் அச்சுறுத்தும் உரைக்குக் கண்டனம் தெரிவித்தும், தமிழீழ விடுதலைக்கு தமிழகத் தமிழர்களின் ஆதரவை வெளிப்படுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த பேரணியில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்:
<b>எங்கள் இரத்தம் எங்கள் இரத்தம்
ஈழத் தமிழர் எங்கள் இரத்தம்!
வாழ்க வாழ்க வாழியவே!
எங்கள் தலைவர் பிரபாகரன் வாழியவே!
வெல்லட்டும் வெல்லட்டும்
விடுதலைப் புலிப் படை வெல்லட்டும்!
புலியே! புலியே! விளையாடு
சிங்களவன் தலையை பந்தாடு!!
மலரட்டும் மலரட்டும்
தமிழீழம் மலரட்டும்!
இந்திய தேசியம் பேசும் அண்ணாச்சியே!
பாலஸ்தீனம் இனிக்குது
வங்கதேசம் இனிக்குது
ஈழம் மட்டும் கசக்குதா?
அமெரிக்க அரசே! அமெரிக்க அரசே!
ஈழச் சிக்கலில் தலையிடாதே!!
இந்திய அரசே! இந்திய அரசே!
பயிற்சி கொடு பயிற்சி கொடு
தமிழக மீனவர்களுக்கு
ஆயுதப் பயிற்சி கொடு!</b>
ஆகிய முழக்கங்களை பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் திரண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் உரத்த குரலில் முழக்கம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் 1 மணித்தியாலம் நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, தமிழின உணர்வாளர் புதுக்கோட்டை பாவாணன், ராஜீவ் வழக்கில் சிறையில் வாடும் பேரறிவாளவனின் தாயார் அற்புதம் குயில்தான் அம்மையார், தமிழின உணர்வாளர் மு.அந்தாலனார், விடுதலைச் சிறுத்தைகளின் சேலம் மாவட்டச் செயலாளர் தமிழன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சேலம் மாவட்டத் தலைவர் முல்லைவேந்தன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் ஆனையப்பன், தமிழ்ச் சான்றோர் பேரவையின் பாவலர் எழுஞாயிறு, தமிழ் தமிழர் இயக்கத்தின் ஆறுமுகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இயக்கங்களின் பிரதிநிதிகளும் தமிழின உணர்வாளர்களும் போஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி பேசியதாவது:
இலங்கை யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகள் எதனையுமே சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இப்போது பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தைக்குப் போகிற சிறிலங்கா அரசாங்கம், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்தித்தான் ஆக வேண்டும். அப்படி யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்தா நிலை ஏற்பட்டால் சர்வதேசத்துக்கு ஒரு உண்மையும் தெரிய வரும். சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் சிறிலங்கா இராணுவம் இருக்கிறதா? அல்லது சிங்களப் பேரினவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்கிற அந்த உண்மை வரத்தான் போகிறது.
தமிழகத்திலிருந்து ஈழத் தமிழர்களுக்காக ஆதரவாகக் குரல் கொத்துக் கொண்டிருப்பதில் எதுவித பொருளும் இல்லை. தமிழகத்திலும் உரிமை பெற்ற தமிழர்களுக்கான தனியரசு அமைகின்ற போதுதான் ஈழத் தமிழர்களுக்கான நமது குரல் அர்த்தமுடையதாக இருக்கும் என்றார் கொளத்தூர் தா.செ. மணி.
puthinam.com
எழுச்சி நிகழ்வுப் படங்களைப் பார்க்க http://www.eelampage.com/?cn=23847
"
"
"

