01-30-2006, 07:53 AM
<b>யாழ்ப்பாணத்தில் இராணுவத்திற்கு அஞ்சி வீடுகளிற்குள் முடங்கும் மாணவர்கள்
</b>
யாழ்ப்பாணத்தில் கடந்த இரு மாதங்களாக ஏற்பட்ட நெருக்கடியான சூழ் நிலமை காரணமாக பாடசாலைக்குச்; செல்ல பிள்ளைகள் மறுத்து வரும் ஓரு நிலமை எற்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
கடந்த காலத்தில் இராணுவத்தினராலும் மற்றும் இராணுவப்புனாய்வாளர்களாலும் பரவலான முறையில் வீடுகளிலும் மற்றும் வீதிகளிலும் பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள் சுடப்பட்டும் தாக்கப்பட்டும் வந்ததையும் அவதானித்ததன் மூலம் பாதிப்படைந்த பிள்ளைகள் பாடசாலைகளுக்கு அருகாமையில் இராணுவத்தினர் இருப்பதினால் தமக்கும் அத்தகைய நிலமை ஏற்பட்டு விடும் எனக் கூறி பாடசாலைக்கு செல்ல மறுத்து வருவதாக தெரிய வருகின்றது. காலையில் பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வந்தாலும் கூட பாடசாலைக்கு அருகாமையில் நிலைகொண்டுள்ள இராணுவத்தகை; கண்டதும் வீட்டிற்குச் செல்லப் போவதாக அடம்பிடிக்கும் பிள்ளைகள் பெற்றோர்களை தங்களுடன் பாடசாலையில் நிற்கும் படி வேண்டுகின்ற நிலமையே யாழ்ப்பாணத்தில் இப்போது காணப்படுகின்றது.
குறிப்பாக பாடசாலைகள் அனைத்தின் வாசலிலும் இராணுவத்தினர் நிலைகொண்டு இருப்பதினால் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்கு பயப்படுவதுடன் பெற்றோர்களும் கூடப் பயப்படும் நிலமையே காணப்படுகின்றது. இராணுவத்தினர் தற்போதைய சூழ் நிலையிலாவது பாடசாலைச் சுற்றாடலில் இருந்து விலகி நிற்க வேண்டும் எனப் பலரும் கோரிவருகிறார்கள்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
</b>
யாழ்ப்பாணத்தில் கடந்த இரு மாதங்களாக ஏற்பட்ட நெருக்கடியான சூழ் நிலமை காரணமாக பாடசாலைக்குச்; செல்ல பிள்ளைகள் மறுத்து வரும் ஓரு நிலமை எற்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
கடந்த காலத்தில் இராணுவத்தினராலும் மற்றும் இராணுவப்புனாய்வாளர்களாலும் பரவலான முறையில் வீடுகளிலும் மற்றும் வீதிகளிலும் பெரும் எண்ணிக்கையான இளைஞர்கள் சுடப்பட்டும் தாக்கப்பட்டும் வந்ததையும் அவதானித்ததன் மூலம் பாதிப்படைந்த பிள்ளைகள் பாடசாலைகளுக்கு அருகாமையில் இராணுவத்தினர் இருப்பதினால் தமக்கும் அத்தகைய நிலமை ஏற்பட்டு விடும் எனக் கூறி பாடசாலைக்கு செல்ல மறுத்து வருவதாக தெரிய வருகின்றது. காலையில் பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வந்தாலும் கூட பாடசாலைக்கு அருகாமையில் நிலைகொண்டுள்ள இராணுவத்தகை; கண்டதும் வீட்டிற்குச் செல்லப் போவதாக அடம்பிடிக்கும் பிள்ளைகள் பெற்றோர்களை தங்களுடன் பாடசாலையில் நிற்கும் படி வேண்டுகின்ற நிலமையே யாழ்ப்பாணத்தில் இப்போது காணப்படுகின்றது.
குறிப்பாக பாடசாலைகள் அனைத்தின் வாசலிலும் இராணுவத்தினர் நிலைகொண்டு இருப்பதினால் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்கு பயப்படுவதுடன் பெற்றோர்களும் கூடப் பயப்படும் நிலமையே காணப்படுகின்றது. இராணுவத்தினர் தற்போதைய சூழ் நிலையிலாவது பாடசாலைச் சுற்றாடலில் இருந்து விலகி நிற்க வேண்டும் எனப் பலரும் கோரிவருகிறார்கள்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
"

