01-30-2006, 07:18 AM
<b>இராணுவ நடமாட்டத்தால் யாழ். மாணவர்களின் கல்வி செயற்பாட்டில் பாரிய தேக்கம் </b>
யாழ்ப்பாண குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்தினரது நடமாட்டத்தால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாரிய தேக்கம் அடைந்துள்ளன.
பாடசாலைகளின் நுழைவாயில் முன்பாக பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அச்சப்படும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்கின்றனர்.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் நகரம் தொடக்கம் தெல்லிப்பழை நுழைவாயில் வரை சிறிலங்கா இராணுவ அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் உள்ள கல்வி நிறுவனங்களின் மாணவர்களின் வருகை மிகக் குறைவானதாக இருப்பதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் மல்லாகம் மகா வித்தியாலம், மல்லாகம் விசாலாட்சி மகா வித்தியாலயம், சுன்னாகம் திருஞானசம்பந்த வித்தியாலயம், இனுவில் மத்திய கல்லுரி, கொக்குவில் தமிழ் கலப்பு பாடசாலை, கொக்குவில் இந்து கல்லூரி மற்றும் யாழ். இந்துக் கல்லூரி ஆகியவை அமைந்துள்ளன.
இதனிடையே யாழ். சுன்னாகம், கல்வியங்காடு, தெல்லிப்பழை ஆகிய பிரதேசங்களில் திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
அப்பகுதிகளில் உள்ள சிறிலங்கா காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை அவர்களும் மேற்கொள்வதில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
யாழ்ப்பாண குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்தினரது நடமாட்டத்தால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாரிய தேக்கம் அடைந்துள்ளன.
பாடசாலைகளின் நுழைவாயில் முன்பாக பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அச்சப்படும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்கின்றனர்.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் நகரம் தொடக்கம் தெல்லிப்பழை நுழைவாயில் வரை சிறிலங்கா இராணுவ அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் உள்ள கல்வி நிறுவனங்களின் மாணவர்களின் வருகை மிகக் குறைவானதாக இருப்பதாக கூறப்படுகிறது.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் மல்லாகம் மகா வித்தியாலம், மல்லாகம் விசாலாட்சி மகா வித்தியாலயம், சுன்னாகம் திருஞானசம்பந்த வித்தியாலயம், இனுவில் மத்திய கல்லுரி, கொக்குவில் தமிழ் கலப்பு பாடசாலை, கொக்குவில் இந்து கல்லூரி மற்றும் யாழ். இந்துக் கல்லூரி ஆகியவை அமைந்துள்ளன.
இதனிடையே யாழ். சுன்னாகம், கல்வியங்காடு, தெல்லிப்பழை ஆகிய பிரதேசங்களில் திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
அப்பகுதிகளில் உள்ள சிறிலங்கா காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை அவர்களும் மேற்கொள்வதில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

