01-29-2006, 09:08 AM
<b>திருமலையில் மேலதிகமாக குவிக்கப்பட்ட சிங்கள படையினர் விலக்கப்பட வேண்டும் </b>
மேலதிகமாகக் குவிக்கப்பட்டுள்ள படையினரின் கெடுபிடிகளால் தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அவர்கள் குறைக்கப்பட வேண்டுமென திருமலை சமாதானக் குழு உறுப்பினர் சிறிலங்காவின் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்காவின் பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ நேற்று திருகோணமலைக்கு விஜயத்தை மேற்கொண்டார். திருகோணமலை தலைமைப் பொலிஸ் நிலையத்தில் சமாதான குழு உறுப்பினர்களையும் மதத் தலைவர்களையும் சந்தித்து திருகோணமலை நிலவரங்கள் பற்றி கேட்டறிந்து கொண்ட போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருகோணமலையில் படையினருடைய செயற்பாடு காரணமாக பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதோடு பலர் காயமடைந்து சொத்துக்களை இழக்கின்ற நிலமையும் தோன்றியுள்ளது. படையினர் மீது தாக்குதல் மேற்கொள்வோர் கண்டறியப்படாது பொதுமக்கள் மீதே அராஜகத்தை படையினர் மேற்கொள்கின்றனர்.
கடந்த வியாழக்கிழமை அனுராதபுரச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் போது மூவினங்களையும் சேர்ந்தோர். படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
படையினரின் செயற்பாடு காரணமாக நாங்கள் அச்சம் கொண்டவர்களாகவுள்ளோம் இவை நீக்கப்பட வேண்டும். மக்கள் செறிந்துள்ள இடங்களில் உள்ளர். காவலரண்களை அமைத்தது எமக்குப் பலத்த அச்சத்தைத் தருகின்றது. எமது பகுதியில் அமைக்கப்பட்ட காவலரண்கள் அகற்றப்பட்டு பொலிசாரை சேவையில் அமர்த்த வேண்டும் என பொது மக்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரை அகற்றும் அதிகாரம் எமக்கு இல்லை ஆளுனருடனும், ஜனாதிபதியுடனும் தெரியப்படுத்தி இராணுவத்தினரைக் குறைக்கும் நடவடிக்கையை மிக விரைவில் மேற்கொள்ள முடியும் எனவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது மூவினங்களையும் சேர்ந்த 42 பேர் கலந்து கொண்டனர்.
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
மேலதிகமாகக் குவிக்கப்பட்டுள்ள படையினரின் கெடுபிடிகளால் தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அவர்கள் குறைக்கப்பட வேண்டுமென திருமலை சமாதானக் குழு உறுப்பினர் சிறிலங்காவின் பொலிஸ்மா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்காவின் பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ நேற்று திருகோணமலைக்கு விஜயத்தை மேற்கொண்டார். திருகோணமலை தலைமைப் பொலிஸ் நிலையத்தில் சமாதான குழு உறுப்பினர்களையும் மதத் தலைவர்களையும் சந்தித்து திருகோணமலை நிலவரங்கள் பற்றி கேட்டறிந்து கொண்ட போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருகோணமலையில் படையினருடைய செயற்பாடு காரணமாக பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதோடு பலர் காயமடைந்து சொத்துக்களை இழக்கின்ற நிலமையும் தோன்றியுள்ளது. படையினர் மீது தாக்குதல் மேற்கொள்வோர் கண்டறியப்படாது பொதுமக்கள் மீதே அராஜகத்தை படையினர் மேற்கொள்கின்றனர்.
கடந்த வியாழக்கிழமை அனுராதபுரச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் போது மூவினங்களையும் சேர்ந்தோர். படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
படையினரின் செயற்பாடு காரணமாக நாங்கள் அச்சம் கொண்டவர்களாகவுள்ளோம் இவை நீக்கப்பட வேண்டும். மக்கள் செறிந்துள்ள இடங்களில் உள்ளர். காவலரண்களை அமைத்தது எமக்குப் பலத்த அச்சத்தைத் தருகின்றது. எமது பகுதியில் அமைக்கப்பட்ட காவலரண்கள் அகற்றப்பட்டு பொலிசாரை சேவையில் அமர்த்த வேண்டும் என பொது மக்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரை அகற்றும் அதிகாரம் எமக்கு இல்லை ஆளுனருடனும், ஜனாதிபதியுடனும் தெரியப்படுத்தி இராணுவத்தினரைக் குறைக்கும் நடவடிக்கையை மிக விரைவில் மேற்கொள்ள முடியும் எனவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது மூவினங்களையும் சேர்ந்த 42 பேர் கலந்து கொண்டனர்.
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
"

