01-29-2006, 08:47 AM
<b>அரசாங்கத்தில் ஜி.எல்.பீரிஸ் இணைய ஜே.வி.பி. கடும் எதிர்ப்பு </b>
ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரும் மூத்த தலைவருமான ஜி.எல்.பீரிஸ், மகிந்தவின் அரசாங்கத்தில் இணைய ஜே.வி.பி.கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கொழும்பில் கடந்த செவ்வாய்க்கிழமை மகிந்தவுக்கும் ஜே.வி.பி.யினருக்கும் இடையேயான சந்திப்பில் இந்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, டல்லஸ் அலகப் பெருமா, பசில் ராஜபக்ச மற்றும் ஜே.வி.பி.யின் சோமவன்ச, டில்வின் சில்வா, விமல் வீரவன்ச, அனுரகுமார திசநாயக்க ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலில் அமைதிப் பேச்சுகளுக்கு விடுதலைப் புலிகள் ஒப்புக் கொள்வார்களா என்ற விவாதம் நடத்தப்பட்டுள்ளது.
"எரிக் சொல்ஹெய்மின் வருகையால் எதுவும் நடக்கப் போவதில்லை" என்று மங்கள சமரவீர கூறியுள்ளார். அதற்கு மறுப்புத் தெரிவித்த மகிந்த ராஜபக்ச "பொறுத்திருந்து பாருங்கள் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். எனக்கு நம்பிக்கை இருக்கு. இதே நம்பிக்கைதான் தேர்தலின் போதும் நான் வெற்றிபெறுவதில் இருந்தது. விடுதலைப் புலிகள் பேச்சுக்கு வருவார்கள்" என்று பதிலளித்துள்ளார்.
இதற்கு பதில்கூறிய மங்கள சமரவீர, "அவர்கள் மறுத்துவிட்டால் நாம் யுத்தத்திற்குச் செல்ல வேண்டியது இருக்கும்" என்று கூறியுள்ளார். அவர் யுத்தம் என்று கூறியது விடுதலைப் புலிகளுடன் அல்லவாம். ஜே.வி.பி.யுடன்தான் என்று மங்கள சமரவீர மறைமுகமாகக் கூறியுள்ளார்.
இதன் பின்னர் ஜே.வி.பி.யினரைப் பார்த்து,"நான் நிறைய பிரச்சனைகளுகு முகம் கொடுத்து வருகிறன். அவைகள் தனிப்பட்ட பிரச்சனைகள் அல்ல. நாட்டுக்கு சவாலான பிரச்சனைகள். நீங்களும் அரசாங்கத்தில் இணைந்து என்னை வலுப்படுத்தினால் நாட்டை எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு நாம் கடுமையாக முகம் கொடுக்கலாம்" என்று உணர்ச்சிவயப்பட்ட நிலையில் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேபோல் இருதரப்பினருக்கும் இடையேயான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்றும் மகிந்த கூறியுள்ளார்.
முதலாவதாக அமைச்சரவை மாற்றத்தை இருதரப்பினரும் விவாதித்துள்ளனர். ஜே.வி.பி.யினர் அரசாங்கத்தில் இணையும் நிலையில் முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை கையளிக்க தான் தயார் என்றும் அரசாங்கம் பக்கம் வருகிற ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் ஏதேனும் அமைச்சுகள் கொடுக்க வேண்டியிருக்கிறது என்றும் மகிந்த தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜே.வி.பி.யின் அனுரகுமார திசநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியினர் சிலர் அரசாங்கத்தில் இணைவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் குறிப்பிட்ட சிலர் இணைவதை நாம் எதிர்க்கிறோம்" என்றார்.
ஜி.எல். பீரிஸை குறிவைத்து அனுரகுமார திசநாயக்க கருத்துத் தெரிவிக்க அதன் பின்னர் ஜி.எல். பீரிஸ் விவாதப் பொருளாகிவிட்டார்.
"தேர்தலின் போதும் அதற்கும் முன்பும் ரணில் விக்கிரமசிங்க, மிலிந்த மொரகொட, ஜி.எல்.பீரீஸ் ஆகியோரைத்தான் இலக்கு வைத்து ஜே.வி.பி. பிரச்சாரம் செய்தது. ஜி.எல்.பீரிஸ் போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளும்போது அப்படியான அரசாங்கத்தை ஜே.வி.பி. பாதுகாக்காது" என்றும் அனுரகுமார திசநாயக்க கடிந்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த மகிந்த "ஆனால்.. ஜி.எல்.பீரீஸை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டேன்" என்று கூறியுள்ளார். "நாங்கள் இதை ஏற்க முடியாது" என்று அனுரகுமார திசநாயக்க கடுமையாகக் கூறியுள்ளார்.
அனுரகுமாரவின் கடுமைக்கு மகிந்தவும் எதிர்க்குரலில்,"நான் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவரைக் கூட அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளாமல் இருக்கிறேன். ஆனால் நீங்கள் அனைவரும் அரசாங்கத்தில் இணைய வேண்டும். ஏன் அதைச் செய்ய மறுக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து அந்தக் கூட்ட அரங்கம் நிசப்தமாகியிருக்கிறது.
ஜி.எல்.பீரிஸ், பந்துல குணவர்த்தன, சுசந்த புஞ்சிநிலமே, மனோ விஜரட்ண, எர்லெ குணசேகர, சந்திரசிறி அரியவன்ச சூரியராச்சி, ரஞ்சித் அலுவிகர, சரத் ரணவக்க, நியோமெல் பெரேரா ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அரசாங்கம் பக்கம் தாவக் கூடியவர்களாக இருப்பதாகவும் அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலை இருகட்சியினரும் இணைந்து எதிர்கொள்வது தொடர்பாகவும் ஜே.வி.பி.யுடனான கூட்டணிக்கு சந்திரிகா எப்படி முட்டுக்கட்டை போடுவார் என்பது குறித்தும் இருதரப்பினரும் விவாதித்துள்ளனர்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரும் மூத்த தலைவருமான ஜி.எல்.பீரிஸ், மகிந்தவின் அரசாங்கத்தில் இணைய ஜே.வி.பி.கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கொழும்பில் கடந்த செவ்வாய்க்கிழமை மகிந்தவுக்கும் ஜே.வி.பி.யினருக்கும் இடையேயான சந்திப்பில் இந்த எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, டல்லஸ் அலகப் பெருமா, பசில் ராஜபக்ச மற்றும் ஜே.வி.பி.யின் சோமவன்ச, டில்வின் சில்வா, விமல் வீரவன்ச, அனுரகுமார திசநாயக்க ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலில் அமைதிப் பேச்சுகளுக்கு விடுதலைப் புலிகள் ஒப்புக் கொள்வார்களா என்ற விவாதம் நடத்தப்பட்டுள்ளது.
"எரிக் சொல்ஹெய்மின் வருகையால் எதுவும் நடக்கப் போவதில்லை" என்று மங்கள சமரவீர கூறியுள்ளார். அதற்கு மறுப்புத் தெரிவித்த மகிந்த ராஜபக்ச "பொறுத்திருந்து பாருங்கள் அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். எனக்கு நம்பிக்கை இருக்கு. இதே நம்பிக்கைதான் தேர்தலின் போதும் நான் வெற்றிபெறுவதில் இருந்தது. விடுதலைப் புலிகள் பேச்சுக்கு வருவார்கள்" என்று பதிலளித்துள்ளார்.
இதற்கு பதில்கூறிய மங்கள சமரவீர, "அவர்கள் மறுத்துவிட்டால் நாம் யுத்தத்திற்குச் செல்ல வேண்டியது இருக்கும்" என்று கூறியுள்ளார். அவர் யுத்தம் என்று கூறியது விடுதலைப் புலிகளுடன் அல்லவாம். ஜே.வி.பி.யுடன்தான் என்று மங்கள சமரவீர மறைமுகமாகக் கூறியுள்ளார்.
இதன் பின்னர் ஜே.வி.பி.யினரைப் பார்த்து,"நான் நிறைய பிரச்சனைகளுகு முகம் கொடுத்து வருகிறன். அவைகள் தனிப்பட்ட பிரச்சனைகள் அல்ல. நாட்டுக்கு சவாலான பிரச்சனைகள். நீங்களும் அரசாங்கத்தில் இணைந்து என்னை வலுப்படுத்தினால் நாட்டை எதிர்நோக்கியுள்ள சவால்களுக்கு நாம் கடுமையாக முகம் கொடுக்கலாம்" என்று உணர்ச்சிவயப்பட்ட நிலையில் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேபோல் இருதரப்பினருக்கும் இடையேயான பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்றும் மகிந்த கூறியுள்ளார்.
முதலாவதாக அமைச்சரவை மாற்றத்தை இருதரப்பினரும் விவாதித்துள்ளனர். ஜே.வி.பி.யினர் அரசாங்கத்தில் இணையும் நிலையில் முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை கையளிக்க தான் தயார் என்றும் அரசாங்கம் பக்கம் வருகிற ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் ஏதேனும் அமைச்சுகள் கொடுக்க வேண்டியிருக்கிறது என்றும் மகிந்த தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜே.வி.பி.யின் அனுரகுமார திசநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியினர் சிலர் அரசாங்கத்தில் இணைவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் குறிப்பிட்ட சிலர் இணைவதை நாம் எதிர்க்கிறோம்" என்றார்.
ஜி.எல். பீரிஸை குறிவைத்து அனுரகுமார திசநாயக்க கருத்துத் தெரிவிக்க அதன் பின்னர் ஜி.எல். பீரிஸ் விவாதப் பொருளாகிவிட்டார்.
"தேர்தலின் போதும் அதற்கும் முன்பும் ரணில் விக்கிரமசிங்க, மிலிந்த மொரகொட, ஜி.எல்.பீரீஸ் ஆகியோரைத்தான் இலக்கு வைத்து ஜே.வி.பி. பிரச்சாரம் செய்தது. ஜி.எல்.பீரிஸ் போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளும்போது அப்படியான அரசாங்கத்தை ஜே.வி.பி. பாதுகாக்காது" என்றும் அனுரகுமார திசநாயக்க கடிந்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த மகிந்த "ஆனால்.. ஜி.எல்.பீரீஸை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டேன்" என்று கூறியுள்ளார். "நாங்கள் இதை ஏற்க முடியாது" என்று அனுரகுமார திசநாயக்க கடுமையாகக் கூறியுள்ளார்.
அனுரகுமாரவின் கடுமைக்கு மகிந்தவும் எதிர்க்குரலில்,"நான் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவரைக் கூட அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளாமல் இருக்கிறேன். ஆனால் நீங்கள் அனைவரும் அரசாங்கத்தில் இணைய வேண்டும். ஏன் அதைச் செய்ய மறுக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையடுத்து அந்தக் கூட்ட அரங்கம் நிசப்தமாகியிருக்கிறது.
ஜி.எல்.பீரிஸ், பந்துல குணவர்த்தன, சுசந்த புஞ்சிநிலமே, மனோ விஜரட்ண, எர்லெ குணசேகர, சந்திரசிறி அரியவன்ச சூரியராச்சி, ரஞ்சித் அலுவிகர, சரத் ரணவக்க, நியோமெல் பெரேரா ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அரசாங்கம் பக்கம் தாவக் கூடியவர்களாக இருப்பதாகவும் அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலை இருகட்சியினரும் இணைந்து எதிர்கொள்வது தொடர்பாகவும் ஜே.வி.பி.யுடனான கூட்டணிக்கு சந்திரிகா எப்படி முட்டுக்கட்டை போடுவார் என்பது குறித்தும் இருதரப்பினரும் விவாதித்துள்ளனர்.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

