01-29-2006, 08:46 AM
<b>சந்திரிகா ஆதரவாளர்களுக்காக காத்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி </b>
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தவின் அரசாங்கம் பக்கம் தாவி வரும் நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள சந்திரிகா குமாரதுங்கவின் ஆதரவாளர்களை தங்கள் கட்சிப் பக்கம் இணைக்க ஐக்கிய தேசியக் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
மேலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் அதிருப்தியாளர்களையும் தமது கட்சிப் பக்கம் இழுத்துக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டு வருகிறது.
சுதந்திரக் கட்சியில் உள்ள மகிந்தவின் அதிருப்தியாளர்களும் சந்திரிகாவின் ஆதரவாளர்களுமாகிய டிலான் பெரேரா, மகிந்தானந்த அளுதகமகே, லசந்த அலகியவன்ன, மேர்வின் சில்வா ஆகியோருடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுக்களை நடத்திவருவதாக தெரிகிறது.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அமைதி முயற்சிகளில் அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளும் தீர்மானத்தை மாத்தறை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த விஜயசேகர முன்மொழிந்துள்ளார்.
எஸ்.பி. திசநாயக்க விடுதலை செய்யப்படாமை, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீதான சித்திரவதை, ஐக்கிய தேசியக் கட்சியினரை அரசாங்கம் பக்கம் இழுத்துக் கொண்டமை ஆகிய காரணங்களுக்காக அரசுக்கான ஆதரவை விலக்குவதாக அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் எஸ்.பி. திசநாயக்கவை விடுதலை செய்ய வலியுறுத்தி எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் நாள் முதல் ஜாதிக ஹெல உறுமயவின் அதிருப்தியாளர் உடுவே தம்மலோக்க தேரர் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் மகிந்த விஜயசேகர தெரிவித்தார்.
இருப்பினும் மகிந்த விஜயசேகரவின் தீர்மானம் மீது மேலும் விவாதிக்கப்பட வேண்டியதிருப்பதாகவும் இந்த கோரிக்கைகளை அரசுக்கு நிபந்தனையாக முன்வைப்போம் என்றும் அக்கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்ததையடுத்து அத்தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தவின் அரசாங்கம் பக்கம் தாவி வரும் நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள சந்திரிகா குமாரதுங்கவின் ஆதரவாளர்களை தங்கள் கட்சிப் பக்கம் இணைக்க ஐக்கிய தேசியக் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
மேலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் அதிருப்தியாளர்களையும் தமது கட்சிப் பக்கம் இழுத்துக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டு வருகிறது.
சுதந்திரக் கட்சியில் உள்ள மகிந்தவின் அதிருப்தியாளர்களும் சந்திரிகாவின் ஆதரவாளர்களுமாகிய டிலான் பெரேரா, மகிந்தானந்த அளுதகமகே, லசந்த அலகியவன்ன, மேர்வின் சில்வா ஆகியோருடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுக்களை நடத்திவருவதாக தெரிகிறது.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அமைதி முயற்சிகளில் அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளும் தீர்மானத்தை மாத்தறை நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த விஜயசேகர முன்மொழிந்துள்ளார்.
எஸ்.பி. திசநாயக்க விடுதலை செய்யப்படாமை, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீதான சித்திரவதை, ஐக்கிய தேசியக் கட்சியினரை அரசாங்கம் பக்கம் இழுத்துக் கொண்டமை ஆகிய காரணங்களுக்காக அரசுக்கான ஆதரவை விலக்குவதாக அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் எஸ்.பி. திசநாயக்கவை விடுதலை செய்ய வலியுறுத்தி எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் நாள் முதல் ஜாதிக ஹெல உறுமயவின் அதிருப்தியாளர் உடுவே தம்மலோக்க தேரர் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் மகிந்த விஜயசேகர தெரிவித்தார்.
இருப்பினும் மகிந்த விஜயசேகரவின் தீர்மானம் மீது மேலும் விவாதிக்கப்பட வேண்டியதிருப்பதாகவும் இந்த கோரிக்கைகளை அரசுக்கு நிபந்தனையாக முன்வைப்போம் என்றும் அக்கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்ததையடுத்து அத்தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

