01-29-2006, 08:35 AM
<b>தேசிய விடுதலையை விளங்கிக்கொள்ளவேண்டும்! அதனை அமெரிக்கா ஒரு சந்தைப் பொருளாகப் பார்க்கக்கூடாது - கவிஞர் இன்குலாப் </b>
தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தினை அமெரிக்கா ஒரு சந்தைப் பொருளாகவே பார்க்கின்றது என மக்கள் கவிஞர் இன்குலாப் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அண்மையில் சிறீ லங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ள கருத்துக்களைக் கண்டித்து நேற்று தமிழகத்தில் இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை அதன் ஆழத்தையும். தாற்பரியகங்களையும் அறியாமல் அமெரிக்கா ஒரு சந்தைப் பொருளாக நினைக்கின்றது.
தேசிய இனவிடுதலை விழுமியங்களை அமெரிக்கா விழுங்கப்பார்க்கின்றது.
அமெரிக்காவின் பாதத்தின் கீழ் இருந்து லத்தீன் அமெரிக்க நாடுகள் கிளர்ந்தெழுந்துள்ளன.
அத்தோடு; உலகம் முழுவதும் விடுதலை விரும்பும் இனங்கள் ஒன்று திரண்டு நிற்கின்றன.
இதே வேளை உலகம் முழுவதும் விடுதலைப் போராட்டங்களை இடது சாரிகள் ஆதரிக்கின்றனர். இதனால் எமது தமிழர்களது போராட்டத்தினையும் இடது சாரிகள் ஆதரிக்கவேண்டும். இந்திய இடது சாரிகள் இங்கும் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, சிங்கள ரத்னா விருது பெற்ற இந்து ராமின் வழிமுறைகளைப் பின்பற்றக்கூடாது.
உண்மையில் ஒரு நாட்டில் குறைவாக வாழும் மக்கள் மீது தான் அமெரிக்கா போன்றோரின் அக்கறை காணப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே வேளை ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க தூதுவரின் அச்சுறுத்தும் உரைக்கு அதீத கண்டனம் தெரிவித்தும் அதேவேளை ஈழப்போராட்டத்திற்கு நாம் எப்போதும் ஆதரவாக பின்புலத்தில் இருப்போம் என்றும் அங்கு வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன.
சர்வதேச இடது சாரி சக்திகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் நேசக்கரம் என்ற தலைப்பில் புலிகளின் குரலில் அரசியல் ஆய்வரங்கத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் ஆற்றிய உரையின் எழுத்துவடிவமும், கியுூபாவும் தமிழீழமும் என்ற தலைப்பில் தமிழகத்தில் கியுூபா ஆதரவு மாநாட்டினை நடத்தும் இடது சாரி கட்சிகள், கியுூபாவுக்கு நேசக்கரம் நீட்டும் தமிழீழம் குறித்து அக்கறை காட்டவேண்டும் என்று துண்டுப்பிரசுரமும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரால் இந்தக் கூட்டத்தில் விநியோகிக்கப்பட்டன.
இரண்டு மணிநேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட இயங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்டு தமிழீழ விடுதலைக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாகவும், அதே நேரம் ஈழத்தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் உரையாற்றிய சிறீ சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன.
இத்தகைய ஆர்ப்பாட்டங்கள், தஞ்சையில் தமிழ்த்தேச பொதுவுடமைக்கட்சியின் பொதுச்செயலாளர். பே.மணியரசன் தலைமையிலும், மதுரையஙில் தமிழர் தேசிய இணக்க பொதுச்செயலாளர் பரந்தாமன் தலைமையிலும், கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை. கு, இராமகிஸ்ணன் தலைமையிலும் நடைபெற்றன.
எதிர்வரும் 30 ஆம் நாள் அன்று சேலத்தில் தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமையில் சிறீ லங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரின் உரையினைக்கண்டித்து கண்டன அர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது.
தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தினை அமெரிக்கா ஒரு சந்தைப் பொருளாகவே பார்க்கின்றது என மக்கள் கவிஞர் இன்குலாப் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அண்மையில் சிறீ லங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ள கருத்துக்களைக் கண்டித்து நேற்று தமிழகத்தில் இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை அதன் ஆழத்தையும். தாற்பரியகங்களையும் அறியாமல் அமெரிக்கா ஒரு சந்தைப் பொருளாக நினைக்கின்றது.
தேசிய இனவிடுதலை விழுமியங்களை அமெரிக்கா விழுங்கப்பார்க்கின்றது.
அமெரிக்காவின் பாதத்தின் கீழ் இருந்து லத்தீன் அமெரிக்க நாடுகள் கிளர்ந்தெழுந்துள்ளன.
அத்தோடு; உலகம் முழுவதும் விடுதலை விரும்பும் இனங்கள் ஒன்று திரண்டு நிற்கின்றன.
இதே வேளை உலகம் முழுவதும் விடுதலைப் போராட்டங்களை இடது சாரிகள் ஆதரிக்கின்றனர். இதனால் எமது தமிழர்களது போராட்டத்தினையும் இடது சாரிகள் ஆதரிக்கவேண்டும். இந்திய இடது சாரிகள் இங்கும் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, சிங்கள ரத்னா விருது பெற்ற இந்து ராமின் வழிமுறைகளைப் பின்பற்றக்கூடாது.
உண்மையில் ஒரு நாட்டில் குறைவாக வாழும் மக்கள் மீது தான் அமெரிக்கா போன்றோரின் அக்கறை காணப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே வேளை ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க தூதுவரின் அச்சுறுத்தும் உரைக்கு அதீத கண்டனம் தெரிவித்தும் அதேவேளை ஈழப்போராட்டத்திற்கு நாம் எப்போதும் ஆதரவாக பின்புலத்தில் இருப்போம் என்றும் அங்கு வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன.
சர்வதேச இடது சாரி சக்திகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் நேசக்கரம் என்ற தலைப்பில் புலிகளின் குரலில் அரசியல் ஆய்வரங்கத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் ஆற்றிய உரையின் எழுத்துவடிவமும், கியுூபாவும் தமிழீழமும் என்ற தலைப்பில் தமிழகத்தில் கியுூபா ஆதரவு மாநாட்டினை நடத்தும் இடது சாரி கட்சிகள், கியுூபாவுக்கு நேசக்கரம் நீட்டும் தமிழீழம் குறித்து அக்கறை காட்டவேண்டும் என்று துண்டுப்பிரசுரமும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரால் இந்தக் கூட்டத்தில் விநியோகிக்கப்பட்டன.
இரண்டு மணிநேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட இயங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்டு தமிழீழ விடுதலைக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாகவும், அதே நேரம் ஈழத்தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் உரையாற்றிய சிறீ சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன.
இத்தகைய ஆர்ப்பாட்டங்கள், தஞ்சையில் தமிழ்த்தேச பொதுவுடமைக்கட்சியின் பொதுச்செயலாளர். பே.மணியரசன் தலைமையிலும், மதுரையஙில் தமிழர் தேசிய இணக்க பொதுச்செயலாளர் பரந்தாமன் தலைமையிலும், கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை. கு, இராமகிஸ்ணன் தலைமையிலும் நடைபெற்றன.
எதிர்வரும் 30 ஆம் நாள் அன்று சேலத்தில் தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமையில் சிறீ லங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரின் உரையினைக்கண்டித்து கண்டன அர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது.
[size=14] ' '

