01-28-2006, 02:48 PM
<b>யாழில் அதிகரிக்கும் ஈ.பி.டி.பி.யினரின் அச்சுறுத்தல் </b>
யாழ். குடாவில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி. குழுவினரது அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ். ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்திலிருந்து வீதியில் செல்லும் மக்களை வீடியோ புகைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக அப்பகுதி வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நவீன வீடியோ கமராக்கள் மூலம் அலுவலகம் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், வீதியில் செல்வோர் நாளாந்தம் வீடியோ கமராக்களில் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் மற்றும் சிறீதர் திரையரங்கு அமைந்துள்ள பகுதிகளில் உயரமான மாடிக் கட்டடங்களிலும் ஈ.பி.டி.பியினர் காப்பரண் அமைத்து தமது அலுவலகத்தை படையினருடன் இணைந்து கண்காணித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தென்மராட்சிப் பிரதேசத்தில் பகல் வேளைகளில் ஈ.பி.டி.பி குழுவினர் சாதாரண உடைகளில் ஆயுதங்களுடன் சர்வசாதாரணமாக படையினருடன் நடமாடி வருவதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சாவகச்சேரி, நுணாவில், கம்புளியடி, வரணி, கொடிகாமம் பதிகளில் அவர்களின் அராஐக நடவடிக்கைகள் அதிகளவில் காணப்படுவதாக தேசப் பற்றாளர்கள் பலரை குறிவைத்து செயற்படுவதுடன் புலிகளின் ஆதரவாளர்கள் அனைவரையும் கொலை செய்வோம் என்று பல இடங்களில் அவர்கள் எச்சரித்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
<i><b> தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
யாழ். குடாவில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி. குழுவினரது அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ். ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்திலிருந்து வீதியில் செல்லும் மக்களை வீடியோ புகைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக அப்பகுதி வர்த்தகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நவீன வீடியோ கமராக்கள் மூலம் அலுவலகம் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், வீதியில் செல்வோர் நாளாந்தம் வீடியோ கமராக்களில் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் மற்றும் சிறீதர் திரையரங்கு அமைந்துள்ள பகுதிகளில் உயரமான மாடிக் கட்டடங்களிலும் ஈ.பி.டி.பியினர் காப்பரண் அமைத்து தமது அலுவலகத்தை படையினருடன் இணைந்து கண்காணித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தென்மராட்சிப் பிரதேசத்தில் பகல் வேளைகளில் ஈ.பி.டி.பி குழுவினர் சாதாரண உடைகளில் ஆயுதங்களுடன் சர்வசாதாரணமாக படையினருடன் நடமாடி வருவதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
சாவகச்சேரி, நுணாவில், கம்புளியடி, வரணி, கொடிகாமம் பதிகளில் அவர்களின் அராஐக நடவடிக்கைகள் அதிகளவில் காணப்படுவதாக தேசப் பற்றாளர்கள் பலரை குறிவைத்து செயற்படுவதுடன் புலிகளின் ஆதரவாளர்கள் அனைவரையும் கொலை செய்வோம் என்று பல இடங்களில் அவர்கள் எச்சரித்து வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
<i><b> தகவல் மூலம்-புதினம்.கொம்</b></i>
"
"
"

