01-28-2006, 07:04 AM
கடும் எதிர்ப்புக்கு இடையே கேபிள் டிவி மசோதா நிறைவேற்றம்
சென்னை, ஜன. 28: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, தனியார் கேபிள் டிவி நிறுவனங்களை அரசே ஏற்கும் மசோதா பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.
கேபிள் டிவி துறை மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறது. எனவே, இதில் சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. எல்லா கேபிள் டிவி நிறுவனங்களையும் அரசு ஏற்றால் வரவேற்கிறோம். சில குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டும் எடுப்பது பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் கூறின.
ஆளும் கட்சி தரப்பில் இதை முதல்வர் ஜெயலலிதா, சட்ட அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் மறுத்தனர். விரும்பிய சேனல்களை குறைந்த கட்டணத்தில் பொது மக்கள் பார்ப்பதற்கு வகை செய்வதற்காக இச் சட்டம் கொண்டு வரப்படுகிறது என்றனர்.
முதல் கட்டமாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாநகராட்சி பகுதிகளில் மட்டும் இச் சட்டம் அமல்படுத்தப்படும். பின்னர் படிப்படியாக எல்லா பகுதிகளிலும் அமலுக்கு வரும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.
Dinamani
சென்னை, ஜன. 28: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, தனியார் கேபிள் டிவி நிறுவனங்களை அரசே ஏற்கும் மசோதா பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.
கேபிள் டிவி துறை மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறது. எனவே, இதில் சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. எல்லா கேபிள் டிவி நிறுவனங்களையும் அரசு ஏற்றால் வரவேற்கிறோம். சில குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டும் எடுப்பது பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் கூறின.
ஆளும் கட்சி தரப்பில் இதை முதல்வர் ஜெயலலிதா, சட்ட அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் மறுத்தனர். விரும்பிய சேனல்களை குறைந்த கட்டணத்தில் பொது மக்கள் பார்ப்பதற்கு வகை செய்வதற்காக இச் சட்டம் கொண்டு வரப்படுகிறது என்றனர்.
முதல் கட்டமாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாநகராட்சி பகுதிகளில் மட்டும் இச் சட்டம் அமல்படுத்தப்படும். பின்னர் படிப்படியாக எல்லா பகுதிகளிலும் அமலுக்கு வரும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.
Dinamani
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

