01-28-2006, 02:00 AM
யாழ்பாணத்தில் காணாமல்போவோர்;
இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்படும் இவர்கள், யாழ் குடாநாட்டில் ஓரிரு புலனாய்வுப் பிரிவினரின் முகாம்களில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்களாம். குறிப்பாக நெல்லியடி, சாவகச்சேரி, தீவுப்பகுதிகளிலேயே இம் சித்திரவதை புலனாய்வாளர்களின் முகாங்கள் அமைந்திருக்கிறதாம்.
அண்மையில் வடமராட்சிப் பகுதியில் காணாமல் போனோரோ அல்லது கடத்தப்பட்டவர்களோ நெல்லியடி யாழ்வீதியில் உள்ள வடமராட்சிப் புலனாய்வுத் தலைமையகத்தில் வைத்துத்தான் சித்திரவதை செய்யப் படுகிறார்களாம். கனடாவில் வாழும் முன்னால் வர்த்தகர் ஒருவரின் வீடே இன்று சிங்களப் படைகளின் சித்திரவதை முகாமாக்கப்பட்டுள்ளதாம். பலர் சித்திரவதைகளின் பின் கொல்லப்பட்டு அருகிலுள்ள தோட்டங்களில் புதைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். குறிப்பாக அண்மையில் நெல்லியடிப் பகுதியில் கடத்தப்பட்ட தனியார் கல்வி நிலையங்களான "மொடோன் சென்ரர், சயன்ஸ் சென்ரர்" உரிமையாளர், இம்முகாமிலேயே வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாகவும், இன்றவரில் நிலை தெரியவில்லையாம்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்படும் இவர்கள், யாழ் குடாநாட்டில் ஓரிரு புலனாய்வுப் பிரிவினரின் முகாம்களில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்களாம். குறிப்பாக நெல்லியடி, சாவகச்சேரி, தீவுப்பகுதிகளிலேயே இம் சித்திரவதை புலனாய்வாளர்களின் முகாங்கள் அமைந்திருக்கிறதாம்.
அண்மையில் வடமராட்சிப் பகுதியில் காணாமல் போனோரோ அல்லது கடத்தப்பட்டவர்களோ நெல்லியடி யாழ்வீதியில் உள்ள வடமராட்சிப் புலனாய்வுத் தலைமையகத்தில் வைத்துத்தான் சித்திரவதை செய்யப் படுகிறார்களாம். கனடாவில் வாழும் முன்னால் வர்த்தகர் ஒருவரின் வீடே இன்று சிங்களப் படைகளின் சித்திரவதை முகாமாக்கப்பட்டுள்ளதாம். பலர் சித்திரவதைகளின் பின் கொல்லப்பட்டு அருகிலுள்ள தோட்டங்களில் புதைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். குறிப்பாக அண்மையில் நெல்லியடிப் பகுதியில் கடத்தப்பட்ட தனியார் கல்வி நிலையங்களான "மொடோன் சென்ரர், சயன்ஸ் சென்ரர்" உரிமையாளர், இம்முகாமிலேயே வைத்து சித்திரவதை செய்யப்பட்டதாகவும், இன்றவரில் நிலை தெரியவில்லையாம்.
" "

