01-28-2006, 12:15 AM
<img src='http://www.yarl.com/forum/files/ykj.gif' border='0' alt='user posted image'>
<b>மகனை முதல்வராக்க மீண்டும் வைகோவை பலிகடாவாக்குகிறார் கருணாநிதி!</b>
தமிழக அரசியல் மாற்றங்கள் தொடர்பாக யாழ். இணையதளம் செய்திகளை வெளியிட்டு வருகிறது.
வைகோவின் அணி மாற்றம் குறித்த செய்தியும் அதனது எதிர்வினைகளும் அறிந்தோம்.
உண்மையில் தமிழக அரசியலில் நடப்பது என்ன? கருணாநிதியிடமிருந்து வைகோ விலகுகிறாரா? வைகோவை கருணாநிதி விலக்குகிறாரா?
எனில்
வைகோவை கருணாநிதி அரவணைத்து அழிக்கிறார் என்பதுதான் உண்மை. இது யூகம் அல்ல. வைகோ கட்சி தொடங்கிய 12 ஆண்டுகாலத்தில் அவர் சந்தித்த தேர்தல்களின் வரலாறு.
சரி கடந்த காலங்களை விடுவோம்.
இப்போது..
முன் எப்போதையும் விட தி.மு.க. அணியில் பல கட்சிகள் இருப்பதால் தி.மு.க. இந்த முறை குறைந்தது 130 தொகுதிகளில்தான் போட்டியிட முடியும். 130 தொகுதிகளில் போட்டியிட்டு அந்தக் கட்சி வென்றால் முழுப் பெரும்பான்மை உள்ள கட்சியாக ஆட்சி அமைக்க முடியாது.
மாறாக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நம்பித்தான் நிற்க வேண்டும்.
<b>தன் மகன் ஸ்டாலினை முதல்வராக்கிப் பார்க்க விரும்புகிற கருணாநிதி, அந்த முதல்வர் நாற்காலி எந்தக் கூட்டணிக் கட்சியாலும் பிடுங்கிக் கொள்ளப்பட முடியாததாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்.</b>
அதனால் ஆகக் குறைந்தது 150-160 தொகுதிகளில் போட்டியிட்டு 130-140 தொகுதிகளில் வெல்வதன் மூலமே சாத்தியம் என்கிறது கருணாநிதியின் மூளை.
அப்படியால் இந்த 16 அல்லது 20 இடங்களை யாரை அகற்றி தாமே போட்டியிட முடியும்?
இந்திய அரசாங்கத்தில் உள்ளதால் காங்கிரசை அகற்றிவிட முடியாது.
வடமாவட்ட வாக்கு வங்கிக்காக பாட்டாளி மக்கள் கட்சியை காலி செய்து விட முடியாது.
ஆதலால்
ஆம்
நீங்கள் எண்ணுவது சரிதான்.
வழக்கம் போல் வைகோவை பலிகடாவாக்கிவிடலாம்.
வைகோ போனால் 10 தொகுதிகள்தானே நமக்கு தோல்வி கிடைக்கும். பிரச்சனை இல்லை என்பதாலேயே கடைசி நிமிடம் வரை அரவணைத்து காலி செய்துவிடுவது என்பதுதான் கருணாநிதியின் கணக்காக இருக்க முடியும். இருக்கிறது.
இதை உணர்ந்து கொண்டமையால்தான் என்னவோ இந்த முறை வைகோவின் கட்சியினரே "மீண்டும் பலிகடாவாகிவிடக் கூடாது" என்று தோள்தட்டி தொடைதட்டி கிளம்பிவிட்டனர்.
இன்று தமிழகத்தின் எதிர்கால அரசியல் பார்வை முழுவதும் வைகோ மீதுதான்.
வைகோ வாயைத் திறக்கப் போகிறார் என்றால் ஊடகத்தாரின் காதுகள் திறந்து கொண்டிருக்கின்றன. கருணாநிதியின் கண்கள் கூர்மைப் பார்வை பார்க்கின்றன. அண்ணா தி.மு.க.வும் இதர கட்சிகளும் என்ன சொல்லப் போகிறார் வைகோ என்பதில் அவதானமாகப் பார்க்கின்றன.
தமிழகத்திலிருந்து கிடைத்துள்ள தகவல்கள்களின் படி
வைகோவை ஆதரிக்க ஜெயலலிதா தயாராகிவிட்டதாகவும் வைகோவுக்கு விடுத்த சமிக்ஞைகளில் ஒன்றாகவே மகிந்த ராஜபக்சவையும் சந்திக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
வைகோ வெறும் 16 தொகுதிக்குத்தான் இலாயக்கானவர் என்று கருணாநிதி முத்திரை குத்தி மூலையில் வைக்கும் அதே நேரத்தில் நான் 50 அல்லது 60 தொகுதிகள் தருகிறேன் என்று நேசக்கரம் நீட்ட ஜெயலலிதாவும் தயாராகிவிட்டார்.
ஜெயலலிதாவின் இந்த நேசக்கரத்தை வைகோவால் நம்ப முடியாமல் இருக்கிறார் என்பதே உண்மை.
ஆனால் தங்களது தலைவரை சிறையிலடைத்தது ஜெயலலிதாவாகவே இருந்தாலும் கருணாநிதியிடம் சிக்கி கரைந்து கசங்கிப் போவதைக் காட்டிலும் நேர்மையான எதிரியாக இருந்த ஜெயலலிதாவோடு திறந்த மனதோடு கை குலுக்குவதை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஏதோ "விடுதலை" பெற்ற உணர்ச்சியாக உள்ளனர் என்பதே தமிழக நிதர்சனம் என்கிறது தகவல்கள்.
தமிழக அரசியலில் வைகோ 60 தொகுதிகளிலோ 50 தொகுதிகளிலோ போட்டியிடுவது என்பது ஈழத் தமிழர்களின் 60 பிரதிநிதிகள் போட்டியிடுகிறார்கள் என்பதாகவே அர்த்தம்.
தி.மு.கவைப் போல் கட்சித் தலைவர் சொல்லுகிற கருத்தைக் கூட எப்போதாவதுதான் கட்சிப் பிரதிநிதிகள் சொல்லுவார்கள்.
ஆனால் வைகோ தொண்டனுக்கும் தொண்டன். வைகோவின் ஒவ்வொரு தொண்டனும் வைகோதான். ம.தி.மு.க.வின் ஒருக்கிற ஒவ்வொரு தொண்டனும் ஈழத் தமிழர்களுக்காய் சர்வபரி தியாகத்துக்கும் தயாராக உள்ளவர்கள்.
நமக்காய் சிறையேகிய வைகோவுக்காக ஊர் முழுக்கப் போய் அதை நியாயப்படுத்திப் பேசியவர் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத். வீதி வீதியாக எங்கள் ஈழத் தமிழர்களுக்காக நாங்கள் குரல் கொடுக்காமல் யார் கொடுப்பார்கள் என்று வைகோவின் குரலாய் வலம் வந்தவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
ஆகவே தமிழகத்தின் அரசியலில் வைகோ வளர வேண்டும். அது தமிழினத்தின் நன்மைக்கானது என்பதை யாழ். தளத்திலே விவாதிப்போர் உணர வேண்டும்.
தமிழர் நலம் கருதாதோர் விமர்சிக்கட்டும். அவர்களுக்கு நேற்றைய வரலாறும் தெரியாது. இன்றைய நிகழ்வுகளும் தெரியாது. நாளைய வரலாற்றுச் சூழலும் தெரியாது.
<b>சங்கர்</b>
<b>மகனை முதல்வராக்க மீண்டும் வைகோவை பலிகடாவாக்குகிறார் கருணாநிதி!</b>
தமிழக அரசியல் மாற்றங்கள் தொடர்பாக யாழ். இணையதளம் செய்திகளை வெளியிட்டு வருகிறது.
வைகோவின் அணி மாற்றம் குறித்த செய்தியும் அதனது எதிர்வினைகளும் அறிந்தோம்.
உண்மையில் தமிழக அரசியலில் நடப்பது என்ன? கருணாநிதியிடமிருந்து வைகோ விலகுகிறாரா? வைகோவை கருணாநிதி விலக்குகிறாரா?
எனில்
வைகோவை கருணாநிதி அரவணைத்து அழிக்கிறார் என்பதுதான் உண்மை. இது யூகம் அல்ல. வைகோ கட்சி தொடங்கிய 12 ஆண்டுகாலத்தில் அவர் சந்தித்த தேர்தல்களின் வரலாறு.
சரி கடந்த காலங்களை விடுவோம்.
இப்போது..
முன் எப்போதையும் விட தி.மு.க. அணியில் பல கட்சிகள் இருப்பதால் தி.மு.க. இந்த முறை குறைந்தது 130 தொகுதிகளில்தான் போட்டியிட முடியும். 130 தொகுதிகளில் போட்டியிட்டு அந்தக் கட்சி வென்றால் முழுப் பெரும்பான்மை உள்ள கட்சியாக ஆட்சி அமைக்க முடியாது.
மாறாக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நம்பித்தான் நிற்க வேண்டும்.
<b>தன் மகன் ஸ்டாலினை முதல்வராக்கிப் பார்க்க விரும்புகிற கருணாநிதி, அந்த முதல்வர் நாற்காலி எந்தக் கூட்டணிக் கட்சியாலும் பிடுங்கிக் கொள்ளப்பட முடியாததாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்.</b>
அதனால் ஆகக் குறைந்தது 150-160 தொகுதிகளில் போட்டியிட்டு 130-140 தொகுதிகளில் வெல்வதன் மூலமே சாத்தியம் என்கிறது கருணாநிதியின் மூளை.
அப்படியால் இந்த 16 அல்லது 20 இடங்களை யாரை அகற்றி தாமே போட்டியிட முடியும்?
இந்திய அரசாங்கத்தில் உள்ளதால் காங்கிரசை அகற்றிவிட முடியாது.
வடமாவட்ட வாக்கு வங்கிக்காக பாட்டாளி மக்கள் கட்சியை காலி செய்து விட முடியாது.
ஆதலால்
ஆம்
நீங்கள் எண்ணுவது சரிதான்.
வழக்கம் போல் வைகோவை பலிகடாவாக்கிவிடலாம்.
வைகோ போனால் 10 தொகுதிகள்தானே நமக்கு தோல்வி கிடைக்கும். பிரச்சனை இல்லை என்பதாலேயே கடைசி நிமிடம் வரை அரவணைத்து காலி செய்துவிடுவது என்பதுதான் கருணாநிதியின் கணக்காக இருக்க முடியும். இருக்கிறது.
இதை உணர்ந்து கொண்டமையால்தான் என்னவோ இந்த முறை வைகோவின் கட்சியினரே "மீண்டும் பலிகடாவாகிவிடக் கூடாது" என்று தோள்தட்டி தொடைதட்டி கிளம்பிவிட்டனர்.
இன்று தமிழகத்தின் எதிர்கால அரசியல் பார்வை முழுவதும் வைகோ மீதுதான்.
வைகோ வாயைத் திறக்கப் போகிறார் என்றால் ஊடகத்தாரின் காதுகள் திறந்து கொண்டிருக்கின்றன. கருணாநிதியின் கண்கள் கூர்மைப் பார்வை பார்க்கின்றன. அண்ணா தி.மு.க.வும் இதர கட்சிகளும் என்ன சொல்லப் போகிறார் வைகோ என்பதில் அவதானமாகப் பார்க்கின்றன.
தமிழகத்திலிருந்து கிடைத்துள்ள தகவல்கள்களின் படி
வைகோவை ஆதரிக்க ஜெயலலிதா தயாராகிவிட்டதாகவும் வைகோவுக்கு விடுத்த சமிக்ஞைகளில் ஒன்றாகவே மகிந்த ராஜபக்சவையும் சந்திக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
வைகோ வெறும் 16 தொகுதிக்குத்தான் இலாயக்கானவர் என்று கருணாநிதி முத்திரை குத்தி மூலையில் வைக்கும் அதே நேரத்தில் நான் 50 அல்லது 60 தொகுதிகள் தருகிறேன் என்று நேசக்கரம் நீட்ட ஜெயலலிதாவும் தயாராகிவிட்டார்.
ஜெயலலிதாவின் இந்த நேசக்கரத்தை வைகோவால் நம்ப முடியாமல் இருக்கிறார் என்பதே உண்மை.
ஆனால் தங்களது தலைவரை சிறையிலடைத்தது ஜெயலலிதாவாகவே இருந்தாலும் கருணாநிதியிடம் சிக்கி கரைந்து கசங்கிப் போவதைக் காட்டிலும் நேர்மையான எதிரியாக இருந்த ஜெயலலிதாவோடு திறந்த மனதோடு கை குலுக்குவதை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஏதோ "விடுதலை" பெற்ற உணர்ச்சியாக உள்ளனர் என்பதே தமிழக நிதர்சனம் என்கிறது தகவல்கள்.
தமிழக அரசியலில் வைகோ 60 தொகுதிகளிலோ 50 தொகுதிகளிலோ போட்டியிடுவது என்பது ஈழத் தமிழர்களின் 60 பிரதிநிதிகள் போட்டியிடுகிறார்கள் என்பதாகவே அர்த்தம்.
தி.மு.கவைப் போல் கட்சித் தலைவர் சொல்லுகிற கருத்தைக் கூட எப்போதாவதுதான் கட்சிப் பிரதிநிதிகள் சொல்லுவார்கள்.
ஆனால் வைகோ தொண்டனுக்கும் தொண்டன். வைகோவின் ஒவ்வொரு தொண்டனும் வைகோதான். ம.தி.மு.க.வின் ஒருக்கிற ஒவ்வொரு தொண்டனும் ஈழத் தமிழர்களுக்காய் சர்வபரி தியாகத்துக்கும் தயாராக உள்ளவர்கள்.
நமக்காய் சிறையேகிய வைகோவுக்காக ஊர் முழுக்கப் போய் அதை நியாயப்படுத்திப் பேசியவர் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத். வீதி வீதியாக எங்கள் ஈழத் தமிழர்களுக்காக நாங்கள் குரல் கொடுக்காமல் யார் கொடுப்பார்கள் என்று வைகோவின் குரலாய் வலம் வந்தவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
ஆகவே தமிழகத்தின் அரசியலில் வைகோ வளர வேண்டும். அது தமிழினத்தின் நன்மைக்கானது என்பதை யாழ். தளத்திலே விவாதிப்போர் உணர வேண்டும்.
தமிழர் நலம் கருதாதோர் விமர்சிக்கட்டும். அவர்களுக்கு நேற்றைய வரலாறும் தெரியாது. இன்றைய நிகழ்வுகளும் தெரியாது. நாளைய வரலாற்றுச் சூழலும் தெரியாது.
<b>சங்கர்</b>

