01-27-2006, 08:10 AM
<b>சுடரொளிப் செய்தியாளர் எஸ்.எஸ்.ஆரின் படுகொலைக்கு திருமலை தமிழ் மகளீர் பேரவை கண்டனம் </b>
சுடரொளி நாளேட்டின் செய்தியாளர் சுகிர்தராஜனின் படுகொலைக்கு, திருகோணமலை மாவட்ட தமிழ் மகளீர் பேரவை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. (அந்த அறிக்கை முழுமையாக உள்ளே)
செவ்வாய்க்கிழமை 6.50 மணியளவில் திருக்கோணமலை உவர்மலை லோவர் வீதியில் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் அரச ஒட்டுப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தி எமக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தருகின்றது. இவரை இவரது விட்டில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மோட்டார் சைக்கிளில் வந்த இரவரினால் தலையிலும் மார்பிலுமாக இரு வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு அந்த இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இப்படுகொலையானது அதிஉயர் பாதுகாப்பு வலயமான வடக்கு கிழக்கு ஆளுநரின் அலுவலகத்திற்கு மிக அருகாமையில் ஸ்ரீ லங்காவின் இராணுவத்தினரும் பொலிசாரும் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போதும் துப்பாக்கிச் சத்தம்கெட்டிருந்தும் கொலையாளியைப் பிடிக்க எதவித முயற்சியும் எடுக்காது தப்பிச் செல்ல விடப்பட்டுள்ளனர். இதிலிருந்தே இப்படுகொலையானது ஸ்ரீலங்கா பாதுகாப்பு பிரிவினராலும் அவர்களுடன் செர்ந்து செயற்படும் ஒட்டுப்படையினராலும் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது என்பத தௌ;ளத் தெளிவாக தெரிகின்றது.
ஊடகவியாளரான சுகிர்தராஜன் திருக்கோணமலையில் தனித்துவம் மிக்க உண்மைச் செய்திகளை கண்டறிந்து துணிவுடன் வெளிப்படுத்தியவர். ஆண்மையில் திருமலைக் கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் துப்பாக்கிச் சூட்டினால்தான் உயிரிழந்தனர் என்பதை தௌ;ளத் தெளிவாக படம்பிடித்து காட்டியவர். திருக்கோணமலை மக்களின் உள்ளத்துணர்வுகளை அரச படைத்தரப்பின் அடாவடித்தனங்களை உடனுக்குடன் வெளிப்படுத்திய செயல்வீரன். இவரின் இழப்பு ஒட்டுமொத்த தமிழ் தேசியத்திற்கும் திருக்கோணமலைத் தமிழ் பேசும் மக்களுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அவரது நிறுவனத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அடுத்தடுத்து நடந்து வரும் ஊடகக் காரியாலயங்கள் தாக்கப்படுவததையும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவதையும்;. விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தப்படுவதையும் பார்க்கையில் இன்று இந்த நாட்டில் ஜனநாயக விழுமியங்கள் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட அராஜகம், சர்வாதிகாரம் தலைதூக்கி இருப்பதைத்தான் உணரக்கூடியதாக இருக்கிறது. முப்பது வயது இளம் மனைவி, குழந்தைகளான மிதுஷா வயது 04, யதுர்சன் வயது 02 ஆகிய இரு பிள்ளைகளின் தந்தை சுட்டுக்கொல்லப்பட்டதனால் இன்று அந்தக் குடும்பத்தின் கதி என்ன? இளந் தாயினதும் பிள்ளைகளினதும் எதிர்காலம் என்ன? பெண்கள் என்ற வகையில் ஒரு பெண்ணின் நிர்க்கதியான நிலையை நாம் நன்கறிவோம்.
மனிதாபிமானமற்ற இப்படுகொலையால் கொலையாளிகள் எதைச் சாதிக்க நினைக்கிறார்கள் என அவர்களையே கேட்க விரும்புகின்றோம். மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான இப்படுகொலையை திருக்கோணமலை வாழ் தமிழ் பேசும் மக்கள் சார்பாகவும் குறிப்பாக அன்னையர். மகளீர் சார்பாகவும், மிக மிக வன்மையாகக் கண்டிப்பதுடன் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் துயரத்தையும் குடும்பத் தலைவனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், இனிய நண்பனை இழந்து தவிக்கும் பத்திரிகைச் சமூகத்தினருக்கும் தெரிவித்து கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகின்றோம்.
இத்தகைய பத்திரிகையாளர் படுகொலைகள் தொடர் கதையாகி விடாது இத்துடன் முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஸ்ரீலங்கா அரசையும், அரச படைகளையும் நிர்ப்பந்திக்குமாறு சர்வதேச சமூகத்தையும், கண்காணிப்புக் குழுவையும் மிக வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
சுடரொளி நாளேட்டின் செய்தியாளர் சுகிர்தராஜனின் படுகொலைக்கு, திருகோணமலை மாவட்ட தமிழ் மகளீர் பேரவை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. (அந்த அறிக்கை முழுமையாக உள்ளே)
செவ்வாய்க்கிழமை 6.50 மணியளவில் திருக்கோணமலை உவர்மலை லோவர் வீதியில் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் அரச ஒட்டுப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற செய்தி எமக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தருகின்றது. இவரை இவரது விட்டில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மோட்டார் சைக்கிளில் வந்த இரவரினால் தலையிலும் மார்பிலுமாக இரு வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு அந்த இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இப்படுகொலையானது அதிஉயர் பாதுகாப்பு வலயமான வடக்கு கிழக்கு ஆளுநரின் அலுவலகத்திற்கு மிக அருகாமையில் ஸ்ரீ லங்காவின் இராணுவத்தினரும் பொலிசாரும் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த போதும் துப்பாக்கிச் சத்தம்கெட்டிருந்தும் கொலையாளியைப் பிடிக்க எதவித முயற்சியும் எடுக்காது தப்பிச் செல்ல விடப்பட்டுள்ளனர். இதிலிருந்தே இப்படுகொலையானது ஸ்ரீலங்கா பாதுகாப்பு பிரிவினராலும் அவர்களுடன் செர்ந்து செயற்படும் ஒட்டுப்படையினராலும் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது என்பத தௌ;ளத் தெளிவாக தெரிகின்றது.
ஊடகவியாளரான சுகிர்தராஜன் திருக்கோணமலையில் தனித்துவம் மிக்க உண்மைச் செய்திகளை கண்டறிந்து துணிவுடன் வெளிப்படுத்தியவர். ஆண்மையில் திருமலைக் கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் துப்பாக்கிச் சூட்டினால்தான் உயிரிழந்தனர் என்பதை தௌ;ளத் தெளிவாக படம்பிடித்து காட்டியவர். திருக்கோணமலை மக்களின் உள்ளத்துணர்வுகளை அரச படைத்தரப்பின் அடாவடித்தனங்களை உடனுக்குடன் வெளிப்படுத்திய செயல்வீரன். இவரின் இழப்பு ஒட்டுமொத்த தமிழ் தேசியத்திற்கும் திருக்கோணமலைத் தமிழ் பேசும் மக்களுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அவரது நிறுவனத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அடுத்தடுத்து நடந்து வரும் ஊடகக் காரியாலயங்கள் தாக்கப்படுவததையும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவதையும்;. விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தப்படுவதையும் பார்க்கையில் இன்று இந்த நாட்டில் ஜனநாயக விழுமியங்கள் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட அராஜகம், சர்வாதிகாரம் தலைதூக்கி இருப்பதைத்தான் உணரக்கூடியதாக இருக்கிறது. முப்பது வயது இளம் மனைவி, குழந்தைகளான மிதுஷா வயது 04, யதுர்சன் வயது 02 ஆகிய இரு பிள்ளைகளின் தந்தை சுட்டுக்கொல்லப்பட்டதனால் இன்று அந்தக் குடும்பத்தின் கதி என்ன? இளந் தாயினதும் பிள்ளைகளினதும் எதிர்காலம் என்ன? பெண்கள் என்ற வகையில் ஒரு பெண்ணின் நிர்க்கதியான நிலையை நாம் நன்கறிவோம்.
மனிதாபிமானமற்ற இப்படுகொலையால் கொலையாளிகள் எதைச் சாதிக்க நினைக்கிறார்கள் என அவர்களையே கேட்க விரும்புகின்றோம். மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான இப்படுகொலையை திருக்கோணமலை வாழ் தமிழ் பேசும் மக்கள் சார்பாகவும் குறிப்பாக அன்னையர். மகளீர் சார்பாகவும், மிக மிக வன்மையாகக் கண்டிப்பதுடன் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் துயரத்தையும் குடும்பத் தலைவனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், இனிய நண்பனை இழந்து தவிக்கும் பத்திரிகைச் சமூகத்தினருக்கும் தெரிவித்து கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகின்றோம்.
இத்தகைய பத்திரிகையாளர் படுகொலைகள் தொடர் கதையாகி விடாது இத்துடன் முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஸ்ரீலங்கா அரசையும், அரச படைகளையும் நிர்ப்பந்திக்குமாறு சர்வதேச சமூகத்தையும், கண்காணிப்புக் குழுவையும் மிக வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>
"
"
"

